Advertisment

தமிழகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக 3,500 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு

TN Corona daily report : கொரோனாவால் நேற்று 46 பேர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் பலியோனோர் மொத்த எண்ணிக்கை 957 ஆக அதிகரித்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu coronavirus

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது. மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக, பாதிப்பு எண்ணிக்கை 3500க்கு மேல் அதிகரித்தது.

Advertisment

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசின் சுகாதாரத்துறை மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை, உயிரிழப்பு எண்ணிக்கை, குணமடைந்தோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3,645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் நேற்று 46 பேர் உயிரிழந்ததை அடுத்து கொரோனாவால் பலியோனோர் மொத்த எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது.

6 மாவட்டங்களில் 100-ஐ கடந்த பாதிப்பு

சென்னை - 1,956

செங்கல்பட்டு - 232

மதுரை - 194

திருவள்ளூர் - 177

வேலூர் - 149

சேலம் - 111

50 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு : சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 49,690 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஒரு புறம் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் கணிசமான அளவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர். தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 1358 பேர் குணமடைந்து மருத்துமனையில் இருந்து வீடு திரும்பினர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41,357 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 33,675 மாதிரிகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 10.42 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment