Advertisment

News Highlights: வாடகை பாக்கி இல்லை; நீதிமன்றம் கண்டிக்கவும் இல்லை- லதா ரஜினிகாந்த் தரப்பு விளக்கம்

Tamil News : கமல்ஹாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளருக்கு கொரோனா

author-image
WebDesk
New Update
News Highlights: வாடகை பாக்கி இல்லை; நீதிமன்றம் கண்டிக்கவும் இல்லை- லதா ரஜினிகாந்த் தரப்பு விளக்கம்

Tamil News Today : ரஜினிகாந்த் மனைவிக்கு சொந்தமான ஆஸ்ரம் பள்ளி தொடர்பாக வாடகை பாக்கி இல்லை; நீதிமன்றம் கண்டிக்கவும் இல்லை என லதா ரஜினிகாந்த் தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது.

Advertisment

அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கரூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள், கொரோனா தடுப்புப் பணி குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 21வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்.

சென்னை ஐஐடி வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.நேற்றுவரை 183 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் சென்னை ஐஐடியில் ராதாகிருஷ்ணன் ஆய்வு. வாடகை பாக்கி விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

விருதுநகரில் கமல்ஹாசன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று.அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, ஐ.ஐ.டி இயக்குனர் மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவன டீன் பதவிகள், துணைவேந்தர் பதவிக்கு இணையானது என்பதற்கான எந்த ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Live Blog

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:51 (IST)16 Dec 2020

    வாடகை பாக்கி என்பது உண்மை இல்லை; நீதிமன்றம் கண்டிக்கவில்லை - லதா ரஜினிகாந்த் தரப்பு விளக்கம் 2/2

    ஸ்ரீராகவேந்திரா கல்வி அறக்கட்டளை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் சொன்ன காரணங்களையும், உறுதியையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 2021 ஏப்ரல் வரை காலி செய்ய அவகாசம் கொடுத்திருக்கிறது. மேலும், இந்த இடத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டாம் என்றும், புதிய இடத்தில் நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. அதனால், லதா ரஜினிகாந்த் எந்தவிதமான நீதிமன்ற அவமதிப்பையும் செய்யவில்லை என்றும், அப்படிச் செய்ததாக வரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை மட்டுமல்ல, எங்கள் நிறுவனம் மற்றும் லதா ரஜினிகாந்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே பரப்பப்படுகின்றன. மாணவர்களின் நலனை மனதில் வைத்து சரியான இடத்தைத் தேடி வருகிறோம். நீதிமன்றத்தில் நாங்கள் கொடுத்த உறுதியின்படி செயல்படுவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    22:49 (IST)16 Dec 2020

    வாடகை பாக்கி என்பது உண்மை இல்லை; நீதிமன்றம் கண்டிக்கவில்லை - லதா ரஜினிகாந்த் தரப்பு விளக்கம் 1/2

    ஸ்ரீராகவேந்திரா கல்வி அறக்கட்டளை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிண்டியில் ஆஷ்ரம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தைக் காலி செய்யாத விவகாரத்தில் நீதிமன்றத்தை லதா ரஜினிகாந்த் அவமதித்து விட்டதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறோம். கரோனா நெருக்கடி காரணமாகவும், நடப்புக் கல்வியாண்டு முடியாத காரணத்தினாலும் உடனடியாக அந்த வளாகத்தைக் காலி செய்ய முடியாது என்றும், ஏப்ரல் 2021ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வேண்டும் என்றும் ஏற்கெனவே நீதிமன்றத்தில் நாங்கள் கோரியிருக்கிறோம். மேலும், வாடகை, வரி என எந்த வித பாக்கியும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    20:58 (IST)16 Dec 2020

    நானும் ரஜினியும் இணைவது குறித்து அரசியல்வாதிகள் பயப்படுகின்றனர் - கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “நானும் ரஜினியும் இணைவது குறித்து அரசியல்வாதிகள் பயப்படுகின்றனர். ரசிகர்கள் சந்தோஷப்படுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

    20:13 (IST)16 Dec 2020

    முதல்வரைப் பார்த்து கொரோனாவுக்கும் பயம்தான் - அமைச்சர் விஜயபாஸ்கர்

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “மருத்துவர்கள் நாடி பிடித்து நோய்களை கண்டறிவது போல மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவர் முதல்வர் பழனிசாமி. இந்தியாவின் சூப்பர் ஃபாஸ்ட் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து வருகிறார். முதல்வரைப் பார்த்து எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் பயமல்ல; கொரோனாவுக்கும் பயம்தான்.” என்று தெரிவித்துள்ளார்.

    19:42 (IST)16 Dec 2020

    ஆந்திராவில் மர்ம நோய்க்கு பூச்சி மருந்து காரணம் - எய்ம்ஸ் அறிக்கை

    ஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோய் தாக்கியதற்கு விவசாய நிலத்தில் பயன்படுத்தப்பட்ட பூச்சி மருந்தே காரணம் என்று எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உடலில் ஈயம், நிக்கல் எவ்வாறு கலந்தது என்பது பற்றிய பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    19:39 (IST)16 Dec 2020

    மார்ச் மாதம் 4ஜி அலைக்கற்றைக்கான ஏலம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    20 ஆண்டுகளுக்கு 4ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை மார்ச் மாதம் ஏலம் விட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

    18:54 (IST)16 Dec 2020

    சேலத்தில் மினி கிளினிக்கை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

    முதல்வர் பழனிசாமி சேலம் கொண்டலாம்பட்டியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்துள்ளார்.

    18:48 (IST)16 Dec 2020

    வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் முறைகேடு புகார் - செந்தில் பாலாஜி வழக்கு

    கரூர் மாவட்டத்தில் திடீரென 30 ஆயிரம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு *இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    18:45 (IST)16 Dec 2020

    மாநில மொழியில் தொழில்துறை படிப்புகள் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும் - ஐகோர்ட்

    மாநில மொழியில் தொழில்துறை சார்ந்த படிப்புகளை கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். மாநில மொழிகளில் தொழில்துறை படிப்புகளை பயில்வதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே பணிபுரிய முடியும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    17:27 (IST)16 Dec 2020

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி ஆகிறார் சஞ்ஜீப் பானர்ஜி

    சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி டிசம்பர் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதனால், சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவு செய்துள்ளது. சஞ்ஜீப் பானர்ஜி தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார்.

    17:20 (IST)16 Dec 2020

    ரஜினியின் மூலம் செய்தி வந்தால் மட்டுமே, அது உண்மையான செய்தி - தமிழருவி மணியன்

    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உடனான ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், கட்சி அறிவிப்பு தொடர்பாக ரஜினியின் மூலம் செய்தி வந்தால் மட்டுமே, அது உண்மையான செய்தி என்று தெரிவித்துள்ளார்.

    16:15 (IST)16 Dec 2020

    எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தவில்லை - முதல்வர் பழனிசாமி

    கரூர் மாவட்டத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், திமுக ஆதரித்தது. நீட் தேர்வை தடை செய்வதற்கு அதிமுக போராடுகிறது. ஏழை மாணவர்கள் பயன்பெறுவதற்காகவே நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு கொண்டு வந்தோம். அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கி உள்ளோம். அடுத்த ஆண்டு புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கும்போது கூடுதலாக 1,650 இடங்கள் கிடைக்கும். அதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் தற்போதும் தொடர்கிறது. அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான பிரசாரங்களை பரப்பி வருகின்றனர். புதிய வேளாண் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை. விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டங்களையும் தமிழக அரசு அனுமதிக்காது” என்று கூறினார்.

    15:05 (IST)16 Dec 2020

    விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய மனு - உச்சநீதிமன்றம் உத்தரவு

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய மனு மீதான விசாரணையில்  நாளைக்குள் பதிலளிக்க அளிக்க மத்திய அரசுக்கும், டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

    14:31 (IST)16 Dec 2020

    ஏழை - எளிய மக்களுக்கு உணவு வழங்கியதாக அதிமுக அரசு ரூ.312 கோடி முறைகேடு செய்துள்ளது

    “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை;  ஏழை - எளிய மக்களுக்கு உணவு வழங்கியதாக அதிமுக அரசு ரூ.312 கோடி முறைகேடு செய்துள்ளது" என்று மா. சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார் .

    14:28 (IST)16 Dec 2020

    ஐம்பதாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது

    பாகிஸ்தானுக்கு எதிராக 1971ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றிபெற்றதன் ஐம்பதாம் ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.  இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் நாடு உருவாக்கப்பட்டது. மேலும் இரண்டாம் உலகப்போருக்குப்பின் மிகப்பெரிய அளவில் அந்நிய நாட்டு படையினர் சரணடைந்தனர்.

    14:27 (IST)16 Dec 2020

    ராம்கோபால் ராவ் தலைமையிலான குழு அளித்திருக்கும் பரிந்துரையை குப்பையில் போட வேண்டும் - துரைமுருகன்

    "ஐஐடி கல்வி நிறுவனங்களின் உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் நியமனங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு முறையை நீக்க வேண்டும் என்றும், 'ஐஐடி நிறுவனங்களை உயர் தகுதி மிக்க கல்வி நிறுவனங்களாக அறிவிக்க வேண்டும்' என்றும் மத்தியக் கல்வியமைச்சகம் நியமித்துள்ள ராம்கோபால் ராவ் தலைமையிலான குழு அளித்திருக்கும் பரிந்துரைக்கு திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.  

    14:25 (IST)16 Dec 2020

    இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே வளிமண்டல சுழற்சி நிலவுகிறது, இதன் காரணமாக தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்களில், ஒருசில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    14:19 (IST)16 Dec 2020

    எம்.ஜி.ஆர் பெயரை கமல்ஹாசன் பயன்படுத்துவது சந்தர்ப்பவாதத்தின் உச்சக்கட்டம் - ஜெயக்குமார்

    மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பெயரை கமல்ஹாசன் பயன்படுத்துவது சந்தர்ப்பவாதத்தின் உச்சக்கட்டம் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.    

    13:44 (IST)16 Dec 2020

    புதுமைப்பித்தன் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் - கமல்ஹாசன்

    தமிழிலக்கியத்தின் தலைமகன் புதுமைப்பித்தனுக்கு திருநெல்வேலியில் ஒரு சிலை அமைக்கவேண்டும் என்பது பல தசாப்தங்களாக நீடிக்கும் கோரிக்கை. ஒரு தெருவிற்கு அவர் பெயர் வைப்பதற்கே 72 ஆண்டுகள் இவர்களுக்குத் தேவைப்பட்டது.எங்கள் ஆட்சியில் புதுமைப்பித்தன் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தார்.  

    13:41 (IST)16 Dec 2020

    இந்திய அணி அறிவிப்பு.

    ஆஸ்திரேலியாவுடன் நாளை நடைபெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு.

    11:40 (IST)16 Dec 2020

    அண்ணா பல்கலைக்கழக முதுநிலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி

    ஐ.ஐ.டி.யில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக முதுநிலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வகுப்புகளைத் தள்ளி வைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    11:00 (IST)16 Dec 2020

    கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை!

    ”ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவது, மக்களே ஆள வேண்டும் என்பதற்காக தான். ஆட்சியாளர்கள் மக்களுக்கு சேவகர்களாக இருக்க வேண்டும். மக்களின் அன்பு மட்டும்தான் எங்களை ஆளும்!” என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை விடுத்துள்ளார்.

    10:43 (IST)16 Dec 2020

    கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

    பிரபல கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து, இதயநோய் பிரச்சனை காரணமாக  அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    10:12 (IST)16 Dec 2020

    கல்லூரிகளில் கொரோனா பரிசோதனை!

    சென்னை அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடியில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக, கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

    09:40 (IST)16 Dec 2020

    சித்ரா தற்கொலை!

    சித்ரா வழக்கில் யாரையோ காப்பாற்ற ஹேம்நாத்தை கைது செய்துள்ளனர்” ஹேம்நாத் பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு. 

    09:39 (IST)16 Dec 2020

    மத கூட்டங்கள் நடத்த அனுமதி!

    டிச.19ஆம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி  முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

    09:37 (IST)16 Dec 2020

     மேட்டூர் அணை!

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.11 அடியாகவும் நீர் இருப்பு 72.98 டிஎம்சியாகவும் இருக்கிறது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 5,142 கனஅடியில் இருந்து 4,517 கனஅடியாக குறைந்தது. 

    09:37 (IST)16 Dec 2020

    அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா!

    சென்னை ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதியானது .  சென்னை ஐஐடி வளாகத்தில் ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

    Tamil News Today : குஜராத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி, பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், புதிதாக கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளை குழப்ப சதி நடப்பதாக தெரிவித்தார்.புதிய சட்ட திருத்தத்தின் மூலம் விவசாயிகளின் நிலங்களை பிறர் ஆக்கிரமித்து கொள்வார்கள் என அச்சுறுத்தப்படுவதாக குறிப்பிட்டார்

    நேற்றைய செய்திகள்

    மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை என்பது காவிக் கொள்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.திண்டுக்கல்லில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பேசிய அவர், செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சென்னையில் தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment