தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மணல் அள்ளட்டும் என்று அக்கட்சியில் எம்.பியும் நாமக்கல் மாவட்ட பொறுப்பாளருமான ராஜேஷ்குமார் பேசியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி பொரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் பேசும் எம்.பி ராஜேஷ்குமார், நான் ஒருத்தன் தான் கட்சிகாரங்கள கூப்பிட்டு மணல் அள்ளுங்கனு சொன்னேன். வேறு எந்த மாவட்ட செயலாளரும் கட்சிக்காரங்கள மணல் அள்ளுனு சொன்னது இல்லை. என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பாஜக கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகிறது.
தி.மு.க.வை சேர்ந்த வனிதா செங்கோட்டையன் என்பவர் ஏற்கனகே அப்பகுதியில் மணல் அள்ளி வந்ததாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு மணல் அல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,திமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவும் நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளருமான கே.பி.ராமசாமி என்பவருக்கு எம்.பி. மணல் அள்ள அனுமதி அளித்தாகவும் கூறப்படுகிறது.
இதனால் வனிதா செங்கோட்டையனுக்கும் எம்.பி. ராஜேஷ்குமாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த வீடியோ பதிவு வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே சட்டசபை தேர்தலுக்கு முன்னதான அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடம் நீங்கள் ஆற்றில் மணல் அள்ளலாம். எந்த அதிகாரியும் கேட்கமாட்டார்கள். அப்படியே கேட்டாலும் அவர்கள் அங்கே இருக்கமாட்டார்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், தற்போது திமுக எம்பியின் இந்த பேச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“