Tamil News Today Updates : சமரச திட்டங்களை பரிசீலிக்கும்படி விவசாயிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள். பிரச்னைக்கு தீர்வுகாண உறுதுணையான கருத்துருவை வழங்கும் படி, விவசாயிகள் மத்திய அரசுக்கு பதில். புதிய நாடாளுமன்ற கட்டிடம் இந்திய சுயசார்பு தன்மைக்கு, சாட்சியாக விளங்கும் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் ஜே.பி நட்டா சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல்.
5 ஆண்டு ஆட்சியில் ஆண், பெண் என தலா இரண்டரை ஆண்டு ஏன் சமமாக ஆளக் கூடாது என துணை முதல்வர் ஓ.பி.எஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோர்களின் கருத்துகளைக் கேட்டு, முதல்வர் முடிவெடுப்பார் எனத் தெரிவித்துள்ளார். அரக்கோணம் அருகே மழையில் நனைந்த 15000 நெல் மூட்டைகள் சேதம். நெல் மணிகள் முளைத்ததால் விவசாயிகள் வேதனை.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
நடிகர் ரஜினிகாந்த்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் ரஜினிகாந்த் அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் @rajinikanth அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) December 11, 2020
சென்னையில் விதிகளை மீறிய சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “விதிகளை மீறி, சென்னை மாநகராட்சியில் 8 இடங்களில் சுங்கச்சாவடிகள்! சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன்
ஏற்பாட்டில் நடைபெற்ற #Dont_Want_Tollgate என்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் இந்த ஆட்சி மீதான மக்களின் கோபத்தைக் காட்டுகிறது. சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும்!” என்று தெரிவித்துள்ளார்.
விதிகளை மீறி, சென்னை மாநகராட்சியில் 8 இடங்களில் சுங்கச்சாவடிகள்!
சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் @Subramanian_ma ஏற்பாட்டில் நடைபெற்ற #Dont_Want_Tollgate என்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் இந்த ஆட்சி மீதான மக்களின் கோபத்தைக் காட்டுகிறது.
சுங்கச்சாவடிகளை அகற்றும் வரை போராட்டம் தொடரும்! pic.twitter.com/ws0FkRcuTx
— M.K.Stalin (@mkstalin) December 11, 2020
பாரதியார் பிறந்தநாளான இன்று வானவில் பண்பாட்டு மையம் சார்பில் காணொளி வாயிலாக நடைபெறுகிற பாரதியார் சர்வதேச விழாவில் பிரதமர் மோடி தலைமை உரையாற்றுகிறார்.
பாரதியாரிடம் இருந்து இன்றைய இளைஞர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Addressing the International Bharati Festival. https://t.co/paQYLDcj7k
— Narendra Modi (@narendramodi) December 11, 2020
நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த பொன்மணி பாஸ்கர் ஏற்கனவே வெற்றி பெற்றார். இதையடுத்து, சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் வெற்றி பெற்றார்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று வழக்கு. தமிழக அரசு இதற்கு வருகின்ற ஜனவரி 6ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று வழங்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ஐதராபாத் நிலோஃபெர் மருத்துவமனை முன் மருத்துவர்கள் போராட்டம்.
Hyderabad: Members of the Indian Medical Association & junior doctors of Niloufer Hospital stage protest demanding the withdrawal of Centre's order allowing Ayurvedic physicians to do allopathic surgery. pic.twitter.com/BmJFoqeUHm
— ANI (@ANI) December 11, 2020
மீனாட்சி கோயிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைப்பது எப்போது என்று கேள்வி எழுப்பிய மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தீயணைப்பு நிலையம் அமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வருகிற 18ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. மக்கள் நலனில் அக்கறை கொண்டு வழக்கு பதிவு செய்த இஸ்லாமியருக்கு பாராட்டு.
"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று அன்றே முழங்கிய முண்டாசுக் கவிஞன் பாரதியை அவர்தம் பிறந்தநாளில் வணங்கி போற்றுகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று அன்றே முழங்கிய முண்டாசுக் கவிஞன் பாரதியை அவர்தம் பிறந்தநாளில் வணங்கி போற்றுகிறேன். pic.twitter.com/GAB0yJIu5u
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 11, 2020
பாரதியாரின் 138-வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து. நாட்டின் இன்றைய நிலையை நினைக்கும்போது 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.
'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்ற மகாகவி பாரதியின் இல்லத்தை அரசு இல்லமாக்கி - சென்னையில் சிலை வைத்து சிறப்பித்தது திமுக அரசு.
அவரது பிறந்தநாளில் 'என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்ற வரி நாட்டு நிலைமையை நினைவூட்டுகிறது.
வாழ்க பாரதி புகழ்! pic.twitter.com/m3bwiIHmP7
— M.K.Stalin (@mkstalin) December 11, 2020
ஊருக்கு நல்லது சொல்வேன்; எனக்குண்மை தெரிந்தது சொல்வேன் என்று முழங்கிய பாரதி, வாழ்நாளெல்லாம் நெஞ்சில் உரத்தோடும் நேர்மைத் திறத்தோடும் உண்மையைப் பாடினான்.
என் நெஞ்சில் நின்று வழிகாட்டும் அந்த முன்னோனுக்கு என் முதல் வணக்கம்.— Kamal Haasan (@ikamalhaasan) December 11, 2020
பாரத தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஜெயந்திக்கு எனது அஞ்சலி. இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி ஆவார். பாரதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக விளங்கினார் என, பாரதியாரின் 139-வது பிறந்த தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட்
பாரத தாயின் புதல்வன் மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்களின் ஜெயந்திக்கு எனது அஞ்சலி. இவர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான ஒரு முன்னோடி ஆவார். பாரதி தேசிய ஒற்றுமையின் சின்னமாக விளங்கினார். இவரின் தேசபக்தி கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தின் போது மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளித்தன. pic.twitter.com/CMHFXTCIHe
— Amit Shah (@AmitShah) December 11, 2020
புதிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அம்சங்கள்
* தற்போதுள்ள மக்களவை அரங்கத்தின் அளவை காட்டிலும் 3 மடங்கு பெரியதாக இருக்கும்
சுமார் 900 இருக்கைகள் இருக்கும்* மாநிலங்களவைக்கான அரங்கத்தில் 384 இருக்கைககள் இருக்கும் #NewParliament4NewIndia pic.twitter.com/3FIcWCYnfE
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) December 11, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights