Advertisment

News Highlights: ஒரே நாளில் 3 பேர் மரணம்- தமிழகத்தில் நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன

author-image
WebDesk
New Update
Neet Exam, tamil nadu Neet Exam , neet cut off marks

Tamil Nadu News Live Updates :

Tamil News Today Updates: தமிழகத்தில் அடுத்தடுத்து ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

Advertisment

நீட் அச்சம் காரணமாக ஒரே நாளில், அதுவும் நீட் தேர்வு தொடங்கப்படுவதற்கு முந்தைய நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் நிலைமையின் தீவிரத்தை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்; நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.

ஆங்காங்கே போராட்டங்களும் வெடிக்க தொடங்கியுள்ளன.

காவிரி படுகையில் மேலும் 24 எண்ணெய் கிணறுகளை தோண்டுவதற்கான அனுமதியை நீட்டிக்க பரிந்துரை. ஓ.என்.ஜி.சி கோரிக்கையை ஏற்று சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை. மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறுவதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தவுடன் மாநிலங்களுக்கு இடையேயானா போக்குவரத்து தொடங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

 

செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு இயக்கப்பட்ட பேருந்துகளில் 1 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களை மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு புதிய நெறிமுறையை, இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலிலும், அதிமுக-வுடனான கூட்டம் தொடரும் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:13 (IST)12 Sep 2020

    செப்டம்பர் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கு இல்லை - மத்திய அரசு

    செப்டம்பர் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஒரு தகவல் வலம் வருகிறது. இந்த உத்தரவு போலி. முடக்கத்தை மீண்டும் அமல்படுத்த எந்த உத்தரவையும் வெளியிடவில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.  

    22:00 (IST)12 Sep 2020

    நீட் தேர்வு அச்சம் : மேலும் ஒரு மாணவர் பலி

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர்  நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.  தமிழகத்தில் இன்று மட்டும் நீட் தேர்வு அச்சம் காரணமாக மூன்று மாணவர்கள் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

    21:53 (IST)12 Sep 2020

    நீட் தேர்வு விவகாரம்: கனிமொழி ட்வீட்

    நீட் தேர்வு தற்கொலை தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி ட்வீட் செய்துள்ளார். அதில், " நீட் தேர்வு பயத்தில் தருமபுரியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை என்ற செய்தியை கேட்கும் போது மனம் பதைக்கிறது.மாணவர்கள் இலட்சிங்களோடு இருக்கவேண்டும் என்பது உண்மை.ஆனால் தன் கனவு நிறைவேறும் முயற்சிக்கு முன்னாலேயே நம்பிக்கை இழந்து இவர்கள் இந்த முடிவை எடுப்பது அதிர்ச்சியளிக்கிறது. வாழ்க்கை என்பது பல வாய்ப்புகளைத் தரும் என்ற நம்பிக்கை வேண்டும். இந்த உலகத்தில் பல சாதனைகளை செய்த தலைவர்கள் சாதனையாளர்கள் பலநேரங்களில் தோற்றவர்கள்தான். எனது தந்தை தலைவர் கலைஞர் கூட தோல்விகளை தாண்டி வந்தவர்தான்.ஒரு தேர்வின் வெற்றி தோல்வி மட்டும் உங்கள் வாழ்க்கையை முடிவு செய்துவிடாது. தயவு செய்து நம்பிக்கையோடு இருங்கள். பெற்றவர்கள் உங்கள் நண்பர்கள் யாரும் நீங்கள் டாக்டர் ஆகவில்லை என்ஜினியர் ஆகவில்லை என்று உங்களை வெறுக்கப்போவது இல்லை. உங்களை இழந்த உங்கள் பெற்றோரின் வலியை எதுவும் சரிசெய்யாது. நம்பிக்கையோடு வாழ்ந்து காட்டுவதில்தான் அவர்களுக்கு நீங்கள் காட்டும் அன்பு இருக்கிறது" என்று தெரிவித்தார்.  

    21:48 (IST)12 Sep 2020

    படுக்கைகள் இல்லை என்று கூறி நோயாளிகளை திருப்பி அனுப்பக் கூடாது -

    இந்திய தொழில் மற்றும் வர்த்தக நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் புதுதில்லி எய்ம்ஸ்-உடன் இணைந்து, கொவிட்-19 சிகிச்சையை நாடு முழுவதும் அளித்து வரும் தனியார் மருத்துவமனைகளுக்கான மெய்நிகர் மாநாடு ஒன்றை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று நடத்தியது.  கொரோனா நோய்த் தொற்று மேலாண்மையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், இழப்புகளை குறைப்பது பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

    நோயாளிகளைத் தொடர்ந்து அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறும் தனியார் மருத்துவமனைகள் அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டன. மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய மத்திய சுகாதார செயலாளர், படுக்கைகள் இல்லை என்று கூறி நோயாளிகளை திருப்பி அனுப்பக் கூடாது என்றும் சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்க வேண்டும் என்றும் மருத்துவமனைகளைக் கேட்டுக்கொண்டதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

    21:44 (IST)12 Sep 2020

    கொரோனா நிலவரம்: பிரதமரின் முதன்மை செயலாளர் விரிவான ஆய்வு

    கொரோனா பெருந்தொற்று  நிலவரம் குறித்து பிரதமரின் முதன்மை செயலாளர் விரிவான ஆய்வு நடத்தினார்.

    முன்னெச்சரிக்கைகள் மற்றும் தயார் நிலையுடன் கூடிய ஊரடங்கு தளர்வில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும், தடுப்பூசி முன்னேற்றம் குறித்தும் ஆய்வில் விவாதிக்கப்பட்டது.

    21:41 (IST)12 Sep 2020

    சுதாங்கன் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது - சரத் குமார்

    சுதாங்கன் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது என்று சரத் குமார் தெரிவத்தார்.  

    21:40 (IST)12 Sep 2020

    ஜெயலலிதாவின் ஆன்மா தான் எடப்பாடி பழனிசாமியை வழி நடத்துகிறது-

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா தான் எடப்பாடி பழனிசாமி அவர்களை வலி நடத்துகிறது என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.பி உதயகுமார் தெரிவித்தார்.   

    21:37 (IST)12 Sep 2020

    மு.க ஸ்டாலின்  ஆட்சியில் உங்கள் கனவு மெய்ப்படும் - உதயநிதி ஸ்டாலின்

    இன்னொரு நீட் மரணம். நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த தருமபுரி ஆதித்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவர்களே சற்றே பொறுமையாக இருங்கள். 8 மாதங்களில் மு.க ஸ்டாலின்  ஆட்சியில் உங்கள் கனவு மெய்ப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.  

    19:54 (IST)12 Sep 2020

    கொரோனா உயிரிழப்பு

    கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 37 பேர்களும் அரசு மருத்துவமனைகலில் 39 பேர்கள் என 76 பேர் உயிரிழந்தனர். இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,307 ஆக அதிகரித்துள்ளது

    19:54 (IST)12 Sep 2020

    கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம்

    தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,227-பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,649 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 88.85 % குணமடைந்துள்ளனர்

    19:53 (IST)12 Sep 2020

    தமிழகத்தில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா- 76 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் புதிதாக 5,495 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது .

    19:52 (IST)12 Sep 2020

    நீட் தேர்வு சோகம், மேலும் ஒரு மாணவர் மரணம்

    நாளை நீட் தேர்வு தொடங்கும் நிலையில், தமிழகத்தில் தருமபுரி அருகே நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்  பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.     

    முன்னதாக, மதுரையில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தற்கொலை செய்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    18:20 (IST)12 Sep 2020

    டிடிவி தினகரன் இரங்கல்

    மூத்தப் பத்திரிகையாளர் சுதாங்கன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். 50ஆண்டுகளுக்கு மேலாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்தார்.  

    18:19 (IST)12 Sep 2020

    மூத்தப் பத்திரிகையாளர் சுதாங்கன் காலமானார்.

    மூத்தப் பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.  

    17:36 (IST)12 Sep 2020

    நீட் தேர்வு : ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

    17:35 (IST)12 Sep 2020

    பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இரவு 10 மணி வரை செயல்படும் - தமிழக அரசு

    பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இன்று முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கி தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியீடு.

    17:33 (IST)12 Sep 2020

    பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டம் நிறுத்தப்படவில்லை - தமிழக அரசு

    பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி தவறு என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஏற்கனவே பயன்பெற்று வரும் தகுதியான விவசாயிகளுக்கு அடுத்த தவணைக்கான நிதி உதவி தொடர்ந்து வழங்கப்படும் என்று வேளாண் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    17:32 (IST)12 Sep 2020

    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்!

    நீட் அச்சத்தால் உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறுகிறார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.மாணவியின் குடும்பத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கினார்

    17:31 (IST)12 Sep 2020

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி,  சென்னை தாம்பரத்தில் மனித நேய மக்கள் கட்சியினர் 100 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

    16:46 (IST)12 Sep 2020

    கவிஞர் வைரமுத்து ட்வீட்!

    "நீட் தேர்வு என்பது சமூக அநீதி.. அதை அழிப்போம்" - ட்விட்டரில் கவிஞர் வைரமுத்து கருத்து

    16:31 (IST)12 Sep 2020

    கமல்ஹாசன்  ட்வீட். !

    மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  ட்வீட். 

    16:31 (IST)12 Sep 2020

    குயின் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை இல்லை .!

    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை இல்லை . ஒளிபரப்புக்கு தடை விதிக்க கோரி தீபா தரப்பு கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. 

    15:15 (IST)12 Sep 2020

    ஆன்லைன் வழியில் பதிவு செய்வதில் சிக்கல்.!

    பிஇ. இறுதி செமஸ்டர் தேர்வுக்கு ஆன்லைன் வழியில் பதிவு செய்வதில் சிக்கல்.  இணையதள பிரச்சனையால் பதிவு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி . ஹால் டிக்கெட், மாதிரி தேர்வு குறித்த விவரங்களை அண்ணா பல்கலை. வெளியிடாததால் மாணவர்கள் கவலை.

    15:12 (IST)12 Sep 2020

    அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா!

    செய்யாறு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா என செய்தி வெளியாகியுள்ளது. செய்யாறு அதிமுக எம்.எல்.ஏ தூசி மோகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

    14:49 (IST)12 Sep 2020

    முதல்வர் இரங்கல்!

    நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல்.  மாணவியின் தற்கொலை செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவர்கள் விபரீத முடிவை எடுப்பது வேதனை தருகிறது . எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

    14:24 (IST)12 Sep 2020

    ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்

    திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. 89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    13:38 (IST)12 Sep 2020

    பயணிகளுக்கு தடை

    விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ பயணிகள் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    13:18 (IST)12 Sep 2020

    உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

    12:47 (IST)12 Sep 2020

    நீட் நெறிமுறை வெளியீடு

    நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில் மாணவர்களுக்கான நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட், மருத்துவ சான்று, அடையாள அட்டை, சானிடைசர் அவசியம். மாணவர்கள் நாளை காலை 11 மணிக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். 

    12:38 (IST)12 Sep 2020

    நீட் தற்கொலை - கனிமொழி எம்.பி

    நீட் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலை அல்ல, என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். அதோடு, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே இவை, மாணவர்கள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    12:08 (IST)12 Sep 2020

    உலக அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த திமுக காணொலி கூட்டம்

    உலக அளவில் அரசியல் கட்சியை சேர்ந்த அதிகம் பேர் பங்கேற்ற காணொலி கூட்டங்களில் திமுக பொதுக்குழு கூட்டம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு முதலிடத்தை பிடித்துள்ளது. அம்மாநாட்டில் காணொலி காட்சி மூலம் 3 ஆயிரத்து 979 பேர் கலந்து கொண்டதாகவும், திமுக பொதுக்குழு கூட்டத்தில் 2 ஆயிரத்து 774 பேர் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக பொதுக்குழு கூட்டம் சர்வதேச அளவில் பாராட்டை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    11:35 (IST)12 Sep 2020

    குட்கா விவகாரம் - திமுக சார்பில் மனு

    சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு சென்ற விவகாரம். உரிமைக் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7-ம் தேதி கூடிய உரிமைக்குழு தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. நாளை மறுதினம் பதிலளிக்க உரிமைக்குழு உத்தரவிட்ட நிலையில் திமுக இந்த மனுத்தாக்கலை செய்துள்ளது. 

    11:07 (IST)12 Sep 2020

    மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா இல்லை

    திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் முடிவு வெளியாகியிருக்கிறது. நாளை மறுநாள் சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. 

    10:41 (IST)12 Sep 2020

    டெல்லியில் மெட்ரோ சேவை நீட்டிப்பு

    டெல்லி மெட்ரோ சேவையின் அனைத்து வழித்தடங்களிலும் இன்று முதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த ஏழாம் தேதி முதற்கட்டமாக மூன்று வழித்தடங்களில் இயக்கப்பட்ட ரயில் சேவை, தற்போது படிபடிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் சேவை நேரக்கட்டுப்பாடும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    10:18 (IST)12 Sep 2020

    முதல்வர், துணை முதல்வருக்கு கொரோனா இல்லை

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என, சட்டப்பேரவை கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. 

    09:42 (IST)12 Sep 2020

    விலங்குகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனை வெற்றி

    விலங்குகள் மீது நடத்தப்பட்ட கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணியில் பாரத் பயோடெக் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

    09:41 (IST)12 Sep 2020

    மாணவர் சேர்க்கைக்கு தடை

    தமிழகத்தில் பல்கலைக்கழக இணைப்பு அனுமதிபெறாத மற்றும் அனுமதி ரத்து செய்யப்பட்ட 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 56 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

    09:15 (IST)12 Sep 2020

    நீட் தேர்வு பயத்தால் மதுரை மாணவி தற்கொலை

    மதுரையில் நீட் தேர்வு அச்சத்தால் ஜோதி துர்கா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெற உள்ள நீட் தேர்வை எழுத இருந்த  ஜோதி துர்கா, மதுரை காவல் சார்பு ஆய்வாளரின் மகள்.

    காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்திக்கு கட்சி நிர்வாக ரீதியாக உதவி செய்வதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அகில இந்திய பொதுச் செயலாளர்களும் மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    அண்மையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நிரந்தரமான முழு நேர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திறந்த கடிதம் எழுதினர். அப்போது, காங்கிரஸ் கட்சியில் புதிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

    Coronavirus Corona Neet
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment