தாம்பரம் அருகே பிரபல தாதா திருமணம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக எதிர் தரப்பினர் நரேஷ்பாபுவின் திருமணத்தன்று அவரை கொலை செய்ய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஆயுதங்களுடன் மாறுவேடத்தில் சுற்றி திரிந்துள்ளனர்.
சென்னை மாமல்லபுரத்தில் கொலை மிரட்டல் காரணமாக பிரபல ரவுடியின் தம்பி திருமணம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டியைச் சேர்ந்தவர் நரேஷ்பாபு (35), பிரபல ரவுடியான இவருக்கும், கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. மாமல்லபுரம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில அமைந்துள்ள லீலாவதி அரங்கத்தில் நடைபெற்ற இந்த திருமண விழாவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நரேஷ்பாவு மற்றும் அவரது சகோரர் தரப்புக்கும் எதிர் தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், எதிர்தரப்பை சேர்ந்த ஒருவரை நரேஷ்பாபு தரப்பு கடந்த மாதம் கொலை செய்துள்னர். இந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக எதிர் தரப்பினர் நரேஷ்பாபுவின் திருமணத்தன்று அவரை கொலை செய்ய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஆயுதங்களுடன் மாறுவேடத்தில் சுற்றி திரிந்துள்ளனர்.
இதனால் இந்த திருமணத்தின் போது ரவுடிகளிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி வந்ததால், திருமண மண்டபத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வரும் ஒவ்வொரு விருந்தினரையும் சோதனை செய்த போலீசார், மண்டபத்தில் யாரேனும் பதுங்கி இருக்கிறார்களா என, திருமண மண்டப அறைகள் மற்றும் விருந்தினர்கள் கொண்டு வந்த பரிசுப்பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்தனர்.
மேலும் திருமண மண்டபத்திற்குள் நுழைந்து, இசிஆர் வழியாக செல்லும் வாகனங்கள் குண்டர்களை ஏற்றிச் செல்கின்றனவா என்பதை கண்டறிய, தனிப்படை போலீசார் தடைகளை ஏற்படுத்தி சோதனை செய்தனர். இதனிடையே மாலை 7 மணிக்கு தனது ஜாகுவார் காரில் மண்டபத்திற்கு வந்த நரேஷ் பாபுவிடம் விழாவை சீக்கிரம் முடித்துவிடுமாறு போலீசார் பரிந்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்குள் திருமண விழா முடிவுக்கு வந்ததது திருமணத்தில் சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil