Tamil News Today Updates : தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என அறிவிப்பு. டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவிப்பு.
முதலமைச்சர் பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகளை கூறியுள்ளார்.
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு வரும் 5ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கொண்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர் என தெற்கு ரயில்வே அறிவிப்பு. எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரத்துக்கு அனுமதி. 30 நிமிடங்கள் மட்டும் கேள்வி நேரத்திற்கு ஒதுக்கீடு எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சி.பி.எஸ்.இ 10, 12, வகுப்பு மறு தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ளது. 10ம் வகுப்புக்கு செப்டம்பர் 22ம் தேதி முதல் செப்டம்பர் 28ம் தேதி வரையிலும் 12ம் வகுப்புக்கு செப்டம்பர் 22ம் தேதி முதல் செப்டம்பர் 29 வரையிலும் தேர்வுகள் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதமும் சமூக இடைவெளி கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத சலூன் ஸ்பா ஆகியவற்றிற்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு கலை, அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அரியர் தேர்வுகளை தள்ளிவைக்க முடியுமே தவிர ரத்து செய்ய முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. தமிழகத்தில் எந்த இடத்திலும் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் தட்டுப்பாடு கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும். அரசின் முடிவில் எவ்வித மாற்றமுமில்லை. அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவின் கருத்தை AICTE கருத்தாக திணிப்பது கண்டிக்கத்தக்கது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கடிதம் எழுதியுள்ளது.
மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் திட்டங்கள் மக்கள் நலனுக்கு விரோதமானவை என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகளை தி.மு.க. எதிர்க்கவில்லை . சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் இருக்க கூடாது . ற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையானது தனியார் மயமாக்க வழி வகுக்கிறது எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச் செயலாலர் , பொருளாளர் பதவிகளுக்கு துரைமுருகன், டி.ஆர்.பாலு பெயரில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்காக துரைமுருகன் பெயரில் 24 வேட்பு மனுக்களும், பொருளாளர் பதவிக்காக டி.ஆர்.பாலு பெயரில் 16 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த இரு பதவிகளுக்கும் வேறுயாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு. அப்பாவை தொடர்ந்து அவரின் மகன் விஜய் வசந்த் தேர்தலை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ”அரசியலில் விருப்பம் இருக்கிறது; ஆனால் தற்போதைக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை காங்கிரஸ் உறுப்பினராக நான் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவேன் ” என்று விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தமிழக செய்திகளை வாசிக்க
பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சரண் இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து 4 நாட்களாக எஸ்.பி.பி. உடல்நிலை சீராக உள்ளதாகவும், உடல் நிலையில் நல்லமுன்னேற்றம் உள்ளதால் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார். எனவே, மருத்துவமனையில் இருந்து விரைவில் எஸ்பிபி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights