News Today : 7 பேர் விடுதலை பிரச்னைக்காக ஜனாதிபதியை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்தால், திமுக எம்.பி.க்களையும் அனுப்பத் தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் 72ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம்.
தமிழக சட்டமன்ற தேர்தல்: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சொத்துக்குவிப்பு வழக்கு: இன்று விடுதலையாகிறார் இளவரசி. விழுப்புரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க இன்று சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது .
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பந்துவீசுகிறது இந்திய அணி.சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு துவங்கும் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி புதிய கட்டண விவரங்களை அறிவித்தது அரசு. பிப்ரவரி 8ஆம் தேதி கல்லூரிகளை திறப்பதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்கோரிய வழக்கு தள்ளுபடி.
ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவே உண்மையானது; உறுப்பினரே இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது, காவல் துறை மூலம் சசிகலாவுக்கு தெரிவிக்கிறோம்”; அதிமுக நிர்வாகிகள் கூட்டாகப் பேட்டி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
.
Live Blog
Tamil News Live : தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
விவசாய பயிர் கடன் தள்ளுபடி என்ற முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த். கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், நல்ல எதிர்காலத்தையும் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், "புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் எவ்வாறு பார்க்கின்றனர் என்று அறிவதற்காவும், அவர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காகவும் அவர்களோடு 2 மாதங்கள் செலவிட்டேன். அங்கு எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்த சட்டங்கள் விவசாயிகளை எவ்வாறு எதிர்மறையாக பாதிக்கின்றன என்று இதுவரை யாரும் என்னிடம் சொல்லவில்லை. விவசாயிகளின் நலனை உறுதி செய்வதில் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் முக்கிய பங்காற்றுகின்றது. அதோடு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவும் மற்றும் எதிர்ப்பும் தெரிவித்து பலர் குரல் எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. அரசு மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும், புதிய சட்டங்களை ஏற்க விவசாயிகளை கட்டாயப்படுத்துவது தற்கொலைக்கு சமம். மக்கள் அவர்களின் உரிமைகளுக்காக எதிர்ப்பு தெரிவிப்பது ஜனநாயகம். அவர்களை “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நம்மை படைத்தவனும் மகிழ்வான்” என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தில் 8 முக்கிய மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி தண்டனையை அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்; பிரிவு 304-ல் வரதட்சணை தொடர்பான குற்றத்திற்கு தண்டனையை 10 ஆண்டாக மாற்ற திட்டம்
காவலர்களை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைத்த வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் அனைத்தும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பிறகு திரும்பப் பெறப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யபடுவதாக அறிவித்து, ஏழை எளிய விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றிய அம்மாவின் அரசிற்கு மனமார்ந்த நன்றி! @AIADMKOfficial. #ADMK #assembly #Tamilnadu #agricultureloan pic.twitter.com/fE1VZtJx3A
— P.Ravindhranath (@OPRavindranath) February 5, 2021
தேர்தலுக்காக நாடகம் ஏதும் நடத்தாமல் முதல்வர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடியரசுத் தலைவரை நாளைக்கே சந்திக்க முதலமைச்சர் சென்றாலும், திமுக எம்.பி.க்களும் உடன் வர தயார் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவிப்பு.
விவசாயிகளை “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்!
people have the right to protest.
Government should protect the interest of the people,
Forcing farmers to accept the new laws is suicide.
People
Protesting for their rights and is democracy. அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்...— G.V.Prakash Kumar (@gvprakash) February 5, 2021
விவசாயிகளுக்கு ஆதராவாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ் ட்வீட் செய்துள்ளார்.
I still #StandWithFarmers and support their peaceful protest.
No amount of hate, threats or violations of human rights will ever change that. #FarmersProtest https://t.co/5VwwBSDXu0— Meena Harris (@meenaharris) February 4, 2021
பேரறிவாளனின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும். உச்சநீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் வாயிலாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தகவல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights