Tamil News Today cyclone nivar fund இந்தியா டுடே பத்திரிகை சார்பாக, 12 பிரிவுகளின் கீழ் நடத்திய கணக்கெடுப்பில், ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கான சிறந்த மாநிலத்திற்கான விருதினை, தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது வருடமாக பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியா டுடே சார்பில் 2020 ஆம் ஆண்டுக்கான State of The States விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில், இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில், தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்து செயல்படும் மாநிலம் என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்ய தயாராக இருப்பதாக முதலமைச்சரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.நிவர் புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
நிவர் புயலால் உயிரிழந்த 4 பேரின் குடுமப்ங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு உறுதிபடுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், "மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட நம்பத்தகுந்த ஒடிடி தளம் ஒன்று விருப்பம் தெரிவித்திருந்தாலும், மாஸ்டர் திரைப்பட்டத்தை தியேட்டரில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம். தமிழ் சினிமாத் துறையை மீட்டெடுக்க திரைப்பட உரிமையாளர்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது.
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுவின் (சி எஸ் ஐ ஆர்) உறுப்பு ஆய்வகமான, ஹைதராபாத்தில் உள்ள செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (சி சி எம் பி) உருவாக்கியுள்ள கொரோனா தொற்றை கண்டறிவதற்கான புதிய முறைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதுள்ள தங்க தரச்சான்று பெற்ற ஆர்டி-பிசிஆர் முறையை சற்றே மாறுதலுக்கு உட்படுத்தி செல்கள் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் உருவாக்கியுள்ள நேரடி டிரை ஸ்வாப் (காய்ந்த மூக்கு திரவம்) ஆர்டி-பிசிஆர் சோதனையை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதை செயல்படுத்துவதன் மூலம் புதிதாக எந்த முதலீடும் செய்யாமல் பரிசோதனைகளின் அளவை 2 முதல் 3 மடங்கு வரை அதிகரிக்கலாம். இதற்கு தேவைப்படும் குறைந்த செலவு மற்றும் நேரத்தை கருத்தில் கொண்டு, இந்த பரிசோதனையை பின்பற்றுவதற்கான அறிவுரையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு வழங்கியுள்ளது.
கொவிட்- 19 பெருந்தொற்றின் காரணமாக மூத்த குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஊழியர் வருங்கால வைப்பு நிதியான இபிஎஃப்ஓ, ஜீவன் பிரமாண் பத்திரம் என்னும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 2021 பிப்ரவரி 28 வரை நீட்டித்துள்ளது. முன்னதாக ஓய்வூதியதாரர்கள் இந்த பத்திரத்தை சமர்ப்பிக்க நடப்பாண்டு நவம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செயல்படுத்தப்பட்டதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மத்திய நிதி அமைச்சகம் வழங்கிய இரு விருப்பத் தேர்வுகளில் விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்திருப்பதாக பஞ்சாப் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்துள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களும் (தில்லி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விருப்பத் தேர்வு-1-ஐ தேர்ந்தெடுத்துள்ளதால், ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை சமாளிப்பதற்காக சிறப்பு சாளரம் மூலம் இம்மாநிலங்களுக்கு கடன் கிடைக்கும்.
ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள இந்த சாளரத்தின் மூலம் இம்மாநிலங்களின் சார்பாக இந்திய அரசு ரூ 24,000 கோடியை கடனாக வாங்கி, அதை நான்கு தவணைகளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது.
பொது முடக்கத்தால் 2020-21 நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்திய பொருளாதாரம் 23.9 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. செப்டம்பரில் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 7.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. ஆனால், உற்பத்தி துறை 0.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, முதல் காலாண்டில் 39 சதவீதம் சரிவை சந்தித்திருந்தது. விவசாய துறை 3.4 சதவீதம், மின்சக்தி மற்றும் எரிவாயு துறை 4.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த புள்ளி விவரங்களை மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று (28.11.2020) காணொலிக்காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டேன். pic.twitter.com/AIJHvSO2NZ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 28, 2020
அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் ரூ.13670. ஆனால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 5.44 லட்சம்; ஈரோடு ஐ.ஆர்.டி கல்லூரியில் 3.85 லட்சம் - ஏன் இந்த அநியாயம்?
இக்கல்லூரிகளின் மாணவர்கள் என்னைச் சந்தித்தனர்; அவர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! pic.twitter.com/5RfJUBI40u
— M.K.Stalin (@mkstalin) November 28, 2020
ஜைடஸ் பயோடெக் பார்க் நிறுவனமும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஜை கோவிட்- டி தடுப்பு மருந்தின், இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக இந்த ஆய்வகத்திற்கு சென்ற பிரதமர் மோடி, தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் தற்போது எந்த நிலையை எட்டியுள்ளது என விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார்.
இன்று காலை உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை . தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை . இன்று காலை 8.30 மணியளவில் உருவானது என தகவல். அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும். அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறவும் வாய்ப்பு. புயலாக மாறினால் ' புரெவி ' என பெயர் வைக்கப்படும்.
மேலும் புயலால் உயிரிழந்த 61 பசுக்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும், 5 எருதுகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், 65 கன்றுகளுக்கு தலா 16 ஆயிரம் ரூபாயும் வழங்கவும், உயிரிழந்த 114 ஆடுகளுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கவும் ஆணையிட்டதாக தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights