Advertisment

சோகனூர் தலித் இளைஞர்கள் இருவர் கொலை: இதுவரை 5 பேர் கைது

அரக்கோணத்தில் முன்விரோதம் காரணமாக 2 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
சோகனூர் தலித் இளைஞர்கள் இருவர் கொலை: இதுவரை 5 பேர் கைது

ராணிக்பேடை மாவட்டம் அரக்கோணம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இரு இளைஞர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ள நிலையில, அப்பகுதியில் பதற்றமான சுழல் நிலவி வருவதால் ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

ராணிப்பேட்டை மாவட்டம்  அரக்கோணம் அடுத்துள்ள சோகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அர்ஜூனன் (26), சூர்யா (26), மதன், வல்லரசு, சவுந்தர்ராஜன். இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) குருவராஜப்பேட்டையில் உள்ள கடை ஒன்றின் முன்பாக  நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாகச் சென்ற பெருமாள்ராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த மாற்று சமூகத்தினர் சிலர் இவர்களை கிண்டல் செய்துள்ளனர். இதனால் இரு தரப்பினரும் வாக்குவாத்ததில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு இரு தரப்பினரும் கலைந்து சென்ற நிலையில், இரவு 8 மணியளவில் அர்ஜூனன், சூர்யா, மதன், சவுந்தர் ஆகியோர் கவுதம்நகர் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தபோது,, அங்கு வந்த பெருமாள் ராஜபேட்டை பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் திடீரென அவர்களை தாக்க முயன்றனர். இந்த தாக்குதலில் பீர் பாட்டிலால் குத்தப்பட்ட அர்ஜூனன் மற்றும் சூர்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த மதன், சவுந்தர் வல்லரசு, ஆகியோர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் காவலர்கள் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரு சமூகத்தினர் இடையில் ஏற்பட்ட இந்த மோதலில் இருவர் கொலை செய்யப்பட்ட அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பதற்றத்தை தனிக்கும் வகையில், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த கொலை, தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி சங்கர் அறிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News Update Arakkonam Youths Killed
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment