தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ஒருபுறம் கொரோனா தடுப்பு பணிகளில் நன்மதிப்பை பெற்றாலும், ஒருபுறம் கட்சியின் சில நிர்வாகிகளால் சர்ச்சைகளும நிகழ்ந்து வருகிறது. அநத வகையில் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் திமுக பிரமுகர்கள் ஒருவர் காவல்நிலையத்தில் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த திங்கள் கிழமை (ஜூன் 14) இரவு, ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த அலங்கரிப்பாளர் எஸ்.ராஜேஷ் (33) கால்வாய் சாலை சந்திப்பில் அவரை தாக்கிவிட்டு அவரது மொபைல் போன் மற்றும் பணத்தை சில மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவருக்கு தலையில் 8 தையல் போடப்படுள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அபிராமபுரம் போலீசார் வி.சி.தோட்டத்தைச் சேர்ந்த பி.சுப்பிரமணி (25), எம்.வீரா (21), ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த ஆர் சரத்குமார் (30) ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் காவல் நிலையம் வந்த, 123 வது வார்டு திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட மூவரையும் ரிமாண்ட் செய்ய வேண்டாம் என்று என்றும் தான் ஏற்கனவே ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையரிடம் பேசிவிட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினர் இதற்கு மறுக்கவே அங்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்த இரண்டரை நிமிட வீடியோவில், ராஜேந்திரன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதையும், அதிகாரிகளை ‘மைலாப்பூர் எம்.எல்.ஏ’விடம் பேசும்படி கேட்டுக்கொள்வதையும் தெளிவாக பதிவாகியள்ளது. மேலும் இந்த வாக்குவாதத்தில், அதிகாரிகளை அச்சுறுத்திய பின்னர் ராஜேந்திரன் நிலையத்தை விட்டு வெளியேறினார் என்று ஒரு அதிகாரி கூறினார். ஆனாலும் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.
#WATCH | #DMK worker, identified as Rajendran, was caught on camera arguing with the police personnel at #Chennai Abiramapuram police station. He wanted the police to not take three men, who were arrested for robbery, into remand.#TamilNadu #tnpolice pic.twitter.com/4ZbZY2Y8ZH
— DT Next (@dt_next) June 15, 2021
தொடர்ந்து இது தொடர்பாக மற்றொரு வழக்கில், வருத்தப்படாத வாக்காளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள டிரிப்ளிகேனைச் சேர்ந்த பி விஜய குமார் (38), கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து சுயாதீனமாக போட்டியிட்ட அவர், திமுக இயக்குநரான கமராஜ் மதன் குப்பத்தில் சட்டவிரேத தண்ணீர் இணைப்பை பயன்படுத்தியதாக குறிப்பிட்டிருந்த நிலையில், இது தொடர்பாக அவரிடம் பேசிய காமராஜ், தன்னை காமராஜ் என்று அறிமுகப்படுத்தி விஜய குமாரை திட்ட தொடங்கியுள்ளார். இந்த ஆடியோ பதிவை விஜய குமார், கமிஷனர் ஷங்கர் ஜிவாலுக்கு வாட்ஸ்அப் வழியாக அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
சி.எம்.டபிள்யூ.எஸ்.எஸ்.பியின் அறிவு இல்லாமல் ஜூன் 12 ஆம் தேதி ஆரம்பத்தில் நீர் இணைப்பு வழங்கப்பட்டதாகவும், அதை அதிகாரிகளிடம் தெரிவித்த பின்னர் அது மூடப்பட்டதாகவும் அவர் கூறினார். இருப்பினும், திங்களன்று இணைப்பு வழங்குவதற்காக சாலை மீண்டும் தோண்டப்பட்டது. அதை அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, சில நிமிடங்களில் அவருக்கு காமராஜிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.