Tamil News Today : திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் மறைமுகமாக உதவி வருகின்றனர், அதை அதிமுக முறியடிக்கும். சசிகலா, டிடிவி தினகரன் குறித்து மறைமுக விமர்சனம் செய்தார் முதல்வர் பழனிசாமி. .
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் அவலநிலை குறித்து விவாதிக்க மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைக்க கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக, இந்திய கம்யூ., ஆம் ஆத்மி மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 420 ரன்கள் இலக்கு செய்யப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு கட்சி கொடியுடன் கார் வழங்கியவர், வரவேற்பு அளித்தவர்கள் என 7 பேரை அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை குற்றவாளியாகத்தான் பார்க்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
துபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எம்.டெக்., பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Live Blog
Tamil Nadu News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
NLCநிறுவனத்தில் பொறியாளர் பணிக்கான தேர்வில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் எட்டுபேரும் தமிழரல்லாதோர் 1550 பேரும் தேர்வாகியுள்ளனர். எனவே, அத்தேர்வை ரத்துசெய்து தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை வழங்கும் தேர்வுமுறையை வலியுறுத்தி பிப் 15அன்று நெய்வேலியில் தொல். திருமாவளவன் தலைமையில் விசிக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்தார். அதில், " உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ரிஷிகங்கா ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் அதன் துணை ஆறு அலகண்டா ஆகியவற்றில் கடந்த 7-ம் தேதி காலை 10 மணிக்கு பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் ரிஷிகங்கா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் அங்கு அமைக்கப்பட்டிருந்து 13.2 மெகா திறன் கொண்ட நீர் மின்சக்தி நிலையம் அடித்துச் செல்லப்பட்டது. தவுலி கங்கா ஆற்றில் தபோவன் பகுதியில் கட்டப்பட்டு வரும் 520 மெகா வாட் நீர் மின் நிலையத்தையும், வெள்ளம் சேதப்படுத்தியது. இச்சம்பவத்தால், இதுவரை 20 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் உத்தரகாண்ட் அரசு கூறியுள்ளது. 197 பேரை காணவில்லை. இவர்களில் 139 பேர் என்டிபிசி மின் நிலைய கட்டுமான திட்டத்தில் ஈடுபட்டவர்கள். 46 பேர் ரிஷி கங்கா திட்ட பணியில் ஈடுபட்டவர்கள், 12 பேர் கிராம மக்கள்" என்று தெரிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க.வை கைப்பற்றி தி.மு.க.விற்கு மறைமுகமாக உதவ சிலர் முயற்சிக்கின்றனர். அதிமுக அதனை முறியடிக்கும். 10 ஆண்டுகள் உருப்பினராக இல்லாத டிடிவி தினகரன் அதிமுக கட்சியை கைப்பற்ற நினைக்கிறார். அவரை, நம்பி சென்றவர்கள் தற்போது நடுத்தெருவில் உள்ளனர் என்று முதல்வர் தனது தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தார்.
கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் "கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை(Feb-9) இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன். "யாரும் யாருக்கும் அடிமை இல்லை" என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் என்று துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிமன்ற அவமதிப்பு அதிகாரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்புகள் 129 & 215 ஆகியவற்றில் செய்யவேண்டிய திருத்தங்களை முன்மொழிந்து தனிநபர் மசோதா ஒன்றை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
09-02-2021 | Press Meet Highlights from #Puducherry . pic.twitter.com/697rz27LOb
— CMOPuducherry (@CMPuducherry) February 9, 2021
புதுவை மாநில அந்தஸ்து நிறைவேற்ற தேர்தலை புறக்கணிக்க தயாராக இருப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் இன்று மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட, கே.புதூர் பேருந்து நிலையம் அருகில் தொழுவம் அமைப்போர், மேய்ப்பர் சங்கத்தினரை சந்தித்து திமுக எம்.பி கனிமொழி உரையாடினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 24,56,291 பேர், ரூ.3,239.5 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுள்ளனர். 1.59 கோடி பேர், 24,321 மருத்துவமனைகளில் சேர்ந்து ரூ.19,714 கோடி மதிப்பிலான சிகிச்சை பெற்றுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை விமான சரக்கக சுங்கத்துறை: விமான சரக்கக ஏற்றுமதி தளத்தில் தோஹாவிற்கு (கத்தார்) டிஜிட்டல் எடை கருவியில் மறைத்து அனுப்பப்படவிருந்த ரூ. 5.1 கோடி மதிப்புள்ள 44 kg ஹாஷிஷ் & 700 gm மெத் படிகங்கள் NDPS சட்டப்படி கைப்பற்றப்பட்டன. ஏற்றுமதியாளர் & CHA அலுவலர் கைது.
மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் வரையறுத்துள்ள இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஓராண்டில் மட்டும் 902 இடங்களை OBC , SC&ST மாணவர்கள் இழந்திருக்கிறார்கள். இழந்ததே மொத்த இடங்களில் 13%. ஓராண்டில் இதுவெனில்,கடந்த காலங்களில் எவ்வளவு பறி போயிருக்கும்? என மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.
நாடு முழுவதும் இதுவரை 63.10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 2ம் கட்டம் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் பிப்ரவரி 13ம் தேதி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். எல்லைப் பகுதியில் சீனாவைவிட இந்திய ராணுவமே அதிகம் அத்துமீறியதாக வி.கே.சிங் பேசியிருந்த நிலையில் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிப்ரவரி 14, 15, 16 தேதிகளில் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அவருடைய தேர்தல் பிரச்சார பயணத்திட்டம் மார்ச் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விவசாய போராட்டத்தில் அரசுக்கு எதிராக செயல்படும் 1,178 கணக்குகளை நீக்கும்படி மத்திய அரசு வலியுறுத்திய நிலையில், ட்விட்டர் நிர்வாகம், விதிகளை மீறினால் நிச்சயம் கணக்குகள் நீக்கப்படும் என்று பதில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ: “சட்டப்பேரவை தேர்தல் தேதியை முடிவு செய்ய உள்ளூர் விடுமுறை தேதி குறித்த தகவல்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
என்ற தகவலை தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் வருகை ஆளும் கட்சியினருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பின்போது விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்த சம்பவத்தில், செங்கோட்டையில் நடந்த வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்து டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் இன்று கைது செய்தனர்.
சசிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி மூலம் விசாரித்தார். சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் உள்ளிட்ட 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் . சசிகலா, தேர்தலில் போட்டியிட சட்டவாய்ப்பு இருப்பதால், நிச்சயம் அவர் போட்டியிடுவார் என நம்பிக்கை உள்ளது என அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மழையால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிமுக எம்பி ரவீந்தரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights