Advertisment

வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காதீர்: ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை

விவசாயிகளின் வாழ்வில் அதிமுக-பாஜக அரசு வெந்நீரை பாய்ச்சுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Farm Bill, Tamil News Today

Tamil News Today

Tamil News Today Updates:  மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வரும் நிலையில், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காதீர் என ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment

எல்லையில் படைகளை குவிப்பதில்லை, பிரச்னையை மேலும் சிக்கலாக்குவதில்லை என, இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் அளவில் நடைப்பெற்ற ஆலோசனையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எந்த நாட்டுடனும் போர் புரியும் எண்ணம் இல்லை என்றும், பேச்சு வார்த்தையின் மூலமே தீர்வு காண விரும்புவதாகவும், ஐ.நா.சபையில் சீன அதிபர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இடை நீக்கத்தை ரத்து செய்ய மறுத்ததால், கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர். வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்டவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கி மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளின் வாழ்வில் அதிமுக-பாஜக அரசு வெந்நீரை பாய்ச்சுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உளவுத்துறையினர் எனக்கூறி தமிழ்நாடு இல்லத்தில் தன்னை மிரட்டியதாக, திமுக எம்.பி.கதிர் ஆனந்த், மக்களவையில் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:26 (IST)23 Sep 2020

    தமிழகத்தில் புதிதாக 5,325 பேருக்கு கொரோனா; மொத்த பலி எண்ணிக்கை 9,000ஐ தாண்டியது

    தமிழகத்தில் இன்று புதிதாக 5,325 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 63 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 9000ஐ தாண்டியுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    21:38 (IST)23 Sep 2020

    மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா பாதிப்பால் மரணம்

    மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 65.

    21:01 (IST)23 Sep 2020

    நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு; மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு

    நாடாளுமன்ற மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். காலையில் ஏற்கனவே மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மழைக்கால கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    19:58 (IST)23 Sep 2020

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    19:56 (IST)23 Sep 2020

    தலைமை செயலக ஊழியர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க கோரிக்கை

    தலைமை செயலக ஊழியர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என தலைமை செயலக ஊழியர்கள் சங்கத்தினர் முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளனர்.

    19:55 (IST)23 Sep 2020

    கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - அமைச்சர் உடுமலை ராதாரகிருஷ்ணன்

    கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்: கால்0நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 10ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர இதுவரை 12,009 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

    19:12 (IST)23 Sep 2020

    வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கூடாது; ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு

    வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கூடாது என எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். வேளாண் மசோதா குறித்த எங்களின் கருத்தை குடியரசுத் தலைவரிடம் கூறினோம் என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.

    18:31 (IST)23 Sep 2020

    7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

    பிரதமர் மோடி 7 மாநில முதல்வர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்து காணொளி வழியாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே தமிழகம் கோரியிருந்த நிதியை விடுவிக்க வலியுறுத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது.

    17:56 (IST)23 Sep 2020

    சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்

    சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதிகள் சந்திர சேகரன், நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியம், நீதிபதிகள் கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்செல்வி ஆகிய 10 நீதிபதிகளின் பெயர்கஊக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

    17:00 (IST)23 Sep 2020

    நீட் தேர்வு முடிவு வெளியாகும் தேதி ஒரு வாரத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

    நீட் தேர்வை கடந்த 13ஆம் தேதி நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். தேர்வு முடிவு வெளியாகும் தேதி தொடர்பாக தேசிய தேர்வு முகமை தெரிவிக்கையில், தேர்வு முடிவு தயாரிக்கக்கூடிய பணிகள் மும்முரமாக நடந்து வருவதாகவும், ஒரு வாரத்திற்குப் பிறகு தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது . இந்த மாதம் கடைசியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    16:39 (IST)23 Sep 2020

    தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவு ரத்து

    தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி தொடர்ந்த வழக்கில், தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்த கரூர் ஆட்சியர் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    16:37 (IST)23 Sep 2020

    தூத்துக்குடி தட்டார்மடம் வியாபாரி செல்வன் கொலை வழக்கில் சிபிசிஐடி வழக்கு பதிவு

    தூத்துக்குடி தட்டார்மடம் வியாபாரி செல்வன் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    16:25 (IST)23 Sep 2020

    குஜராத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளி திறக்கப்படவேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

    மொழி சம்பந்தப்பட்ட பிரச்சனை நாடெங்கிலும் உள்ளன. அந்த வரிசையில் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் செயல்பட்டு வந்த தமிழ் மேல்நிலைப் பள்ளி திடீரென்று மூடப்பட்டது. இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசித்து வரும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மூடப்பட்ட தமிழ்ப் பள்ளியைத் திறக்க வேண்டும் எனப் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    15:58 (IST)23 Sep 2020

    உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலில் பிரதமர் மோடி

    TIME இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலில், இந்தியாவிலிருந்து பிரதமர் மோடி, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, கூகுள் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    14:28 (IST)23 Sep 2020

    குட்கா விவகாரத்தில் நாளை இடைக்கால உத்தரவு!

    சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கில் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் மனு மீது நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

    14:27 (IST)23 Sep 2020

    கலாச்சார குழுவில் தமிழருக்கு இடம்!

    கலாச்சார குழுவில் தமிழருக்கு இடம் வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், `தமிழர் கலாச்சாரமும், தமிழ் மொழியும் இல்லாவிட்டால் இந்திய வரலாறு முழுமையடையாது. கீழடி ஆய்வு குறித்து, கடந்த ஆண்டு மகாபலிபுரம் வந்த போது வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னங்களை பார்வையிட்டதை கடிதத்தில் நினைவுகூர்ந்த முதல்வர், ``கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர்களையும் இடம்பெறச் செய்ய, 16 பேர் கொண்ட குழுவை மாற்றி அமைக்க மத்திய கலாச்சார துறைக்கு அறிவுறுத்துமாறு' மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    13:04 (IST)23 Sep 2020

    முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

    மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்துகளைச் சொல்ல விவசாயியாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. வேளாண்மை குறித்த அடிப்படை அறிவும், விவசாயிகள் மீது அக்கரையும் இருந்தாலே போதும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    12:22 (IST)23 Sep 2020

    ஆளுநருடன் பாஜக மாநில தலைவர் சந்திப்பு

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திடீர் சந்திப்பு. ஆளுநர் மாளிகையில் நடந்துவரும் சந்திப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    11:43 (IST)23 Sep 2020

    முன்னாள் அதிமுக எம் எல் ஏ மீதான பாலியல் வழக்கு

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜாமீன் கோரி நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் வழக்கு. அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

    11:40 (IST)23 Sep 2020

    அண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு

    அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் துணைவேந்தர்கள் ஆளுநரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தல்.

    11:14 (IST)23 Sep 2020

    தமிழ் பள்ளி மூடப்படுவதாக அறிவிப்பு

    குஜராத் மாநிலம் அகமதாபாத் மணி நகரில் உள்ள தமிழ் பள்ளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பள்ளி மூடப்படுவதற்கு அங்கு வசிக்கும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ் வழியில் படித்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என பெற்றோர்கள் வேதனை!

    10:55 (IST)23 Sep 2020

    தங்கம் விலை மேலும் குறைவு

    தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.320 குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.38,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,810-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.992 குறைந்ததால், நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

    10:40 (IST)23 Sep 2020

    எஸ்.பி.வேலுமணி ட்வீட்

    10:35 (IST)23 Sep 2020

    மாநிலங்களவை ஒத்தி வைப்பு

    மாநிலங்களவையை இன்றோடு காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். 

    10:35 (IST)23 Sep 2020

    மாநிலங்களவை ஒத்தி வைப்பு

    மாநிலங்களவையை இன்றோடு காலவரையின்றி ஒத்திவைக்க அரசு பரிந்துரைத்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். 

    09:57 (IST)23 Sep 2020

    புதிய கல்விக் கொள்கை - கருத்து கேட்பு

    புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை கருத்து கேட்கப்படுகிறது. பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் , கல்லூரி நிர்வாகத்தினர் இதில் பங்கேற்கலாம். ஆன்லைன் வழியில் கருத்துக்களை கேட்கிறது தமிழக உயர்கல்வித்துறை

    09:55 (IST)23 Sep 2020

    கொரோனா இறப்புகள்

    இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது!

    09:35 (IST)23 Sep 2020

    கதிர் ஆனந்தை மிரட்டியது யார்?

    திமுக எம்.பி. கதிர் ஆனந்தை மிரட்டியது யார் என டெல்லி சாணக்கியபுரி போலீசார் விசாரணையை தொடங்கினர்.  உளவுத்துறையினர் எனக் கூறி தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து தன்னை சிலர் மிரட்டியதாக குற்றஞ்சாட்டியிருந்தார் கதிர் ஆனந்த். 

    09:22 (IST)23 Sep 2020

    உலகளவில் கொரோனா

    உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.17 கோடியாக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2.33 கோடியாகவும், தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9.74 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. 

    திமுகவில் ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிற நிலையில், திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கிவைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி சார்பில், அவருடைய விசுவாசி ஒருவர் விண்ணப்பித்து திமுக உறுப்பினர் அட்டை வாங்கியுள்ளார்.

    தமிழகத்தில் 2021-இல் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சியில் பொறுப்புகளை நியமிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. திமுக முதன்முறையாக ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை நடத்துவதாக அறிவித்தது. அதன்படி, திமுகவில் ஆன்லைன் வழியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    Coronavirus Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment