கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழகத்தில் புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் திறப்புக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு அதிக வருமானம் முக்கிய அம்சங்களில் ஒன்று டாஸ்மாக். ஆண்டு முழுவதும் அதிகப்படியான வருமானத்தை கொடுத்து வரும் டாஸ் மாக் கடைகள், வழக்கமாக காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரை செயல்படும். ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக டாஸ்மாக் கடைகளின் திறப்பு 2 மணி நேரம் குறைக்கப்பட்டு பகல் 12 மணி தொடங்கி இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக சுமார் ஒருமாத காலம் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டது.
அப்போது அரசுக்கு வருமானம் இல்லை என்று ஆளுங்கட்சி சார்பில் பலவிதமான அறிக்கைகள் வெளியானது. அதனைத்து தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வழக்கம் போல டாஸ்மாக் கடைகள் செயல்பட தொடங்கியது. ஆனால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் முன்னதாக இரவு 9 மணிக்கு அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழக அரசு சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் 4 மணி நேரத்தில் முன்னதாக காலை 8 மணிக்கு தொடங்கி பகல் 12 மணிக்கு அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இவ்வளவு காலமாக 10 மணி நேரம் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் இந்த ஊரடங்கு காலத்தில் 4 மணி நேரம் மட்டுமே செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
டீக்கடைகள் 12 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கியது எப்படி என்று பல தரப்பினரும் கேள்வி எழுப்பிய நிலையில், தமிழக அரசு இந்த அதிரடி முடிவை வெளியிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil