Tamil News Today : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம். உயர் சிறப்பு அந்தஸ்து குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு கடிதம்.அமைச்சர்கள் அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகியோர் அடங்கிய குழு கடிதம்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளில் 2ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2ம் கட்ட வாக்குப்பதிவில் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் .
ஆப்கானிஸ்தானின் காபூல் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிசூடு சம்பவத்தில், மாணவர்கள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். பல்கலைக் கழகத்தில் ஈரானிய புத்தக கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக, அரசு அதிகாரிகள் வருகை தர இருந்தனர்.
இந்நிலையில், பல்கலைக்கழகத்திற்குள் தீவிரவாதி திடீரென நுழைந்த சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அதில், மாணவர்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
விருதுநகர் பொதுக்கூட்டத்தில் காணொளி வழியாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அரட்டல் உருட்டல் செய்யும் அமைச்சராகவே ராஜேந்திர பாலாஜி வலம் வௌர்கிறார். அதிமுகவில் பாஜக அணி என்று ஒன்று உள்ளது. அதில் முக்கிய நபர்களாக ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் உள்ளனர்” என்று அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.
பிரபல வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணா காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். “அன்பும் அடக்கமும் எளிமையும் இறைப்பற்றும் கொண்டவர் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணா; குறிப்பாக வயலின் இசையில் நாட்டம் கொண்டு பல சாதனைகள் புரிந்தவர்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,435 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 31 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 2,707 பேர் குணமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு கருத்தரங்குக்கு சென்றபோது விமானப் பயண டிக்கெட் மோசடி வழக்கில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசைனுக்கு 2 ஆண்டு சிறை விதிகப்பட்டுள்ளது.
சென்னையில் முதல்வர் பழனிசாமியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “வேல் யாத்திரைக்கு அனுமதி பெற நாட்கள் உள்ளன. நாங்கள் எதிர்ப்புக்கு அஞ்சுவோர் அல்ல. வேல் துள்ளி வரும்” என்று கூறினார்.
அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அரியர் மணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து அரசிடம் அனுமதி பெற்று தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, எஸ்பிளேனேடு, ஏழுகிணறு ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி பாஸ்கர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். புதிய மின் கட்டண இணைப்பு பெறுவதற்காக சுமார் ரூ.86 லட்சம் லஞ்சமாக பெற்றது அம்பலமாகியுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது. அதனால், தமிழக அரசு திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. திரையரங்குகளில் உள்ளேயும் வெளியேயும் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்; 50% இருக்கைகளில் மட்டுமே அமர்ந்து படம் பார்க்க அனுமதி, முகக் கவசம் அணியாதவர்களுக்கு திரையரங்குகளில் அனுமதி கிடையாது. நுழைவு வாயில்களில் கைகளால் தொடாமல் பயன்படுத்தக் கூடிய சானிடைசர்கள் பொருத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு வருகிற சட்டமன்ரத் தேர்தலில் கூட்டணி குறித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “திராவிட கட்சிகளுடன் கூட்டணி உன்டு... ஆனால், கழகங்களுடன் கூட்டணி இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை அமலா பாலின் முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங், தன்னோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அமலாவின் அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், பவ்னிந்தர் மீது சிவில் அவதூறு வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளார் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார்.
தீபாவளி நெருங்கி வரும் நிலையில், வருகிற 11-ம் தேதிமுதல் 13-ம் தேதிவரை சென்னையிலிருந்து 9,510 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 5,247 பேருந்துகள் என மொத்தம் 14,757 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வர 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 16,026 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடித்ததற்காக கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கு மதுரை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பவுள்ளது. மேலும், இந்த வழக்கு நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யச் சட்ட வரையறை செய்யப்பட்டுள்ளதா எனத் தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் சூதாட்டத்தில் புழங்கும் பணம் எங்கு? யார்? கணக்கிற்குச் செல்கிறது என்பது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 10 நாட்களில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது என்று உயர்நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்றுபோக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பண்டிகைக்காக சென்னையில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தமிழகத்தில் நவம்பர் 16 முதல் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு.
பள்ளிகள் திறப்பில் அவசரகோலமான அறிவிப்பு ஏன்? #COVID19 குறித்த ஆராய்ச்சிகள், எச்சரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டனவா?
பெற்றோர்- ஆசிரியர்- மருத்துவர்களுடன் ஆலோசனைகளைச் செய்தாரா @CMOTamilNadu?
ஜனவரி 2021-ல் அப்போதைய சூழலை ஆய்ந்துதான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும். pic.twitter.com/pWBggQXLW2
— M.K.Stalin (@mkstalin) November 3, 2020
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சரியான தருணம் அல்ல என எழுந்துள்ள கருத்துக்கள் எதிரொலி .பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு என தகவல் . கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நேற்று திடீரென ஆலோசனை நடத்தியதாக தகவல்.
நீட் தேர்வு கெடுபிடிகள் குறித்து மத்திய தேர்வு முகமை, மத்திய அரசு 4 வாரங்களில் பதில் மனுத்தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு .அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்உற்பத்தி, நுகர்பொருள் வாணிபக் கழகம், தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு போனஸ் .8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% போனசாக கிடைக்கும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights