Tamil News Today Live nivar cyclone : தடையை மீறி பரப்புரை மேற்கொண்டதற்காக கைது செய்யப்பட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்புவேறு இடத்தில் பரப்புரை மேற்கொள்ள இருந்ததால் 6 மணிக்கு பதிலாக இரவு 11 மணிக்கு விடுவிப்பு.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் கூட்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் இணையவழி கலந்தாய்வு இன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரிக்கை உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி வரும் டிசம்பர் 1 ந்தேதி முதல் முதற்கட்ட தொடர் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
டிசம்பர் 31-ந்தேதி வரை அனைத்து பணி நாட்களிலும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பருவநிலை மாறுபாடு குறித்து இந்தியா கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறது!" ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 3ஆம் நாளில் விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் எழுந்தருளினர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்கள் அவர்களால் மட்டுமே நிரப்பப்பட்ட முடியும். ஏற்கனவே வாய்ப்பை நழுவவிட்ட மாணவர்கள் துணை கலந்தாய்வில் மீண்டும் பங்கேற்று பயன் அடையலாம் என்று டாக்டர் சி விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகை, தஞ்சை திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளேயும் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது.
நவம்பர் 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கட்டண பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவக்கல்வியில் சேர நடவடிக்கை தேவை என முதல்வர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் . கட்டண பிரச்னையால் தங்களுக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடங்களை சில மாணவர்கள் ஏற்க மறுத்த நிலையில் கடிதம்
தமிழகத்தில் 6 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட பள்ளி செல்லாத குழந்தைகள், இடை நின்ற மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் தொடர்பான கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 21-ல் தொடங்கிய இந்த பணி வரும் டிச.,12 வரை, ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், தன்னார்வலர்கள் மூலம் நடத்தப்படுகிறது
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
டெல்லி பி.டி.மார்க் சாலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 8 பழைய கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு 76 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. புதிய குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு, சூரிய மின்னாற்றலை தயாரிக்கும் கூரைகள், LED விளக்குகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட 14 சதவீதம் குறைவாக கட்டுமானப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
நிவர் புயல். கடலூர் மற்றும் சிதம்பரத்தில் தயார்நிலையில் 6 பேரிடர் மீட்புக் குழுக்கள். பாம்பன், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்
கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது .கொலைக்கு துப்பாக்கி கொடுத்ததாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை கைது செய்தது போலீஸ்.
கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் குறித்து முதலமைச்சர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights