Advertisment

காவிரிக்காக உயிரையும் கொடுப்போம் என்றால் போலீஸ் பாதுகாப்பு எதற்காக? - ஸ்டாலினை வம்பிழுக்கும் தமிழிசை

காவிரிக்காக உயிரையும் கொடுப்போம் என்று போராடுபவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு எதற்காக?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காவிரிக்காக உயிரையும் கொடுப்போம் என்றால் போலீஸ் பாதுகாப்பு எதற்காக? - ஸ்டாலினை வம்பிழுக்கும் தமிழிசை

காவிரிக்காக உயிரையும் கொடுப்போம் என்று போராடுபவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு எதற்காக? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தமிழிசை செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், "உலகளவில் செல்வாக்கு பெற்றுள்ள பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் சிறுமைப்படுத்த முடியாது. பணத்திற்காக சிலர் ஹேஷ்டேக் போடுவதால் அவரின் பெருமை குறையாது. தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து நான் ஏற்கனவே அவருக்கு விளக்கியிருந்தேன். அவ்வாறு அவர் தமிழகத்தை ஒதுக்க வேண்டும் என்று நினைத்தால் வந்திருக்க மாட்டார். இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி ஏன் வர வேண்டும்? தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு வந்தார். தமிழக மக்களின் மீது அவர் தனி மரியாதை வைத்துள்ளார். அவரை யாராலும் விமர்சிக்க முடியாது.

காவிரி பிரச்னையை தீர்த்து வைக்க தவறியவர்களே இப்போது நடைபயணம் மேற்கொள்கின்றனர். காவிரிக்காக உயிரையும் கொடுப்போம் என்று தானே போராடுகிறார்கள்? அப்படியென்றால் போராட்டத்தின் போது அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு எதற்காக? அவர்களை சுற்றி தொண்டர்கள் இருக்கும்போது பாதுகாப்பு எதற்கு? தமிழகத்தில் நவீன அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். ஆனால் அதனை எதிர்க்கட்சியினர் தவறான பாதையில் எடுத்துச் செல்கின்றனர். நவீன இந்தியாவுக்காக நாங்கள் ராக்கெட்டுகளை பறக்க விடுகிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் பலூன் பறக்கவிடுகின்றனர்" எனப் பேசியுள்ளார்.

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment