Tamil News Today: கொரோனா உலகம் முழுவதும் எண்ணற்ற பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் 39,002 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,63,170 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 806 பேர் உயிரிழந்துள்ளதால் அங்கு பலி எண்ணிக்கை 1,24,279 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,56,183-லிருந்து 4,73,105 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685-லிருந்து 2,71,697 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,476-லிருந்து 14,894 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதித்த 1,86,514 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டங்கள் இடையே இ- பாஸ் கட்டாயம்: லேட்டஸ்ட் அப்டேட்ஸ்
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு 16,922 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் 24 மணி நேரத்தில் 418 பேர் உயிரிழந்துள்ளனர். 13,012 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று மதுரை பரவை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் பரவிய கொரோனா தொற்றால், 2000 பேரை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் மாவட்ட எல்லையில் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. வேலூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil nadu news : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா பகுதிகளில் போதிய விலை கிடைக்காததால் வெண்டைக்காய்களை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. சந்தைக்கு கொண்டு செல்லப்படும் வெண்டகாய் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், பெரும் நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நாளை முதல் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்ளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘மருத்துவக் கருவிகள் வாங்க தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி’
கொரோனா தடுப்பு மருத்துவக் கருவிகள் வாங்க தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
*ஏப்ரல் மாதத்தில் இருந்து தமிழகத்துக்கு ரூ.6,600 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது
திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூரில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், புதுக்கோட்டை எல்லைக்குள் நுழையும் வாகனங்களை சோதித்து, இ-பாஸ் இருந்தால் மட்டுமே அவர்களை உள்ளே அனுமதிக்கின்றனர். இ-பாஸ் இல்லாத பட்சத்தில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.ஆனால் இரு மாவட்ட எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் நடந்து சென்று பயணிகள் பேருந்தில் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது
* தமிழகத்தில் மேலும் 3,509 பேருக்கு கொரோனா
* முதல் முறையாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது
* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆக உயர்வு
* தமிழக சுகாதாரத்துறை தகவல்
அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார், முதலமைச்சர் பழனிசாமி
அத்திக்கடவில் இருந்து அவிநாசி வரை நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டு செல்ல திட்டம்
* குடிநீர் உள்ளிட்ட பலன்கள் மக்களுக்கு கிடைக்கும்
* திட்டத்தின் மூலம் ஏராளமான ஏரிகள், குளங்களை பவானி ஆற்று நீரால் நிரப்பவும் திட்டம் - முதலமைச்சர்
கோவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, “கொரோனா தடுப்பு நடவடிக்கை சரியாக இல்லை என ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு சுமத்துகிறார். கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான கருத்தை ஸ்டாலின் கூறவில்லை. கொரோனா பரவலை தடுக்க என்ன ஆலோசனை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் முலம் சேலம் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரகள் மொத்தம் 280 பேர் உள்ளனர். அதே போல, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 55 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி: கோவையில் அரசு திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழிற்துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து வசதிகளையும் கொண்ட மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. அரசு அறிவித்த திட்டப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், கோவையில் தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அரசு எடுத்த நடவடிக்கையால் கோவையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. பொதுப்பணித் துறை சார்பாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் முகக்கவசம் அணியாமலும், உரிய அனுமதி இல்லாமலும் காரில் சுற்றியதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ராபின்சிங் மீது சென்னை சாஸ்திரி நகர் போக்குவரத்துப் பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் விடுதலையான கவுசல்யாவின் தந்தை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல். விடுதலைக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டால் தனது கருத்தை கேட்காமல் முடிவெடுக்கக்கூடாது என சின்னசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
புகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். உடல்நல பாதிப்புக்கு பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
”சென்னையில் வீடு வீடாக சென்று அடிப்படை மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாகவும், நாளொன்றுக்கு 3,500 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது எனவும், கொரோனா தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது” எனவும்சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை சிஐடி காலனியில் உள்ள கனிமொழி எம்பி வீட்டிற்கான போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்கு போலீசார் தேவை என்பதாலும், கனிமொழிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதாலும் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டதாக போலீஸ் விளக்கம்
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில், உடல்களை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளத்தில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றனர், உறவினர்கள். காவலர்கள் மீது கொலை வழக்கை அரசு பதிவு செய்யும் என ஜெயராஜின் மகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த மேலும் ஒரு விசாரணைக்கைதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிறையில் விசாரணைக்கைதிகளாக இருந்த தந்தை மகன் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ராயபுரம் மண்டலத்தில் 7,000-ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு. ராயபுரம் - 6837, தண்டையார்பேட்டை - 5531, தேனாம்பேட்டை - 5316 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அண்ணா நகர் - 4922, கோடம்பாக்கம் - 4908, திரு.வி.க. நகர் - 3896, அடையாறு - 2777, திருவொற்றியூர் - 1755, மாதவரம் - 1383, ஆலந்தூர் - 1124 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights