தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,873 பேருக்கு கொரோளா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,06,861 பேராக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில், கொரோனா தொற்றுக்கு 448 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 20,046 ஆக உயர்ந்துள்ளது.
Advertisment
மேலும் இன்று ஒரே நாளில், 25,776 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த நிலையில், மொத்த குமடைந்தோர் எண்ணிக்கை 15,02,537 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், தமிழகத்தில் 2,61,24,748 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில், அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில், 5559 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கோயம்புத்தூரில் 3165 பேருக்கும், செங்கல்பட்டில் 1954 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 1758 பேருக்கும், கன்னியாகுமரியில் 1621 பேருக்கும், திருவள்ளூரில் 1511 பேருக்கும், திருப்பூரில் 1466 பேருக்கும், திருச்சியில் 1351 பேருக்கும், விருதுநகரில் 1287 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்ட்டுள்ளது. இதில் பலி எண்ணிக்கையில் அதிகபட்சமாக சென்னையில் 86 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil