Tamil News Highlights : 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவருக்கே முடிவு எடுக்கும் அதிகாரம் இருப்பதாக தமிழக ஆளுனர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதற்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தடுப்பூசிகளை வழங்கும் பணியில் இந்தியா தொடர்ந்து மிக வேகமாக செயல்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 745 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக வீரர்கள் அறிவிப்பு . விஜய் ஹசாரே போட்டியில் நடராஜன் தமிழக அணிக்காக விளையாடுகிறார்.
திருவாரூர் - காரைக்குடி இடையே ரயில் சேவையை அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை. மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பியிருந்த கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாளான இன்று, ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் நடைபெறும்.
சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவவரும் 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பால் நடவடிக்கை. இட நெருக்கடியை தவிர்க்க காலை, பிற்பகல் என வகுப்புகளை பிரித்து நடத்த உத்தரவு
Live Blog
Tamil News Live : தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
அமைச்சரவை தீர்மானத்தை ஆதரித்து, ஆளுநரை வலியுறுத்தி-அவர் கிடப்பில் போட்டதைக் கண்டித்து, உரையையும் புறக்கணித்தது திமுக! எல்லாவற்றிலும் திமுக வெளிப்படை! ஆனால் ஆளுநரை எதற்கோ சந்தித்து விட்டு வந்து 7 பேர் விடுதலை பற்றிப் பேசினேன் என்கிறார் முதல்வர் இதில் எது நாடகம் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
#Release7tamils அமைச்சரவை தீர்மானத்தை ஆதரித்து- ஆளுநரை வலியுறுத்தி-அவர் கிடப்பில் போட்டதைக் கண்டித்து, உரையையும் புறக்கணித்தது திமுக!
எல்லாவற்றிலும் திமுக வெளிப்படை!
ஆனால் ஆளுநரை எதற்கோ சந்தித்து விட்டு வந்து 7 பேர் விடுதலை பற்றிப் பேசினேன் என்கிறார் @CMOTamilNadu.
எது நாடகம்?
— M.K.Stalin (@mkstalin) February 4, 2021
இந்திய அணியின் ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சினை குறித்தும் பேசினோம் என தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் விராட்கோலி, நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் நாங்கள் கருத்து தெரிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
Today 15 MPs representing different political parties from Kashmir to Kanyakumari went to #GhazipurBorder to express solidarity with farmers & demand imm repeal of the 3 hated #FarmLaws. We also demand an end to atrocities being meted out to peacefully agitating farmers. pic.twitter.com/bvilkFFiLM
— Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) February 4, 2021
சொந்த நாட்டு விவசாயிகளை தடுக்க நாடாளுமன்றம் , உச்சநீதி மன்றம் ஆகியவற்றுக்கு அருகில் இருக்கும் போராட்ட எல்லையில் 14 அடுக்கு தடுப்பரண்களை அமைத்திருக்கிறார்கள். முள்வேலி, முள்கம்பி அமைத்திருக்கிறார்கள். இது என்ன மனித உரிமை ? போராடுவதற்கான அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை எங்கே? pic.twitter.com/WjA00GLppC
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 4, 2021
ஷிரோமணி அகாலிதள எம்.பி. சுக்பீர் சிங் பாதல் தலைமையில் 10 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 எம்.பி.க்கள் குழு காசிப்பூர் எல்லையில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற போது டெல்லி காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
I still #StandWithFarmers and support their peaceful protest.
No amount of hate, threats or violations of human rights will ever change that. #FarmersProtest— Greta Thunberg (@GretaThunberg) February 4, 2021
தேசிய தலைநகர் டெல்லி எல்லையில் 2 மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
உயர்மின் கோபுரங்கள் பிரச்சினையில் மின்துறை அமைச்சர் தங்கமணி அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அறவழியில் போராடிய பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 38 வழக்குகளைத் தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. எஸ் அழகிரி தெரிவித்தார்.
அந்நியநாட்டு எல்லையொரத்தில் குவிக்கப்படுவதுபோல தில்லி எல்லையில் துணைஇராணுவத்தினர் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
மோடி அரசு மிகமோசமான முறையில் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கிவருகிறது பகைவர்களை அணுகுவதுபோல விவசாயக் குடிமக்களை அணுகுவது கண்டனத்துக்குரியது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு-பையனூரில் MGR நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் "புரட்சித்தலைவி ஜெயலலிதா" படப்பிடிப்பு தளம் அமைக்க தமிழக அரசின் சார்பில் ரூ.3.50 கோடிக்கான காசோலையினை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணியிடம் முதல்வர் வழங்கினார்.
நாட்டில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கை 28 கோடியே 90 லட்சமாக அதிகரித்துள்ளது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், நாடு முழுவதும் 70 லட்சத்து 75 ஆயிரம் நுகர்வோர் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, துயரங்களைத் தாங்கி, சோதனை நெருப்பாறுகளைக் கடந்து வரும், தியாகத்தலைவியின் வருகையை
திருவிழா கோலம்பூண்டு வரவேற்போம்!
ஒரு தாய் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று தீயசக்தி கூட்டத்தைத் தலையெடுக்கவிடாமல் செய்திடுவோம்! pic.twitter.com/YxmsIEMrgb— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 4, 2021
சசிகலா வரும் 8-ம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா 7-ம் தேதி தமிழகம் வருவதாக இருந்த நிலையில், சசிகலாவின் வருகை 8ம் தேதிக்கு மாற்றம் என தகவல்.
அனைத்து மறைந்த முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது .வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கில் 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
எத்தனை தலைவர்களுக்குதான் நினைவிடங்களை உருவாக்கிக்கொண்டிருக்க போகிறீர்கள்? எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காசிப்பூர் எல்லையில் விவசாயிகளை சந்திக்கச் சென்ற எதிர்கட்சி எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தம் .எல்லைப் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், எம்.பி.க்களால் விவசாயிகளை சந்திக்க முடியவில்லை.
“ஒரு ட்வீட் ஒற்றுமையைக் குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குலைக்குமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்யவேண்டும். மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் பிரச்சாரகர்களாக மாறக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் கட்சியில் இருந்து நீக்கம் .கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம். கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கு எதிராக செயல்பட்டதால் நீக்கம் - அதிமுக தலைமை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights