Tamil News Today Updates: பாஜக வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது என டிஜிபி அலுவலகத்தில் திருமாவளவன் எம்.பி. மனு அளித்துள்ளார். வேல் யாத்திரையை நிறைவு பெறும் போது பல விசயங்களுக்கு தானாக தெளிவு பிறக்கும்; வேல் யாத்திரை குறித்து தேவை இல்லாமல் யூகத்தின் அடிப்படையில் யாரும் எதையும் பேச வேண்டாம்! என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றவே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 7.5 உள் ஒதுக்கீடு குறித்த அரசாணையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இந்த ஆண்டே அதனை அமல்படுத்தி, கவுன்சிலிங் தேதியை அறிவித்து, மாணவர் சேர்க்கையை தொடங்கும்படி வலியுறுத்தல்.
தகுந்த நேரத்தில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். அரசியலுக்கு வருவதில் மேலும் தாமதமா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். வெளிநாடுகளுக்கு வெங்காய விதை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
துருக்கி, கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருகி இஸ்மிர் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கம் 7.0 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. ஏஜியன் கடற்கரையோர பகுதிகளில் கட்டங்கள் இடிந்து விழுந்தன. துருக்கி இஸ்மிர் நகரில் சுனாமி ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகுந்தது.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “7.5% உள் ஒதுக்கீடு குறித்து ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்தாரா இல்லை. அதனால், 7.5% உள் ஒதுக்கீட்டில் எந்தவிதத்திலும் திமுக உரிமை கொண்டாட முடியாது” என்று கூறினார்.
நாடு முழுவதும் மக்கள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்வதற்கு இண்டேன் நிறுவனம் 7718955555 என்ற புதிய எண் அறிவித்துள்ளது. இந்த எண்ணிற்கு தொடர்புகொண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் பதிவு செய்யலாம் என்று இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்தார். இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவிப்பதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மாளிக்கைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வருகிறார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுனர் ஒப்புதல் அளித்திருப்பது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.
7.5% இடஒதுக்கீட்டுக்கு ஆளுனர் ஒப்புதல்: தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றி! தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர்...
Posted by Dr. S. Ramadoss on Friday, 30 October 2020
மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5.30 மணிக்கு ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று, தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்று அறிக்கை வெளியிட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் ” என்று அறிவித்துள்ளார்.
கோயம்பேடு மார்க்கெட் திறக்கும் தேதியை அறிவிக்க மறுத்தால் போராட்ட நடத்துவோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். மேலும், அவர் பண்டிகைக் காலங்களில் இரவு 12 மணி வரை செயல்பட அனுமதியளிக்க வேண்டும் என்ண்று என்று தெரிவித்துள்ளார்.
வேறு வழியின்றி 7.5% மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி என ஸ்டாலின் ட்வீட்.
45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% #Reservation-க்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி!
திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம்.
இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்! pic.twitter.com/GTrRdAoGRz
— M.K.Stalin (@mkstalin) October 30, 2020
7.5% இட ஒதுக்கீடு சட்டத்திற்கு தமிழக ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏன்? இதற்கான இளைஞர்களின் பதில்களை நான் எதிர்பார்க்கிறேன்!
— Dr S RAMADOSS (@drramadoss) October 30, 2020
கேரளாவில், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 16-ம் தேதி திறக்கப்படுகிறது. நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்! எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மிலாதுன் நபி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்திருநாள் சகோதரத்துவத்தை மேலும் மேம்படுத்தும் என நம்புகிறேன் என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Best wishes on Milad-un-Nabi. Hope this day furthers compassion and brotherhood all across. May everybody be healthy and happy. Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) October 30, 2020
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை. தொடர்ந்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights