Tamil News Today Live : தமிழகம் முழுவதும் 2-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் வழக்கத்தை விட குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பல மாவட்டங்களில் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் என போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் கூறின.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கம்யூ. கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுல்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியீடு. கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க அறிவுறுத்தல்
போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி தொமுச, சிஐடியு உள்ளிட்ட ஒன்பது சங்கங்கள் இன்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகிறது, நீண்ட நேரக் காத்திருப்பால் பொதுமக்கள் அவதி.
சென்னையில் 20 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல்.
பாலியல் புகாருக்கு உள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு.
பிப்ரவரியில் 3ஆம் முறையாக ரூ.25 விலை உயர்ந்து ஒரு சிலிண்டரின் விலை ரூ.785லிருந்து ரூ.810ஆக அதிகரிப்பு.
Live Blog
Latest Tamil News : அரசியல்- வானிலை- சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த செய்திகளின் தொகுப்பாக இந்தத் தளம் அமையும்.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7ம் தேதி கூகாலை 10 மணிக்கு கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் டுகிறது திமுக பொதுக்குழு. நடைபெறுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
சிவகாசி அருகே காளையார் குறிச்சியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். பட்டாசுகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, திமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்சியை தர முடியாது என கடுமமையாக விமர்சித்துள்ளார். மேலும் ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா என தெரிவித்துள்ளார்.
கோவையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “இந்திய தொழில் வளர்ச்சிக்கு தமிழகத்தின் பங்கு அளப்பரியது. அனல் மின் நிலையங்களை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி. மிகப்பெரிய திட்டங்களை தமிழகத்திற்கு தந்துள்ளோம். இந்த திட்டங்கள் தமிழகத்திற்கு நன்மை பயக்கும்” என்று கூறினார்.
ரூ.107 கோடி செலவில் 9 ஸ்மார்ட் நகரங்களில் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் சிட்டி கட்டுப்பாடு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்ட குடியிருப்புகளைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி
கோவையில் பிரதமர் மோடியை வரவேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “தமிழகத்தின் மீதும் தமிழக மக்கள் மீதும் தனி அன்புகொண்ட தனிப்பெரும் தலைவர் பிரதமர் மோடியை தமிழக மக்கள் சார்பில் வரவேற்கிறோம்” என்று வாழ்த்தி வரவேற்றார்.
கோவையில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு; முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோரும் பங்கேற்கிறார்கள். அரசு விழாவுக்கு பிறகு கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
புகார்களை கையாள்வதற்காக ஒவ்வொரு சமூகவலைதள நிறுவனங்களும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் புகாரளித்த 24 மணி நேரத்திற்குள் பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளம் நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ள காரணமாக கோவை, நீலகிரி, தேனீ, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லெஸ்ஸான் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையில் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியுவின் சவுந்திரராஜன், “கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்காததால் வேலைநிறுத்தம் தொடரும். அரசு அறிவித்த 1000 ரூபாய் இடைக்கால நிவாரணம் ஏற்க கூடியதாக இல்லை” என கூறினார்.
புதுச்சேரியில் உரையாற்றிய மோடி, முந்தைய காங்கிரஸ் அரசு அனைத்து துறைகளையும் சீர்குலைத்தது என்றும் காங்கிரஸ் ஆட்சியிலிருந்து புதுச்சேரி மக்களுக்கு விடுதலை என்றும் தெரிவித்தார். அடுத்து அமையப் போகும் அரசு மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், வணிகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா ஆகியவற்றின் மையம் புதுச்சேரி என்று குறிப்பிட்ட அவர் புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவதே தனது முதல் தேர்தல் வாக்குறுதி என கூறினார்.
விழுப்புரம்-நாகை இடையே 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிறகு, காரைக்காலில் ரூ.491 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், பாரதியார் உள்பட பல கவிஞர்களின் தாய்வீடாக புதுச்சேரி இருக்கிறது என்றும் புதுச்சேரி மக்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என்றும் புகழாரம் சூடினார்.
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights