Tamil News Today : மெரினா கடற்கரை சாலையில் 72வது குடியரசு தின விழா தொடங்கியது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடி ஏற்றினார் .
ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்
நாட்டின் 72-வது குடியரசு தினத்தையொட்டி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து .குடியரசு தின விழாவில் பங்கேற்க ஆவலாக இருந்தேன், ஆனால் கொரோனா காரணமாக பங்கேற்க முடியவில்லை என போரிஸ் ஜான்சன் வருத்தம்.
முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு.
3 நாள் தமிழக பயணத்தை முடித்து கொண்டு, மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் ராகுல் காந்தி.மூவர்ண வண்ண விளக்குகளால் அலங்காரம்... ஜொலிக்கும் விமான நிலையம்
தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியல் வெளியீடப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகள் பட்டியல் அரசிதழில் வெளியீடு.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்தார்.
Live Blog
News In Tamil : இன்றைய முக்கியச் செய்திகள் தொடர்பான தமிழ் லைவ் பிளாக் இது. இதில் தமிழகம், இந்தியா, உலகம் சார்ந்த முக்கிய செய்திகளின் அப்டேட்டை உடனுக்குடன் தமிழில் காணலாம்.
அரசு செலவில், சுயநல நோக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைப்பது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம் வேறு எதுவும் இருக்க முடியாது என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று முதலில் சொன்னவர்கள் நாங்கள் அல்ல. இன்றைக்குத் துணை முதலமைச்சராக இருக்கிற பன்னீர்செல்வம் தான். குற்றச்சாட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில், இதுவரை நேரில் சென்று வாக்குமூலம் அளித்து, மரண விபரம் வெளிவர உதவாத பன்னீர்செல்வத்துக்கு, ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புவிழாவுக்கு முன்னிலை வகிக்க வெட்கமாக இல்லையா? உள்ளத்தில் உறுத்தல் ஏற்பட வில்லையா? என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இன்று போராட்டம் கையாளப்பட்ட விதம் வருந்தத்தக்கது. நாங்கள் அனைவரும் (எதிர்க்கட்சிகள்) விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கிறோம். நீங்கள் (விவசாயிகள்) அந்தந்த பகுதிகளுக்கு அமைதியாக திரும்பிச் செல்ல வேண்டும். உங்களைக் குறை கூற அரசுக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கக்கூடாது என்ற வேண்டுகோளை விடுக்கின்றேன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் 9102 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. முன்னதாக கடந்த 2020 ஜூன் 4-ஆம் தேதி நாளொன்றுக்கு புதிய பாதிப்புகள் 9304 ஆக இருந்தது.
8 மாதங்களுக்குப் பிறகு நாளொன்றுக்கு நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை 120 க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 117 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
Delhi: Latest visual from Red Fort. https://t.co/R6le6MZw5A pic.twitter.com/eOf1hWFfpw
— ANI (@ANI) January 26, 2021
‘சிறுமியின் மார்பகத்தை ஆடைக்குமேல் பிடித்தால் அது போக்ஸோ சட்டத்தின்கீழ் குற்றம் ஆகாது’ என மும்பை உயர்நீதிமன்றம் அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு இதனால் கேள்விக்குறி ஆகியுள்ளது என விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்தார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், " தமிழகத்தில் அமைதியாக நடந்த ஜல்லிக்கட்டு, ஸ்டர்லைட் போராட்டங்களை எப்படி வன்முறையாக்கினார்களோ, அதேபோல வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணியையும் அங்குள்ள காவல்துறையினர் வன்முறைக் களமாக்கியுள்ளனர். வன்முறையில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். தலைநகரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பிரச்சினையையும் பேசி தீர்க்க முடியும் என்ற நிலையில், மத்திய அரசாகட்டும், இங்குள்ள அடிமை அரசாகட்டும் மக்கள் போராட்டங்களை துப்பாக்கி மூலம் அடக்க முயற்சிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளன. ஜனநாயகத்தை போற்றுகிற குடியரசு தினத்தில் சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துவிடுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. 'நானும் விவசாயி' என்று நாடகம் போடுபவர்கள் அமைதி காக்கலாம். உண்மையான விவசாயிகளும், பொதுமக்களும் இந்த அக்கிரமங்களை சகித்துக் கொள்ளமாட்டார்கள்" என்று பதிவிட்டார்.
டெல்லி செங்கோட்டையை முற்றிகையிட்டுள்ள விவசாயிகளின் டிராக்டர் பேரணி. #Redport | #delhiprotest | #FarmersProstests | #FarmersProtest | #FarmLaws2020 | #RepublicDay#RepublicDayIndia | @IndianExpress | @IeTamil pic.twitter.com/eeEuX3qaMo
— IE Tamil (@IeTamil) January 26, 2021
#BreakingNews
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ள விவசாயிகளை மீது போலீஸ் தடியடி நடத்தி வருகின்றது#Redport | #delhiprotest | #FarmersProstests | #FarmersProtest | #FarmLaws2020 | #RepublicDay#RepublicDayIndia | @IndianExpress | @IeTamil pic.twitter.com/gnJceZYt8O— IE Tamil (@IeTamil) January 26, 2021
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையை முற்றுகையிட்டு விசாயிகள் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர். #Redport | #delhiprotest | #FarmersProstests | #FarmersProtest | #FarmLaws2020 | #RepublicDay
#RepublicDayIndia | @IndianExpress | @IeTamil pic.twitter.com/AAakuMcdzZ— IE Tamil (@IeTamil) January 26, 2021
புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.#Redport | #delhiprotest | #FarmersProstests | #FarmersProtest | #FarmLaws2020 | #RepublicDay #RepublicDayIndia | @IndianExpress | @IeTamil pic.twitter.com/PjI4Pz9tge
— IE Tamil (@IeTamil) January 26, 2021
டெல்லியில் இன்று நடைபெற்ற டிராக்டர் பேணியில், போலீசாராகுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், டெல்லியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. மேலும் இந்த போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை .சசிகலா உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது .சசிகலா உடலில் சர்க்கரை அளவு 178-ஆகவும், ஆக்சிஜன் அளவு 97-ஆகவும் குறைந்துள்ளது.கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை.
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கான 'காந்தியடிகள் காவலர் பதக்கம்' வழங்கப்பட்டது . பெண் ஆய்வாளர் மகுடீஸ்வரி, உதவி ஆய்வாளர் செல்வராஜ், தலைமைக் காவலர்கள் சண்முகநாதன், ராஜசேகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்; ஜெய்ஹிந்த்.
देशवासियों को गणतंत्र दिवस की ढेरों शुभकामनाएं। जय हिंद!
Wishing all the people of India a Happy #RepublicDay. Jai Hind!
— Narendra Modi (@narendramodi) January 26, 2021
கொரோனா உறுதியான நிலையில் 2 மாணவர்கள், ஒரு மாணவி திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
டெல்லியை நோக்கி படையெடுக்கும் டிராக்டர்கள்: பிரம்மாண்ட பேரணியை தொடங்கிய விவசாயிகள் .
தமிழகத்தில் வீரதீர செயல்களை புரிந்த 3 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதல்வர் பழனிசாமி. குடியரசுதின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights