Advertisment

சசிகலா புஷ்பா வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல்: அமைச்சருடன் மோதல் தான் காரணமா?

தாக்குதலில் சசிகலா புஷ்பா வீடு முழுவதும், கண்ணாடி, பூந்தொட்டிகள், சேர் என பல பொருட்கள் சேதமடைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
சசிகலா புஷ்பா வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல்: அமைச்சருடன் மோதல் தான் காரணமா?

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி சசிகலா புஷ்பா வீட்டில் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது தமிழக பா.ஜ.க.வின் துணைத்தலைவர்களின் ஒருவருமான சசிகலா புஷ்பா, தூத்தக்குடி தபால் தந்தி காலனி பகுதியில் தனது வீட்டில் வசித்து வருகிறார். இன்று அவர் கன்னியாகுமரி பகுதியில் நடைபெறும் கட்சி விழாவுக்காக சென்றுள்ளார்.

இதனிடையே அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள், வீட்டில் தாக்குதல் நடத்தியுள்ளனர். வீடு முழுவதும், கண்ணாடி, பூந்தொட்டிகள், சேர் என பல பொருட்கள் சேதமடைந்துள்ளது. தொடர்ந்து வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சசிகலா புஷ்பாவின் காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த செய்தியை கேட்டு அப்பகுதியை சேர்ந்த பா.ஜ.க.வினர் குவிந்த நிலையில், அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பா.ஜ.க.சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற சசிகலா புஷ்பா மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் பேசிய சசிகலா புஷ்பா தூத்துக்குடியை சேர்ந்த திமுக அமைச்சர் கீதா ஜீவன் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசி வருவதாகவும், அவருக்கு நாவடக்கம் தேவை என்றும் பேசியுள்ளார்.

மேலும் இதை மீறி அவர் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குறித்து அவதூறாக பேசினால் அவர் வெளியில் வருவதற்கு கால்களும் பேசுவதற்கு நாக்கும் இருக்காது என்று பேசியதாக கூறப்படும் நிலையில், சசிகலா புஷ்பாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே சசிகலா புஷ்பா வீட்டில் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பா.ஜ.க.மாநில துணைத்தலைவர் கே.நாகராஜன் தலைமையில் சென்னை காந்தி சிலை அருகில் உள்ள டி.ஜ.பி.அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக தமிழக பாஜக ஊடக பிரிவு தலைவர் பி.ஸ்ரீ.ரங்கா தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Tn Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment