Tamilnadu News Update : இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை உட்பட தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வருவதால், தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனை மற்றும் தொடர்புத் தடயங்களை மேம்படுத்தவும், மருத்துவமனை அளவிலான தயார்நிலையை வலுப்படுத்தவும், தமிழ்நாடு சுகாதாரச் செயலர் ஜே ராதாகிருஷ்ணனிடம், மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் திடீரென அதிக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. "இந்த நோய்த்தொற்று மேலும் பரவாமல் இருப்பதையும் அல்லது தாமதமாக கண்டறியப்படுவதால் இறப்பு அதிகரிக்கும் சூழ்நிலையை அடையாமல் இருப்பதையும் உறுதிசெய்ய, இந்த சிக்கலை முன்கூட்டியே மற்றும் உடனடியாக கவனிக்க வேண்டும்,"
தமிழ்நாடு அரசு உடனடியாக ஆர்டி-பிசிஆர் மற்றும் ஆர்ஏடி இடையேயான விகிதத்தைப் பராமரிப்பதன் மூலம் கவனம் செலுத்திய முறையில் மேம்படுத்தப்பட்ட சோதனை> சார்பு-செயலில் தொடர்புத் தடமறிதல் மற்றும் நேர்மறை வழக்குகளின் தொடர்புகளின் தனிமைப்படுத்தல் அவற்றின் சோதனை கண்கானித்தல்,; நிலையான இயக்க நடைமுறைகளின்படி (SOP) கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் இடையக மண்டலங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கொரோனா தடுப்பூசி இயக்கத்தின் வேகம் மற்றும் மக்களுக்கு செலுத்துவதை அதிகரிக்கவும், வைரஸ் பரவுவதைத் தடுக்க கடுமையான மற்றும் பொருத்தமான கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் “திருமணங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள், போன்ற பல்வேறு நிகழ்வுகள் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அந்த சமீபத்திய தொற்று பாதிப்பு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். குளிர்காலம் மற்றும் சில மாநிலங்களில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், சுவாசக் கோளாறு அறிகுறிகளின் கொரோனா பரவல் ஆகியவற்றை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் நேற்று 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,46,890 ஆக உயர்ந்துள்ளது. சென்னை (397) மற்றும் அருகில் உள்ள செங்கல்பட்டு (103) மாவட்டங்களில் அதிகபட்ச பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 36,765 ஆக உயர்ந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.