Advertisment

கொளுத்தும் வெயில்... கடமையை விடாத கர்ப்பிணி காவலர் : கோவை மக்கள் வியப்பு

கோவையில் கர்ப்பிணி பெண் ஒருவர் வெயிலை பொருட்படுத்தாமல் சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்

author-image
WebDesk
New Update
கொளுத்தும் வெயில்... கடமையை விடாத கர்ப்பிணி காவலர் : கோவை மக்கள் வியப்பு

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்

Advertisment

வெளுத்து வாங்கும் வெயிலில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் கர்பிணி பெண் தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் பெண்காவலராக பணியாற்றிவரும் கர்பிணியான பெண் காவலர் ஒருவர் வெயிலை பொருட்படுத்தாமல் ஒண்டிப்புதூர் பகுதியில் சாலையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவரை பார்க்கும் பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர்.

அதே நேரத்தில்  அந்த பெண் காவலர் வாகனங்களில் இருந்து வரும் புகைகளின் பாதிப்பும் சாலை தூசிகளின் சுவாச பாதிப்பையும் பொருட்படுத்தாமல் வெயிலில்  பணியாற்றி வருவது காண்போரை கண்கலங்க செய்துள்ளது.

பணியின் போது உயர் காவலர்களின் அதிகார இடையூறுகளும் மற்றும்  பொதுமக்களின் வாகன ஓட்டிகளின் விதி மீறல்களில் அலட்சியங்களும் எதுவாக இருந்தாலும் என்னுடைய வேலையை நான் சரியாக செய்ய வேண்டும் என்பதற்கு இந்த கர்ப்பிணி பெண் ஓர் நல்லுதாரணமும் பாராட்டத்திற்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment