Advertisment

Tamil News Highlights: இன்று கிறிஸ்துமஸ்: தலைவர்கள் வாழ்த்து

Today's Tamil News : பிரிட்டனில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.49 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: இன்று கிறிஸ்துமஸ்: தலைவர்கள் வாழ்த்து

Latest Tamil News : பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 2800 பேரைத் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனில் மாறுபட்ட கொரோனா வைரஸ் பரவி வரும் இந்தச் சூழலில் அங்கு மேலும் 39,237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.49 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

Advertisment

கேரளாவில் ஜனவரி 4-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வருகிற 28-ம் தேதி முதல் மாநிலத்தில் அரசு கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஆகியோர் கல்லூரிகளுக்கு வர வேண்டும் என்றும் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கல்லூரிகள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 5 மணி நேரம் வகுப்புகள் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அரசு, தேவைப்பட்டால் 2 ஷிப்ட்களாக வகுப்புகள் நடத்தலாம் என அரசு கல்லூரி நிர்வாகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

"சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தைச் சீரமைத்த நம் மக்கள் திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த மக்கள் கழகத்தினை நிறுவிய மாபெரும் புரட்சித்தலைவர். மக்களுக்கு ஈகை செய்வதற்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த நம் பொன்மனச்செம்மலின் நினைவுநாளில் அவரை நினைவு கூர்கிறேன்" என்று எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி தமிழக முதல்வர் பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளைத் தீர்க்கமாக கடைப்பிடித்தவர். பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்" என்று பெரியாரின் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Live Blog

Today Tamil News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த நேரலையுடன் இணைந்திருங்கள்



























Highlights

    21:51 (IST)24 Dec 2020

    தொ. பரமசிவன் மறைவு: கமல்ஹாசன் இரங்கல்

    தொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது ட்வீட்டில் அடங்காத் துயரம் என்று கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவிட்டார்.  

    21:47 (IST)24 Dec 2020

    பேராசிரியர் பரமசிவன் மறைவு: டிடிவி தினகரன் இரங்கல்

    தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர். தொ. பரமசிவன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுகளிலும், தமிழகத்தின் தொன்மையைப் புதிய கோணத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததிலும் மறக்கமுடியாத பணியாற்றியவர்

    இவை தொடர்பாக பேராசிரியர் பரமசிவன் அவர்கள் ஆராய்ந்து கண்டறிந்த தகவல்களும், எழுதிய நூல்களும் என்றைக்கும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும். அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.    

    21:45 (IST)24 Dec 2020

    பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளர் தொ.பரமசிவன் மரணம்

    நெல்லை மனோனன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும், பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளருமான தொ.பரமசிவன் இரவு 7.45 க்கு காலமானார். அவருக்கு வயது 70

    19:59 (IST)24 Dec 2020

    19 லட்சம் பேர் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கலாம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்கள் இல்லாத 19 லட்சம் பேர் சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    19:58 (IST)24 Dec 2020

    இரவு நேர ஊரடங்கு திரும்பப் பெறுவதாக கர்நாடகா அரசு அறிவிப்பு

    கர்நாடகாவில் இன்று முதல் வரும் 2ம் தேதி வரை அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு திரும்பப்பெறப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

    19:15 (IST)24 Dec 2020

    மு. க அழகிரி பாஜகவுடன் இணைந்தால் அதை வரவேற்பம் - எல். முருகன்

    மு. க அழகிரி பாஜகவுடன் இணைந்தால் அதை வரவேற்பம் என்று பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்தார். இதுவரை, மு. க அழகிரியுடன் பாஜக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

    19:05 (IST)24 Dec 2020

    சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை

    கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக நாளை நடைபெற உள்ள சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    19:02 (IST)24 Dec 2020

    ஸ்வசதா அபியான் (Swachhata Abhiyan) கைபேசிச் செயலி அறிமுகம்

    ஸ்வசதா அபியான் (Swachhata Abhiyan) என்னும் கைபேசிச் செயலியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. தாவர்சந்த் கெலாட் தொடங்கி வைத்தார்.

    சுகாதாரமற்ற கழிவறைகள் மற்றும் மனிதக் கழிவுகளை அகற்றுவோர் குறித்து இந்தச் செயலியின் மூலம் தகவல்கள் தெரிவிக்கலாம் என்றும், அதன் மூலம் சுகாதாரமான கழிவறை பொருத்தப்பட்டு, மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கு மறுவாழ்வு அளித்து, கண்ணியமான வாழ்க்கையை அவர்கள் வாழ வழி வகை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவரும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி உரிய தகவல்களை வழங்கவேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

    18:50 (IST)24 Dec 2020

    ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கிறிஸ்துமஸ் வாழ்த்து

    கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்தார். 

     

    18:49 (IST)24 Dec 2020

    பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை - முதுநிலை விஞ்ஞானி த.வி வெங்கடேஸ்வரன்

    கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் குறித்து பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி வெங்கடேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    18:45 (IST)24 Dec 2020

    மாஸ்டர் படத்திற்கு இந்திய தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழை வழங்கியது

    மாஸ்டர் படத்திற்கு இந்திய தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழை வழங்கியது.

    ஜனவரி 13 அன்று  படம் திரைக்கு வர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது  

    18:40 (IST)24 Dec 2020

    அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  பாராட்டு

    நடுத்தர ரக தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  பாராட்டு தெரிவித்துள்ளார்.

    18:39 (IST)24 Dec 2020

    7.5 சதவீத இடஒதுக்கீடு, சுயநிதி கல்லூரிகளில் அரசு பிரிவுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் பொருந்தும்

    மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு, சுயநிதி கல்லூரிகளில் அரசு பிரிவுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் பொருந்தும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.  

    18:37 (IST)24 Dec 2020

    "கிறிஸ்துமஸ் நாள்" அனைவரின் வாழ்விலும் மலரட்டும் - கே. எஸ் .அழகிரி

    விவசாயிகளின் துயர் மிகுந்த போராட்ட இரவுகளின் விடியலாய், பெருந்தொற்றுக் காலத்தைத் துடைத்தெறியும் அருமருந்தாய், பொருளாதாரப் பேரழிவில் இருந்து நம்மை மீட்கும் மூன்று விண்மீன்களின் புத்தொளியாய், தேவகுமாரன் பிறந்த இந்த "கிறிஸ்துமஸ் நாள்" அனைவரின் வாழ்விலும் மலரட்டும் என்று கே. எஸ் .அழகிரி தெரிவித்தார்.   

    17:25 (IST)24 Dec 2020

    கிறிஸ்துமஸ் திருநாளில் உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும் - முதல்வர் வாழ்த்து செய்தி

    கிறிஸ்துமஸ் திருநாளில் உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.  

    17:20 (IST)24 Dec 2020

    2,000 மினி கிளினிக்குகளுக்கு அரசு மருத்துவர்கள் எங்கே ? கே. எஸ் அழகிரி

    தமிழக மக்கள் தொகை 7 கோடி பேருக்கு தேவையான மருத்துவர்கள் 70,000. ஆனால் இருக்கும் அரசு மருத்துவர்களோ 18,000. தமிழக அரசின் 2,000 மினி கிளினிக்குகளுக்கு அரசு மருத்துவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்    

     " id="lbcontentbody">

    17:18 (IST)24 Dec 2020

    திமுக எம்.பி கனிமொழி தேர்தல் பரப்புரை

    'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் இன்று விருதுநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட சரஸ்வதி நகரில் தனது இல்லங்களில் பட்டாசு தயாரிப்போருடன் திமுக எம்.பி  கனிமொழி கலந்துரையாடினார். 

     

    17:16 (IST)24 Dec 2020

    கனமழை சேதம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

    பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, கனமழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த, சிதம்பரத்தில் உள்ள இளமையாக்கினார் திருக்கோவில் குளத்தின் சுற்றுச் சுவர் ரூ.2.62 கோடி மதிப்பிலும், நாகூர் தர்கா குளத்தின் நான்கு புறதடுப்புச் சுவர் ரூ.5.37 கோடி மதிப்பிலும் தமிழ்நாடு அரசால் சீரமைத்து தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 

     

    17:09 (IST)24 Dec 2020

    மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்தி வைப்பு - மாநகராட்சி ஆணையர்

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டணம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    15:56 (IST)24 Dec 2020

    2022 ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள்

    ஐ.பி.எல் தொடரில் ஏற்கனவே 8 அணிகள் விளையாடி வருகின்ற நிலையில் அணிகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த பி.சி.சி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது.

    15:12 (IST)24 Dec 2020

    அமமுகவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு உருவாக்கம்

    அமமுக கட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தலைவராக தாம்பரம் நாராயணனும் செயலாளராக நல்லதுரையும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

    15:10 (IST)24 Dec 2020

    தமிழக அரசியலில் ஊழல் இல்லை - எல். முருகன்

    தமிழக அரசியலில் ஊழல் இல்லை. திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தான் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் ஊழல் இல்லை என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேச்சு. முக அழகிரி பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என்றும் முருகன் கூறியுள்ளார்.

    15:08 (IST)24 Dec 2020

    நாகலாந்து மாநிலத்தில் நிலநடுக்கம்

    வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

    15:08 (IST)24 Dec 2020

    திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது - கனிமொழி

    திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுகைன் ஆட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது என்றும் கூறியுள்ளார்.

    14:12 (IST)24 Dec 2020

    கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க டெல்லி அரசு தயாராக உள்ளது

    இந்திய தலைநகர் பகுதியான டெல்லியில் கொரோனா தடுப்பூசியை விநியோகிக்க டெல்லி அரசு தயாராக உள்ளது என்றும், 1.15 கோடி தடுப்பூசிகளை சேமித்து வைக்க சேமிப்பு அறைகள் விரைவில் தயார் செய்யப்படும் என்றும் அரவிந்த் ஜெக்ரிவால் அறிவிப்பு.

    14:06 (IST)24 Dec 2020

    சொத்து கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயார்- கடம்பூர் ராஜூ

    சொத்து கணக்கு தொடர்பாக நான் வெள்ளை அறிக்கை வெளியிட தயார். நடிகர் கமல்ஹாசன் வெளியிட தயரா? எம்.ஜி.ஆரை பழித்து பேசிய யாரையும் தமிழகம் ஏற்றுக் கொண்டதில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

    13:45 (IST)24 Dec 2020

    குடியரசு தலைவரை சந்தித்தார் ராகுல் காந்தி

    வேளாண் சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட 2 கோடி கையொப்பங்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஒப்படைத்தார் ராகுல் காந்தி

    13:43 (IST)24 Dec 2020

    முக ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

    ஏழைகளுக்கும், அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களும் பாரபட்சமின்றி உதவிக்கரம் நீட்டி கொண்டாடப்படும் மாபெரும் மனித நேய திருவிழா என்று கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முக ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    13:41 (IST)24 Dec 2020

    ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

    ரஜினிக்கு ஏற்கனவே ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா பரிசோதனை இன்று இரவு அல்லது நாளை காலை செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

    12:54 (IST)24 Dec 2020

    அறிவிக்கும் முன் யோசிப்பதில்லையா?

    ”மின் வாரியப் பணிகளை தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்துப் போராடுவோம் என்றேன். வாபஸ் பெறபப்ட்டது.  'குப்பை கொட்டவும் வரி' அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், கழக ஆட்சி செய்யும் என்றேன். வாபஸ் பெறப்பட்டது. திட்டங்களை அறிவிக்கும் முன்பு யோசிப்பதில்லையா” என்று முக ஸ்டாலின் கேள்வி.

    12:48 (IST)24 Dec 2020

    நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டி 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்

    சமூக விரோதிகள், தீவிரவாதிகள் என்று நீங்கள் கூறும் விவசாயிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்டி மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தல்

    12:20 (IST)24 Dec 2020

    பேரணி சென்ற ராகுல், பிரியங்கா காந்தி கைது

    புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்திப் பெறப்பட்ட 2 கோடி கையொப்பங்களைக் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க, மாளிகையை நோக்கி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பேரணி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    11:55 (IST)24 Dec 2020

    ஆன்மீக அரசியல் பற்றி திருமாவளவன் கேள்வி

    தேர்தலில் போட்டியிடுவதை விட இந்த மண்ணில் காலூன்றத் துடிக்கும் சனாதனிகளை எதிர்ப்பதே நம் தலையாய கடமை என்றும் ஆன்மிகம் என்பது மதத்தோடு தொடர்புடையது, யாருடைய முகமாக இவர்கள் களத்தில் இருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

    11:51 (IST)24 Dec 2020

    அதிமுகவினர் உறுதிமொழி

    சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் வரலாற்றுச் சாதனை நிகழ்த்துவோம் என எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    10:49 (IST)24 Dec 2020

    எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி ஓபிஎஸ் ட்வீட்

    உழைப்பின் உயர்வைப் போற்றிய தொழிலாளி என எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி துணை முதலமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

    10:44 (IST)24 Dec 2020

    எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

    எம்ஜிஆரின் 33வது நினைவு நாளையொட்டி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    10:43 (IST)24 Dec 2020

    பெரியாரின் உருவப்படத்திற்குத் தலைவர்கள் மரியாதை

    பெரியாரின் நினைவுநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவருடைய உருவப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    News In Tamil : தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், குடும்பத்துக்கு ரூ.2,500 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா்.

    இதையடுத்து தைப்பொங்கல் பண்டிக்கையொட்டி ரூ.2,500 பரிசு தொடர்பான அராசணையை தமிழக அரசு வெளியிட்டது. 2.10 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கிட ரூ.5,604.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜனவரி 4-ம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Corona Virus Tamil Nadu Politics
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment