Tamil News Today : தமிழ்நாடு மற்றும் இந்தியா சார்ந்த செய்திகளின் தொகுப்பை உடனடி அப்டேட்களுடன் இந்தத் தளத்தில் காணலால். லேட்டஸ்ட் செய்திகளை அறிய இணைந்திருங்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் லைவ் ப்ளாக் இது!
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மழை தொடர்கிறது. நாளை தீபாவளி தினத்தன்றும், அடுத்த நாளும்கூட மழை தொடர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் இன்று கன மழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
தீபாவளியையொட்டி சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வார விடுமுறை நாளான இன்று செயல்படுகிறது. இன்றைக்கு பதில் தீபாவளிக்கு மறுநாளான ஞாயிறன்று கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை தி.நகர் உள்ளிட்ட வணிக பகுதிகளில் மக்கள் சமூக இடைவெளியை மறந்து பெருமளவில் கூடி, தீபாவளி பர்சேஸ் செய்யும் காட்சிகள் பலரையும் அதிர வைத்திருக்கிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு 9,510 பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமானது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி நகரங்களுக்கு விமானக் கட்டணமும் 2 அல்லது 3 மடங்காக உயர்ந்தது.
சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் விற்பனை செய்யப்படுகிறது
Live Blog
Tamil News : செய்திகளின் தொகுப்பை உடனடி அப்டேட்களுடன் இந்தத் தளத்தில் காணலாம். லேட்டஸ்ட் செய்திகளை அறிய இணைந்திருங்கள்.
நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “அநாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் மக்கள் தீப ஒளி ஏற்றுமாறு” கேட்டுக்கொண்டுள்ளார்.
முதல்வர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து செய்தியில், “அகந்தை எனும் இருள் விலகி ஆனந்தம் எனும் ஒளி பெருக வாழ்த்துகிறேன். இன்பங்கள் பெருகி அனைத்து நலமும் வளமும் பெற்று ஒற்றுமை, மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன், “அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா பதவியில் நீடிக்க கூடாது; இடைநீக்கம் செய்ய வேண்டும். சூரப்பா தொடர்ந்து பதவியில் நீடிப்பது விசாரணைக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
தமிழகம் - கர்நாடகா இடையே வரும் 16ஆம் தேதிக்கு பிறகும் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் தீபாவளியையொட்டி, வரும் 16ஆம் தேதி வரை பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சிறுபனையூர் தக்கா கிராமத்தில் ஷான் என்பவர் மீது ஹாரூண் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஷான் உயிரிழந்தார். ஹாரூன் உரிமம் பெற்ற கைத் துப்பாக்கியை வைத்து சுட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹாரூன் மனைவியுடன் ஷான் தவறான உறவில் இருந்ததால் துப்பாக்கியால் சுட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழறிஞர் இராம.இருசுப்பிள்ளை மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
திருவாசகச் சொல்லகராதி, திருக்கோவையார் சொல்லகராதி உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதிய தமிழறிஞர் இராம. இருசுப்பிள்ளை காலமான செய்தி அறிந்தேன். தமிழ் முனிவராக வாழ்ந்து தமிழ்ப் பணியாற்றிய இருசுப்பிள்ளையின் பெயர் வரலாற்றில் நிலைக்கட்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 13, 2020
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு. அரியர் விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக சூரப்பா மீது புகார் எழுப்பப்பட்டதாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தெரிவித்துள்ளார். இதனை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்ப்பு. இது சம்பந்தமாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தாக்கல் செய்துள்ளது. சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை காவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட 6 போலீசார் சேர்க்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை, தடயவியல் ஆய்வு மைய அறிக்கையும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
சென்னை யானைகவுனியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புனேவில் வைத்து 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொலையான சீத்தலின் மனைவி ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக தாய், தந்தை, மகன் ஆகிய 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
சென்னை யானைகவுனியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புனேவில் வைத்து 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொலையான சீத்தலின் மனைவி ஜெயமாலா உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக தாய், தந்தை, மகன் ஆகிய 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் முருகன் நேற்று சந்தித்தார். வேல் யாத்திரைக்கு அரசு தடை விதித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. எனினும் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவே அவர்களை தனித்தனியே சந்தித்ததாக முருகன் குறிப்பிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights