Advertisment

News Highlights: அதிமுக கூட்டணி இழுபறி; மேல்சபை எம்பி சீட் கேட்கும் தேமுதிக

Latest Tamil News Live அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
News Highlights: அதிமுக கூட்டணி இழுபறி; மேல்சபை எம்பி சீட் கேட்கும் தேமுதிக

News In Tamil Live : தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக பாஜகவுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் விடுதியில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமியும், பாஜக சார்பில் மாநில தலைவர் எல். முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் இறுதிக் கட்ட முடிவு எடுக்கப்படாததால், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகம் - புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விரும்பி விண்ணப்பம் அளித்தவர்களுடன் அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் இன்று முதல் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தவிருக்கிறார். இன்று காலை 8 மணிக்குக் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனும் மாலை 4 மணிக்கு விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் நேர்காணல் நடைபெறுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப்பங்கீடு குறித்துக் கலந்துரையாடுவதற்காக தேமுதிகவுக்கு அதிமுக மீண்டும் அழைப்புவிடுத்திருக்கிறது. இதுதொடர்பாக தேமுதிக துணை செயலாளர் எல்'கே'சுதீஷிடம் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தொலைபேசியில் பேசியுள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா,, பஞ்சாப் மற்றும் குஜராத்தில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதலிடத்தில் இருக்கும் மஹாராஷ்டிராவில் ஒரேநாளில் 8,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Live Blog

Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.



























Highlights

    21:41 (IST)02 Mar 2021

    மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடுவது தொண்டர்கள்விருப்பம் - வைகோ

    திமுக கூட்டணியில் உள்ள மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்பது தொண்டர்கள் விரும்புவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    21:09 (IST)02 Mar 2021

    பாஜகவுக்கு அதிக அளவில் வெற்றி வாய்ப்பு - கௌதமி

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில், பாஜகவுக்கு அதிக அளவில் வெற்றி வாய்ப்பு உள்ளது என கெளதமி தெரிவித்துள்ளார்.

    20:25 (IST)02 Mar 2021

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிக்குழு பட்டியல் வெளியீடு

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறவுளள நிலையில், இந்த இரு மாநிலத்திற்கும்,  தேர்தல் பணிக்குழு பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ளது.

    19:29 (IST)02 Mar 2021

    முதல்வராக தமிழிசை ஆசைப்படுகிறார் : புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

    தாமரை மலரும் என தமிழகத்தில் முதல்வராக ஆசைப்பட்ட தமிழிசை தற்போது புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்து முதல்வராக தமிழிசை ஆசைப்படுகிறார் என்று தெரிவித்துள்ள  புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி யாரிடமும் ஆலோசனை கேட்காமல் மாணவர்களுக்கு தேர்வு அறிவித்தது ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளார்.

    19:05 (IST)02 Mar 2021

    தேமுதிக மாநிலங்களவை எம்.பி. சீட் கேட்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி

    அதிமுக கூட்டணியில் தேமுதிக மாநிலங்களவை எம்.பி. சீட் கேட்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி என தகவல் நேற்று அமைச்சர் தங்கமணியுடனான பேச்சுவார்த்தையை தேமுதிக தரப்பினர் புறக்கணித்த நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

    18:40 (IST)02 Mar 2021

    அதிமுக - தேமுதிக இடையே மீண்டும் தொகுதி பேச்சுவார்த்தை

    அதிமுக - தேமுதிக தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில்,  அதிமுக சார்பில், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோரும், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    18:38 (IST)02 Mar 2021

    திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றி - கே.எஸ்.அழகிரி

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி கூறுகையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என்றும், "பேச்சுவார்த்தையில் இரு கட்சிகள் இடையே பெருமளவுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றி என்று விளக்கம் அளித்துள்ளார்.

    18:27 (IST)02 Mar 2021

    ராகுல்காந்தி ஏன் தரையில் நின்று போராட்டம் நடத்தவில்லை - குஷ்பு

    எரிபொருள் விலை உயர்வு என்றால் காங்கிரஸ் ஏன் போராட்டம் நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜகவின் குஷ்பு, கடலில் குதித்து நீச்சல் அடிக்கும் ராகுல்காந்தி ஏன் தரையில் நின்று போராட்டம் நடத்தவில்லை? என கேட்டுள்ளார்.

    18:25 (IST)02 Mar 2021

    ஜோசியத்தை நம்பி மகனை கொலை செய்த தந்தை

    திருவாரூர் நன்னிலத்தில்  ஜோசியத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு தனது மகனால் உயிருக்கு ஆபத்து என நம்பி மதுபோதையில் தனது 4 வயது மகனை எரித்துக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

    18:24 (IST)02 Mar 2021

    அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல்

    தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல்; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 24 முதல் 26 தொகுதிகள் வரை ஒதுக்க வாய்ப்பு 

    17:45 (IST)02 Mar 2021

    உ.பி பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து

    நீங்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு, அரசு ஏன் கல்வி கொடுக்க வேண்டும் என உ.பி பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

    17:44 (IST)02 Mar 2021

    தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கருத்து

    தமிழகத்தில் மக்கள் தரும் வரவேற்பை பார்க்கும்போது பாஜவுக்கு பலம் கூடியுள்ளதாக தெரிகிறது என பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். 

    17:42 (IST)02 Mar 2021

    தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக காங்கிரஸ் பேச்சுவார்த்தை

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.எல்.ஏ. ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

    17:40 (IST)02 Mar 2021

    பாஜக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம்

    அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து, 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில்  பாஜக தலைமை அலுவலகத்தில் கிஷன் ரெட்டி, எல்.முருகன், அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். 

    17:39 (IST)02 Mar 2021

    திமுகவின் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு

    சட்டசபை தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், தபால் வாக்களிக்கும் நபர்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும்,  80 வயது நிறைவடைந்தவர்கள் யார் என எப்படி தெரியும்? என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் திமுக மீது பாஜக தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது" என்றும் தெரிவித்தனர்.

    16:58 (IST)02 Mar 2021

    வன்னியர்கள் 10.5% உள் ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

    வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்காலிக சட்டத்தின் அடிப்படையில், எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தென் நாடு மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

    16:10 (IST)02 Mar 2021

    பணப் பட்டுவாடா - கட்டுப்பாட்டு அறை திறப்பு

    சட்டப்பேரவை தேர்தலில் கணக்கில் வராத பணம் பிடிபடும் விவகாரம் குறித்து புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி, கட்டுப்பாட்டு அறை திறந்துள்ளதாக என வருமான வரித்துறை அறிவிதுள்ளது.

    புகார்களை தெரிவிக்க 1800 425 6669 என்ற இலவச தொலைபேசி எண்ணும், 94453 94453 என்ற வாட்ஸாப் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. 

    15:35 (IST)02 Mar 2021

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 7ஆம் தேதி தமிழகம் வருகை

    எதிர் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக பரப்புரை மேற்கொள்வதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 7ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். அதோடு நாகர்கோவிலில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார். அவரைத் தொடர்ந்து மார்ச் 10ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வருகிறார்

    15:33 (IST)02 Mar 2021

    நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

    இயக்குனர் செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படம் மார்ச் -5 ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.  

    15:01 (IST)02 Mar 2021

    அதிமுக - பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு, பாஜக போட்டியிடும் தொகுதிகள் நாளை அறிவிப்பு?

    அதிமுக - பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும், பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியலும் நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    14:49 (IST)02 Mar 2021

    நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்ற நடிகர் மாதவனின் மகன்

    லட்வியன் ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் வென்று அசத்தியுள்ளார் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த். 

    14:12 (IST)02 Mar 2021

    அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார் - டிடிவி தினகரன்

    "கூட்டணி பற்றி சில கட்சிகளுடன் பேசி வருகிறோம், கூட்டணி முடிவானதும் அறிவிப்போம், எங்களின் ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்பதுதான், மற்றும் அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார்" என்று டிடிவி தினகரன் 

    13:48 (IST)02 Mar 2021

    அ.தி.மு.க-பா.ஜ.க இடையே இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை

    சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு 25 முதல் 30 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    13:19 (IST)02 Mar 2021

    மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டாம் - சத்யபிரத சாஹு

    "ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும்படைகள், 3 நிலை கண்காணிப்பு குழு, வீடியோ குழு, கணக்கெடுப்பு குழு செயல்படும்.மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார் 

    13:04 (IST)02 Mar 2021

    கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கமல்ஹாசன்

    சென்னை தனியார் மருத்துவமனையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்

    13:01 (IST)02 Mar 2021

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர ஆலோசனை

    சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறனர். இதில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்த முதல் சுற்று பேச்சுவார்த்தை நடந்து முடிந்த நிலையில், தற்போது 2ம் சுற்று பேச்சுவார்த்தை நடத்த இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    12:58 (IST)02 Mar 2021

    அமமுக-அதிமுக இணைப்பு குறித்த யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது – டிடிவி.தினகரன்

    சட்டப்பேரவை தேர்தலில் அமமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் அமமுக-அதிமுக இணைப்பு குறித்த யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்றும் டிடிவி.தினகரன் தெரிவித்திருக்கிறார்.

    12:47 (IST)02 Mar 2021

    வைகோ மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு

    ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து பேசியிருக்கிறார். தொகுதி பங்கீடு விவகாரத்தில் சமாதானப்படுத்த முயற்சி என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    12:46 (IST)02 Mar 2021

    தி.மு.க- இந்திய கம்யூனிஸ்ட் நாளை மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை

    திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அவசர ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது. மேலும், நாளை மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது.

    12:14 (IST)02 Mar 2021

    அதிமுக - தேமுதிக கட்சிகள் இன்று மாலை பேச்சுவார்த்தை

    அதிமுக - தேமுதிக கட்சிகள் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றன. சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று மீண்டும் ஆலோசனை நடைபெறவுள்ளது.

    12:13 (IST)02 Mar 2021

    மார்ச் 7-ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    மக்கள் நீதி மய்யம் சார்பில் 2-வது நாளாக இன்று கமல்ஹாசன் தலைமையிலான குழு, வேட்பாளர் நேர்காணல் நடத்துகிறது. திருச்சி,புதுக்கோட்டை, நெல்லை, உள்பட 7 மாவட்டத்தினரிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது. மேலும், மார்ச் 7-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமல். சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட கமல் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    11:25 (IST)02 Mar 2021

    வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது கடினம் - நீதிபதிகள்

    ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெற உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது.

    11:23 (IST)02 Mar 2021

    மக்கள் நீதி மய்யம் நேர்காணல்

    மக்கள் நீதி மய்யம் சார்பில் 2-வது நாளாக இன்று வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    11:23 (IST)02 Mar 2021

    தி.மு.க உடனான மார்க்சிஸ்ட் கட்சியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு

    தி.மு.க உடனான தொகுதி பங்கீட்டில் மார்க்சிஸ்ட் கட்சி 12 தொகுதிகள் வரை கேட்பதாகவும் தி.மு.க தரப்பில் 5 தொகுதிகள் வழங்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    10:55 (IST)02 Mar 2021

    நாளை மறுதினம் அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணல்

    அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் நாளை மறுதினம் அ.தி.மு.க வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என அறிவித்திருக்கின்றனர்.

    10:54 (IST)02 Mar 2021

    காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு என தகவல்

    தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமுக முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 18 இடங்கள் என்று ஆரம்பித்த பேச்சுவார்த்தையில், தற்போது 24 இடங்கள் வரை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. வருகிற 6,7 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் நேர்காணல் இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருக்கிறார்.

    10:19 (IST)02 Mar 2021

    10 கோடி ஃபாலோயர்கள் பெற்ற முதல் இந்தியர் விராட் கோலி

    இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்களை கடந்த முதல் இந்தியர் எனும் சாதனை படைத்திருக்கிறார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அவருக்கு அடுத்தபடியாக 6 கோடி ஃபாலோயர்களை கொண்டு பிரியங்கா சோப்ரா இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

    10:14 (IST)02 Mar 2021

    மத்திய பிரதேச எம்.பி. நந்த்குமார் உயிரிழப்பு

    மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா தொகுதி பாஜக எம்.பி. நந்த்குமார் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

    10:14 (IST)02 Mar 2021

    நாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த சேனல் உருவாக்கம்

    நாடாளுமன்றத்திற்கென ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா டிவிகளை ஒன்றிணைந்து சன் சத் எனும் புதிய சேனலை உருவாகியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்கவை நிகழ்வுகள் அனைத்தும் இந்த சேனலில் ஒளிபரப்பப்படும்.

    Tamil News Today : தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கு முன்பே உறுதியாகிவிட்டாலும், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட் என்பது பெரிய விவாதமாக அரசியல் களத்தில் தொடர்ந்து வந்தது.

    திமுக கூட்டணியில் இடம்பெற்ற மனித நேய மக்கள் கட்சியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு எத்தனை இடங்கள் அளிக்கப்படும் என்ற கேள்விகளும் எழுந்தன. இந்த நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனுடனும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுடனும் இன்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் திமுக ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்களும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களும் கூட்டணி தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    Bjp Admk Tamil Nadu Politics
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment