Advertisment

Tamil News Today: நீட் தேர்வு ரத்தாகுமா? அதிகரிக்கும் கொரோனா மரணம் - டாப் நியூஸ் ஹைலைட்ஸ்

Tamil News Live updates : தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
New Update
Engineering arrear exam

Tamil News Today Updates: ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேக மூட்டமாக காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்.அரபி கடலின் மேற்கு பகுதியில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதால், இன்று வரை மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ-க்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எதிர்கட்சிகள் மீது பாய்ந்த அரசு, குட்கா விற்பனையை கட்டுப்படுத்துவதில் பதுங்கிவிட்டது என தமிழக அரசை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil Nadu News Today Updates

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:27 (IST)26 Aug 2020

    Accenture நிறுவனம் திட்டம்

    இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய Accenture நிறுவனம் திட்டம்.

    வேலை பறிபோகும் அபாயத்தால் ஐடி துறையினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

    22:14 (IST)26 Aug 2020

    விபரீத முடிவாகும்

    கொரோனா காலத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவது விபரீத முடிவாகும்

    மத்திய அரசின் முடிவால் நாட்டில் ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை காலம் தான் சொல்லும்

    - சுப்பிரமணியன் சுவாமி

    21:50 (IST)26 Aug 2020

    துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை ஆய்வு

    கோயம்பேடு காய்கறி சந்தையை மீண்டும் திறப்பது தொடர்பாக துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை ஆய்வு

    ஆய்வுக்கு பின் தலைமைச் செயலகத்தில் வணிகர் சங்கங்களுடன் துணை முதல்வர் ஆலோசனை

    21:50 (IST)26 Aug 2020

    வேண்டியதைச் செய்யுங்கள்

    நீட் தேர்வை கைவிடக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறாராம் அமைச்சர் விஜயபாஸ்கர்

    ஏமாற்றுவதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்

    - மு.க.ஸ்டாலின் ட்வீட்

    21:49 (IST)26 Aug 2020

    கூடுதல் ஆணையருக்கு கொரோனா

    சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது

    தொற்று உறுதியானதை அடுத்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கூடுதல் ஆணையர் அனுமதி

    21:26 (IST)26 Aug 2020

    முதல்வர் பழனிசாமி ஆய்வு

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆய்வு.

    முதல்வரின் நாளைய ஆய்வுக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுக்கவில்லை என திமுக எம்.எல்.ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு.

    21:00 (IST)26 Aug 2020

    5 பேர் கொண்ட குழு

    மத்திய அரசின் முக்கிய, அவசர சட்டங்களை ஆராய்ந்து காங்கிரஸ் நிலைப்பாட்டை உருவாக்க முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு

    * குழுவில் ப.சிதம்பரம், திக்விஜய் சிங், அமர்சிங், கவுரவ் கோகாய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

    20:36 (IST)26 Aug 2020

    நீட் தேர்வை தவிர்க்க வேண்டும்

    நீட் தேர்வை கைவிடக்கோரி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்

    கொரோனாவை கருத்தில் கொண்டு நடப்பாண்டு நீட் தேர்வை தவிர்க்க வேண்டும்

    - அமைச்சர் விஜயபாஸ்கர்

    20:10 (IST)26 Aug 2020

    நடந்தாய் வாழி காவிரி திட்டம் - ஆய்வு பணியை தொடங்கியது வேப்காஸ் நிறுவனம்

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து பூம்புகார் வரையிலான சுமார் 303 கிலோ மீட்டர் நீளம் கொண்ட காவிரி ஆற்றில் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசு 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள வேப்காஸ் நிறுவனம் சார்பில் தற்போது 3 பேர் கொண்ட குழு மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு அறிக்கையைதமிழக அரசிடம் ஒப்படைக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    19:51 (IST)26 Aug 2020

    ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை

    கோவாவில் இந்த ஆண்டு 19,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுதினர். ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. கோவா பொது நுழைவுத் தேர்வு கூட வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதே முறையில் JEE & NEET-ஐயும் நடத்த முடியும்

    - கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

    19:29 (IST)26 Aug 2020

    உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்

    நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    19:18 (IST)26 Aug 2020

    23 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா

    "பஞ்சாபில் வரும் 28ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக 117 எம்.எல்.ஏக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அமைச்சர்கள் உட்பட இதுவரை 23 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது"

    - முதல்வர் அமரீந்தர் சிங்

    19:01 (IST)26 Aug 2020

    தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ASI) உத்தரவு

    திருச்சியை புதிய தொல்பொருள் வட்டமாக அறிவித்து இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ASI) உத்தரவு!

    திருச்சி, ராஜ்கோட் (குஜராத்), ஜபல்பூர் (ம.பி), ஜான்ஸி, மீருட் (உ.பி), ராய்கன்ச் (மேற்கு வங்கம்), ஆகிய 6 புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ASI அறிவிப்பு.

    19:01 (IST)26 Aug 2020

    SPB குறித்து நடிகர் அர்ஜூன் கருத்து!

    “இனிமே ஒருவர் பிறந்து வந்தாலும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போல சாதிக்க முடியாது; கோடிக்கணக்கான மக்கள் அவருக்காக பிரார்த்திக்கிறார்கள்; விரைவில் குணமடைந்து வாருங்கள் உங்கள் பாடல்களை ரசிக்க காத்திருக்கிறோம்”

    - நடிகர் அர்ஜூன்

    18:59 (IST)26 Aug 2020

    கொரோனா - மாவட்ட வாரியான இன்றைய பாதிப்பு

    அரியலூர் -44

    செங்கல்பட்டு -294

    சென்னை - 1,290

    கோவை -484

    கடலூர் -286

    தர்மபுரி - 36

    திண்டுக்கல் -37

    ஈரோடு -102

    க.குறிச்சி -78

    காஞ்சிபுரம் -329

    குமரி -159

    கரூர் -32

    கிருஷ்ணகிரி -33

    மதுரை -31

    நாகை -84

    நாமக்கல் -70

    நீலகிரி-4

    பெரம்பலூர்-18

    புதுக்கோட்டை-143

    ராமநாதபுரம்-39

    ராணிப்பேட்டை-121

    சேலம்-451

    சிவகங்கை-18

    தென்காசி-98

    தஞ்சை-123

    தேனி- 184

    திருப்பத்தூர்-56

    திருவள்ளூர்-280

    தி.மலை-58

    திருவாரூர்- 105

    தூத்துக்குடி-105

    நெல்லை-156

    திருப்பூர்-97

    திருச்சி-83

    வேலூர்-158

    விழுப்புரம்-189

    விருதுநகர்-79

    18:55 (IST)26 Aug 2020

    எஸ்.பி.பி. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

    பாடல்களை கேட்கிறார், பாட முயற்சிப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் - எஸ்பிபி சரண்

    2 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட இன்று எஸ்.பி.பி. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

    18:31 (IST)26 Aug 2020

    1,290 பேருக்கு கொரோனா

    சென்னையில் மேலும் 1,290 பேருக்கு கொரோனா பாதிப்பு

    சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,668 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    18:25 (IST)26 Aug 2020

    5,958 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் புதிதாக 5,958 பேருக்கு கொரோனா பாதிப்பு.

    மொத்த பாதிப்பு 3,97,261 ஆக உயர்வு.

    தமிழகத்தில் மேலும் 118 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

    அதிகபட்சமாக சென்னையில் 20, கோவையில் 10, காஞ்சிபுரம் & சேலத்தில் தலா 8 பேர் உயிரிழப்பு.

    மாநிலம் முழுவதும் உயிரிழப்பு எண்ணிக்கை 6,839 ஆக உயர்ந்தது.

    18:16 (IST)26 Aug 2020

    2,476 பேருக்கு கொரோனா

    கேரளாவில் இன்று புதிதாக 2,476 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 22,344 ஆக உயர்ந்தது

    18:05 (IST)26 Aug 2020

    உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஆணையர், தலைமை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

    அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பணி நியமனங்களில் முறைகேடு புகார் - விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனுதாக்கல்.

    18:04 (IST)26 Aug 2020

    அனுமதி வழங்க பின்பற்றப்படும் நடைமுறை என்ன?

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புச் சட்டத்தின்கீழ் புகாரை விசாரிக்க அனுமதி வழங்க பின்பற்றப்படும் நடைமுறை என்ன?

    உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

    அரசு அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார் மீது தனிநபர்கள் அனுமதி பெற என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது ?

    18:04 (IST)26 Aug 2020

    தேர்வுகள் திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும்

    நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி கட்டாயம் நடைபெறும்

    * தேர்வு எழுத வருவதற்கு மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்

    * தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு மையங்கள் தயாராக உள்ளன

    - தேசிய தேர்வு முகமை இயக்குநர் வினித் ஜோஷி

    17:40 (IST)26 Aug 2020

    செ.17ஆம் தேதி தரவரிசைப் பட்டியல்

    பி.இ. படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செ.17ஆம் தேதி வெளியிடப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    17:32 (IST)26 Aug 2020

    சூர்யாவிற்கு எதிரான பிரச்சனை

    அவர் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில், திரைப்படத்தில் சம்பாதித்ததை, திரைத்துறையிலே முதலீடு செய்வது ஒருசிலரே என்று கூறியுள்ளார்.

    அதில் நடிகர் சூர்யா குறிப்பிடத் தகுந்தவர் என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

    ஓடிடி எதிரான பிரச்சனை சூர்யாவிற்கு எதிராக திருப்பப்பட்டுள்ளதாகவும், இதற்கு பின்னணியில் உள்ள அரசியலை நானும் அறிவேன், நீங்களும் அறிவீர்கள் என்று கூறியுள்ளார்.சூர்யாவை மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள், மனம் வலிக்கிறது என்று கூறியுள்ள பாரதிராஜா, தனிநபர் இடைவெளியுடன் காண, ஓடிடி சிறந்த தளமாக இருக்கும் என்ற நல்லெண்ணத்தில், சூர்யா இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம் என்று கூறியுள்ள பாராதிராஜா, தயாரிப்பாளர்கள், தியேட்டர்உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே, வாருங்கள், பேசித்தீர்ப்போம் என அழைப்பு விடுத்துள்ளார்.

    17:26 (IST)26 Aug 2020

    சென்னையில் மழை

    சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    17:25 (IST)26 Aug 2020

    தமிழகத்தின் பல இடங்களில் மழை

    திருவாரூர்: அடியக்கமங்கலம், கங்களாஞ்சேரி, மாங்குடி, அம்மையப்பன் உள்ளிட்ட பகுதிகளில் மழை

    புதுக்கோட்டை: அறந்தாங்கி, திருமயம், திருவரங்குளம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை

    தேனி: பெரியகுளம், கும்பக்கரை, சோத்துப்பாறை அணை, முருகமலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை

    16:46 (IST)26 Aug 2020

    செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு

    பண மோசடி வழக்கில் இருந்து திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  

    15:50 (IST)26 Aug 2020

    நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின்  விவரம்

    மொத்த கொரோனோ பாதிப்பு நோயாளிகள் 32,34,474

    * குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 24,67,758

    * பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,76,51,512

    14:31 (IST)26 Aug 2020

    சூரரைப் போற்று ஓடிடி ரிலீஸ் தொடர்பாக இயக்குனர் பாரதி ராஜா செய்திக் குறிப்பை வெளியிட்டார். 

    சூரரைப் போற்று ஓடிடி ரிலீஸ் தொடர்பாக இயக்குனர் பாரதி ராஜா செய்திக் குறிப்பை வெளியிட்டார். 

     

    14:29 (IST)26 Aug 2020

    குட்கா ஊழல் தொடர்பான பல சந்தேகங்கள் களையப்பட வேண்டும் - ஸ்டாலின் கோரிக்கை

    மக்களின் உயிரைக் குடிக்கும் 'குட்கா ஊழலில்' அ.தி.மு.க. அரசுக்கும் - மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள இந்த ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும்.   பொதுமக்கள் மத்தியில், இதில் உள்ள பங்குப் பரிவர்த்தனை தொடர்பாக நிலவிவரும் பல சந்தேகங்கள் களையப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சந்தேகங்கள் உறுதி செய்யப்பட்ட உண்மைகளாக மக்கள் மனதில் நின்று நிலைத்துவிடும். இது காலத்தின் கட்டாயம்! என்று மு.க ஸ்டாலின்  தெரிவித்தார்.

    14:19 (IST)26 Aug 2020

    இறுதி செமஸ்டர் தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து: முதல்வர் பழனிசாமி உத்தரவு

    அரியர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கும், இறுதி ஆண்டு/ இறுதிப் பருவ தேர்வை தவிர மற்ற தேர்வுகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.

    14:14 (IST)26 Aug 2020

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு : வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம்  உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்துள்ளது. 

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி, 2018-ம் ஆண்டு தூத்துக்குடி மக்கள் பேரணியாக சென்றபோது துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்த பிரச்னைக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. 

    ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது . தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும். ஆலை திறப்பு தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் (ஆகஸ்ட் - 18 ) தெரிவித்தது.

    13:54 (IST)26 Aug 2020

    450 டாஸ்மாக் பணியாளர்கள் இடமாற்றம்

    டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 450 பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 450 பேரும் டாஸ்மாக் குடோன்களுக்கு மாற்றப்பட்டனர். சென்னையில் 25 டாஸ்மாக் பணியாளர்கள் இடமாற்றம். டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து நேற்று போராட்டம் நடத்தினர். 

    13:44 (IST)26 Aug 2020

    85% பேர் JEE அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்தனர் - மத்திய கல்வி அமைச்சர்

    JEE தேர்வினை எழுதுவதற்காக தேர்வுக்கூட அனுமதி சீட்டினை 85% பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் கூறியுள்ளார்

    13:43 (IST)26 Aug 2020

    450 டாஸ்மாக் பணியாளர்கள் பணியிட மாற்றம்

    தமிழகம் முழுவதும் 450 டாஸ்மாக் பணியாளர்கள் திடீர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.  

    13:39 (IST)26 Aug 2020

    கொரோனா பரிசோதனை முடிவுகளை SMS மூலம் அறியலாம் - விஜயபாஸ்கர்

    தமிழகத்தில்  கொரோனா பரிசோதனை முடிவுகளை 24 மணிநேரத்தில் SMS மூலம் அறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.  

    13:27 (IST)26 Aug 2020

    நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

    நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. ஹால் டிக்கெட் வெளியானதால் நீட் தேர்வு நடப்பது உறுதியானது.  மாணவர்கள், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வருகின்றனர்..

    12:46 (IST)26 Aug 2020

    11 எம்.எல்.ஏ தகுதி நீக்க வழக்கு

    11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கு - உச்சநீதிமன்ற அறிவுரைபடி நாளை விசாரணைக்கு வருகிறது. நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலமாக சபாநாயகர் தனபால் விசாரிக்கிறார். தகுதி நீக்க கோருவது தொடர்பாக, 11 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு இருந்த நிலையில் நாளை விசாரணை..

    12:21 (IST)26 Aug 2020

    தயாநிதி மாறன் ட்வீட்

    12:09 (IST)26 Aug 2020

    வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

    ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது சரி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. 

    12:06 (IST)26 Aug 2020

    தங்கம் விலை குறைவு

    சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.39,352 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    11:44 (IST)26 Aug 2020

    சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு 5300 கோடி ரூபாய்

    ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு 5300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. நடப்பாண்டில் 6584 சாலைகளை மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

    11:41 (IST)26 Aug 2020

    'மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்'

    வங்கிக்கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் பின்னால் ஒளிந்து கொள்வதையே வழக்கமாக கொண்டுள்ளீர்கள் என, கடன் இ.எம்.ஐ செலுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

    11:13 (IST)26 Aug 2020

    10-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

    10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பதை பொறுத்தே அவர்களுக்கு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

    10:52 (IST)26 Aug 2020

    ராகுல்காந்தி விமர்சனம்

    'பொருளாதாரம் சீர்குலைந்ததை மறக்கடிக்க முடியாது' ஊடகங்கள் மூலம் கவனத்தை திசை திருப்புவதன் மூலம் ஏழைகளுக்கு உதவ முடியாது என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 

    10:47 (IST)26 Aug 2020

    ‘இந்தியாவில் ஒரே நாளில் 67,151 பேருக்கு கொரோனா பாதிப்பு’

    இந்தியாவில் ஒரே நாளில் 67,151 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 63,173 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்; மேலும் 1,059 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31,67,323-ல் இருந்து 32,34,474 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து, சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்களும் இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
    Coronavirus Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment