Advertisment

சென்னை வரும் சசிகலா : இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் முடக்கம்

Ilavarasi Sudhakaran Asset : விகே சசிகலா நாளை சென்னை திரும்பவுள்ள நிலையில், அவரது உறவினர் இளவரசி, மற்றும் சுதாகரன் ஆகியோரின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
சென்னை வரும் சசிகலா : இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் முடக்கம்

Ilavarasi Sudhakaran Asset : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கடந்த 2017-ம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதில் நான்கு ஆண்டுகள் தண்டனை காலத்தை நிறைவு செய்த சசிகலா கடந்த மாதம் 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து நாளை அவர் சென்னை திரும்புகிறார்.

Advertisment

தொடர்ந்து தனது தண்டனை காலத்தை முடித்த இளவரசி கடந்த 2 தினங்களுக்கு முன்பு செய்யப்பட்ட நிலையில், சுதாகரனும் விரைவில் விடுதலையாக உள்ளார்.  இந்நிலையில், இளவரசி, சுதாகரன் ஆகியோரக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் அடிப்படையில், சென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது.  இந்த சொத்தக்கள் அனைத்தும் தமிழக அரசின் சொத்துக்கள் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இந்த சொத்துக்களில் இருந்து பெறப்படும் வருவாய் தமிழ்நாடு அரசுக்கே சொந்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை டிடிகே சாலையில் ஸ்ரீராம் நகரில் உள்ள ஒரு சொத்து, வாலஸ் தோட்டத்தில் உள்ள 5 சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

publive-image

publive-image
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment