Advertisment

News Highlights: ஜெ. மரணம் விசாரணை ஆணையம் 9-வது முறையாக கால நீட்டிப்பு- அரசுக்கு கடிதம்

News In Tamil : அரசியல், சமூகம், காலநிலை, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் இந்தத் தளத்தில் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

author-image
WebDesk
New Update
News Highlights: ஜெ. மரணம் விசாரணை ஆணையம் 9-வது முறையாக கால நீட்டிப்பு- அரசுக்கு கடிதம்

Tamil News Today : செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொழியில் தருவதற்கான தளம் இது. அரசியல், சமூகம், காலநிலை, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் இந்தத் தளத்தில் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Advertisment

தமிழகத்தில் பெரிய கட்சிகளில் ஒன்றான அதிமுக.வை, எம்.ஜி.ஆர். உருவாக்கிய தினம் இன்று (அக்டோபர் 17). இன்று அ.தி.மு.க. 49-வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதையொட்டி அதிமுக அலுவலகத்தில் இன்று, துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்று கொடியேற்றி, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் அந்தக் கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்கள்.

சென்னையில் கிண்டி, வடபழனி, தி.நகர், மாம்பலம், விமான நிலையம், பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து நல்ல காலநிலை நிலவியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டனர்.

சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Live Blog

News In Tamil : அரசியல், சமூகம், காலநிலை, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் இந்தத் தளத்தில் நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.



























Highlights

    23:35 (IST)17 Oct 2020

    ஷிகர் தவான் அதிரடி சதம்; டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த சி.எஸ்.கே 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா ரன் ஏதுமின்றி அவுட் ஆனார். அடுத்து வந்த ரஹானே 8 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிராடியா விளையாடி 57 பந்துகளில் 100 ரன் அடித்தார். இதனிடையே, ஷ்ரேயஸ் ஐயர் 23 ரன்களும், அலெக்ஸ் கேரி 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அக்சர் பட்டேல் 5 பந்துகளில் 21 ரன் எடுத்தார். டெல்லி அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவான் 58 பந்துகளில் 101 ரன் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    22:05 (IST)17 Oct 2020

    385 மருத்துவர்கள் பணி நீக்கம்... கேரள அரசு அதிரடி நடவடிக்கை

    கேரளாவில் அங்கீகரிக்கப்படாத விடுமுறையில் இருந்ததால் 385 மருத்துவர்கள் 432 மருத்துவ ஊழியர்களை பணி நீக்கம் செய்து சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உத்தரவிட்டுள்ளார்.

    22:03 (IST)17 Oct 2020

    ஜெ. மரணத்தை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் கால நீட்டிப்பு கேட்டு கடிதம்

    ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஒன்பதாவது முறையாக காலநீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 8வது முறையாக கொடுத்த காலக்கெடு அக்டோபர் 24ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் மேலும் நீட்டிக்க கோரி கடிதம் எழுதப்படுள்ளது.

    21:24 (IST)17 Oct 2020

    சிஎஸ்கே 179 ரன்கள் குவிப்பு; ஜடேஜா அதிரடி

    சி.எஸ்.கே.வில் முதலில் களம் இறங்கிய சாம் கரன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் அனார்.

    அவருடன் களம் இறங்கிய டு பிளஸிஸ் 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    ஷேன் வாட்சன் 38 ரன்கள் எடுத்தார்.

    தோனி 3 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அம்பத்தி ராயுடு 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 33 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    20 ஓவர் முடிவில் சி.எஸ்.கே 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது.

    21:04 (IST)17 Oct 2020

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி : சி.எஸ்.கே பேட்டிங் தேர்வு

    டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    21:03 (IST)17 Oct 2020

    ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

    ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பெங்களூரு அணி 19.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    20:19 (IST)17 Oct 2020

    நீட் தேர்வில் குளறுபடி; கோவை மாணவர் மனோஜ் புகார்

    நீட் தேர்வு எழுதிய கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த மாணவர் மனோஜ் நீட் தேர்வி குளறுபடி நடந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். அக்டோபர் 11ம் தேதி வெளியிடப்பட்ட நீட் தேர்வு ஓ.எம்.ஆர் சீட்டில் 594 மதிப்பெண் காட்டிய நிலையில் நேற்று வெளியான நீட் தேர்வு முடிவில் 294 மதிப்பெண் என மாறிவந்ததால் மாணவர் மனோஜ் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து நீட் தேர்வு முகமையிடம் புகார் தெரிவித்தால் முறையான பதில் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    19:59 (IST)17 Oct 2020

    கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முதல்வராகலாம்; தமிழகத்துக்கு ஆகமுடியாது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முதல்வராகலாம்; தமிழகத்துக்கு ஆகமுடியாது” என்று தெரிவித்துள்ளார்.

    19:57 (IST)17 Oct 2020

    திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனின் மகன் மரணம்; துணை முதல்வர் ஓ.பி.எஸ் இரங்கல்

    திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன் மறைவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அன்பு மகனின் பிரிவால் துயருற்றிருக்கும் சுப்பிரமணியம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

    18:29 (IST)17 Oct 2020

    கொரோனா தடுப்பூசி - பிரதமர் தலைமையில் ஆய்வு

    நாட்டின் கொவிட்-19 பெருந்தொற்று சூழல் மற்றும் தடுப்பூசி வழங்குதற்காக தயார் படுத்துதல், விநியோகம் மற்றும் நிர்வாகம் குறித்து பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்தியாவில் முன்னெடுக்கப்படும் மூன்று தடுப்பூசிகள் முன்னேற்ற நிலையில் இருக்கின்றன. இதில் இரண்டு தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட சோதனையிலும், ஒரு தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையிலும் உள்ளது.

    18:17 (IST)17 Oct 2020

    பெங்களுரு அணி வெற்றி பெற 178 ரன் இலக்கு

    ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் துபாயில் நடைபெற்று வரும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களுரு அணி வெற்றி பெற 178 ரன் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    17:47 (IST)17 Oct 2020

    தமிழக அரசு பயிற்சி மையங்கள் மூலம் 1615 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி

    மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழக அரசு பயிற்சி மையங்கள் மூலம் 1615 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.   

    தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 57 புள்ளி நான்கு நான்கு சதவீதம் பேர் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணுக்கும் கூடுதலாகப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.   

     

    16:33 (IST)17 Oct 2020

    சாத்தான்குளம் கொலை வழக்கு, காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன்

    சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் (ஜெயராஜ்-பென்னிக்ஸ்) சிறை மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவலர் தாமஸ் பிரான்சிஸ்க்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட்டது.

    உயிரிழந்த தந்தையின் இறுதி சடங்கை நிறைவேற்றும் பொருட்டு இந்த 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

    15:35 (IST)17 Oct 2020

    நீட்’தேர்வை ரத்து செய்ய வேண்டும் - தொல் . திருமாவளவன்

    பணம் உள்ளவர்களுக்கே மருத்துவப் படிப்பு என்ற நிலையை உருவாக்கியுள்ள

    நீட்’தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக அரசுக்கு வலியுறுத்தினார்.  

    15:12 (IST)17 Oct 2020

    ஸ்மார்ட் கார்டு ஸ்கேனிங் முறையில் ரேஷன் பொருட்கள்

    நியாய விலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுவதால், ஸ்மார்ட் கார்டு ஸ்கேனிங் முறையிலேயே தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

    14:50 (IST)17 Oct 2020

    ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் - விஜயபாஸ்கர்

    நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது என விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.ஓபிசி இட ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு தமிழக அரசு இட ஒதுக்கீட்டை பெற்றே தீரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    14:48 (IST)17 Oct 2020

    பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்த அறிவிப்பு - ராமதாஸ் வரவேற்பு

    பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பிரதமர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. பெண்கள் உயர்கல்வி பெறவும், வாழ்க்கையில் சாதிக்கவும் இது அவசியமாகும்! என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.  

    14:45 (IST)17 Oct 2020

    மு.க ஸ்டாலின் இரங்கல்

    அருமைச் சகோதரர் மா.சுப்பிரமணியத்தின் மகன் அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தது நெஞ்சை உறைய வைத்துவிட்டது. மா.சுப்பிரமணியம் இணையர் கண்ணின் மணி போல் காத்துவந்தார்கள். ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. ஊரார்க்கு ஒன்று என்றால் ஓடி நிற்கும் மா.சு.வுக்கு இப்படியொரு சோதனையா? ஆழ்ந்த இரங்கல்கள்! என்று மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.   

    14:05 (IST)17 Oct 2020

    வானிலை நிலவரம்

    ”வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    13:44 (IST)17 Oct 2020

    அண்ணா பல்கலைக்கழக விவகாரம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் கருத்து

    அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விதிகளை மீறி செயல்பட்டால் அரசு வேடிக்கை பார்க்காது என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    13:15 (IST)17 Oct 2020

    ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம்

    நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது என டாக்டர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.ஓபிசி இட ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு தமிழக அரசு இட ஒதுக்கீட்டை பெற்றே தீரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    13:03 (IST)17 Oct 2020

    தமிழகத்தில் இலங்கையின் நிழல் உலக தாதாக்கள்

    இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக, தமிழக போலீசாருக்கு இன்டர்போல் ரெட் அலர்ட் தரப்பட்டுள்ளது. தமிழக கியூ பிரிவு போலீசாரால் இலங்கை நாட்டில் தேடப்பட்டு வந்த 'டான்' ஜெமினி‌ பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.

    12:26 (IST)17 Oct 2020

    நீட் தேர்வு முடிவுகள் மீண்டும் வெளியீடு

    நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதை தொடர்ந்து திருத்தப்பட்ட பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டது தேசிய தேர்வு முகமை 

    12:08 (IST)17 Oct 2020

    உடல்நலக் குறைவால் மா.சுப்பிரமணியத்தின் மகன் மரணம்

    திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியத்தின் மகன் அன்பழகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்ட நிலையில், தற்போது மரணமடைந்திருக்கிறார். 

    11:50 (IST)17 Oct 2020

    மா.சுப்பிரமணியத்தின் மகன் காலமானார்

    திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் (34) உயிரிழந்துள்ளார். 

    11:25 (IST)17 Oct 2020

    சென்னையில் தங்கம் விலை குறைவு

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.183 குறைந்து ரூ.4,680க்கு விற்பனையாகிறது. 

    10:59 (IST)17 Oct 2020

    அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

    தமிழக அரசின் நடவடிக்கை மற்றும் புதிய பாடதிட்டத்தால் நீட் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் பலன்பெறுவது தமிழகத்தில் தான் நிகழ்ந்துள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

    10:37 (IST)17 Oct 2020

    நீட் தேர்வு முடிவுகள் நீக்கம்

    நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி. தேர்ச்சி எண்ணிக்கைக்கும், தேர்ச்சி சதவிகிதத்திற்கும் முரண் ஏற்பட்டதை தொடர்ந்து, இணையதளத்தில் இருந்து நீட் தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டுள்ளனர். 

    10:25 (IST)17 Oct 2020

    முன்னாள் முதல்வர்களுக்கு முதல்வர் மரியாதை

    அ.தி.மு.கவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த கிராமத்தில் கட்சி கொடி ஏற்றினார். சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடந்த நிகழ்வில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். முதலமைச்சரின் சொந்த கிராமத்தில் நடைபெற்ற அ.தி.மு.க தொடக்க விழா கொண்டாட்டத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    09:44 (IST)17 Oct 2020

    நீட் குளறுபடி

    நீட் தேர்வு முடிவு குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் குளறுபடி. திரிபுராவில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு. 

    09:38 (IST)17 Oct 2020

    அதிமுக ஆண்டு விழா

    அதிமுகவின் 49-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சொந்த ஊரான சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக கொடியையேற்றினார் முதல்வரும், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி. 

    Tamil News Live: வெள்ளிக்கிழமை வெளியான நீட் தேர்வு முடிவுகளில், தமிழகத்தில் பெரியகுளம் அருகிலுள்ள சில்வார்பட்டி அரசு மாதிரிப் பள்ளி மாணவர் ஜீவித்குமார், இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.

    நீட் தேர்வில் தமிழகத்தில் 57.44% பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த சதவிகிதம், கடந்த ஆண்டைவிட அதிகம். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு 1.21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து, 99,610 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாணவர் ஸ்ரீஜன் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில் 8வது இடமும் பெற்றுள்ளார்.

    அகில இந்திய அளவில் முதல் 40 இடங்களில் ஸ்ரீஜன் மட்டுமே இடம்பிடித்துள்ளார். மாநில அளவில் மாணவி மோகன பிரபா 2வது இடம் பெற்றிருக்கிறார்.

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment