Tamil News Today Live thai poosam : பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறு நாட்களுக்குப் பிறகு சசிகலாவிற்கு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து மாறுபட்டு வருவதாகவும், அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முருகனின் மூன்றாம் படைவீடான பழனியில் தைப்பூச திருவிழா பழனியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவையொட்டி பழனி மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர் தைப்பூசத் திருநாளை ஒட்டி இன்று ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தை பார்வையிட உயர்நீதிமன்ற தனிநீதிபதி அனுமதி மறுத்த உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு ஸ்செய்துள்ளது.
நினைவு இல்லமாக மாற்றப்பட்டிருக்கும் ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா இல்லம்' இன்று திறக்கப்படுகிறது.
Live Blog
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக ,ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து மாறுபட்டு வருவதாகவும், அவருக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Forces at #ghazipurborder after DM ordered protesters to vacate @IndianExpress @ieDelhi pic.twitter.com/TtrJ9Sf5rB
— Ananya Tiwari (@Ananyati) January 28, 2021
இன்று இரவுக்குள் போராட்ட இடங்களில் வெளியேற வேண்டும் என்று காஜியாபாத் நிர்வாகம் உத்தரவிட்டதையடுத்து, டெல்லி-உ.பி. எல்லையில் பதற்றம் நிலவுகிறது. தோளில் தோட்டாக்கலைத் தாங்க தயாராக இருப்பதாக பாரதிய விவசாயிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார். காவல் படையும், விரைவு அதிரடிப் படையும் இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
We'll continue our sit-in protest & will not vacate site till talks with government are held. Administration has removed basic facilities including water & electricity supply. We'll get water from our villages: Bharatiya Kisan Union spokesperson Rakesh Tikait at Ghazipur border pic.twitter.com/oa9r39DMVw
— ANI (@ANI) January 28, 2021
பேச்சுவார்த்தையின் மூலம் உடன்பாடு எட்டப்படும் வரை எங்கள் உள்ளிருப்பு போராட்டத்தைத் தொடருவோம். எக்காரணத்தையும் முன்னிட்டு இடத்தை காலி செய்ய மாட்டோம். குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு நிர்வாகம் நீக்கியுள்ளது. இருப்பினும், கிராமங்களிலிருந்து நாங்கள் குடிநீர் பெறுவோம் என பாரதிய விவசாயிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை சிறப்பித்துக் கொண்டாடும்தைப்பூசம் தமிழக அரசால் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதை மகிழ்வோடு பகிர்ந்துகொண்டு, இத்திருநாளில் அனைத்து மக்களும் சீரோடும், சிறப்போடும் மகிழ்ச்சியாக வாழ முருகப்பெருமானை வணங்கி வேண்டிக்கொள்கிறேன் என முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டரில் பதிவிட்டார்.
தண்டனை பெற்றவருக்கு நினைவிடம்; திறந்து வைப்பவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்'' ஜெயலலிதா நினைவிடம் திறப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பேச்சு .
17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் உச்சபட்ச தண்டனையாக 44 ஆண்டுகள் சிறை தண்டனை. வழங்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights