Advertisment

ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு : நீட் விலக்கு குறித்து பேச்சு?

Tamilnadu News Update : முக்கிய அமைச்சர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

author-image
WebDesk
New Update
ஆளுநர் ஆர்.என்.ரவி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு : நீட் விலக்கு குறித்து பேச்சு?

தமிழகத்தில் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என் ரவியை முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்துள்ளார்.

Advertisment

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை (அக்டோபர் 13) 5 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என.ரவியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி இன்று மாலை 5 மணிக்கு முக்கிய அமைச்சர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு குறித்து தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாக முதல்வர் பேசவுள்ளதாகவும், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு பல்வேறு கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆளுநருடனான முதல்வரின் இந்த சந்திப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது.

முன்னதாக கடந்த செப். 14ஆம் தமிழ்நாடு சட்டசபையில் தேதி நீட் விலக்கு கோரி சட்ட மசோதா இயற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்து  தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை மற்றும் திமுக எம்பிகள் தொடர்புடைய வழக்குகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த்து குறிப்பிடத்கதக்து.  

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment