நிலத்திடி நீரை பயன்படுத்துவதற்கு பணம் வசூலிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில். தண்ணீரை தனியாருக்கு விற்பனை செய்வதற்காக மத்திய அரசு தண்ணீர் கொள்கை 2012 என்கிற அரசாணை பிறப்பித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடிவந்த நிலையில் தற்போது வீட்டுக்கு பயன்படுத்தும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு மத்திய அரசு ஜல்சக்தி துறைக்கு 3 மாதத்திற்குள்ளாக தலா ரூ.10,000 செலுத்த பணத்தை செலுத்தி தான் நிலத்தடி நீரை பயன்படுத்துகிறேன் என்பதை பதிவு செய்ய வேண்டும் என விளம்பரப்படுத்தி இருக்கிறது.
இது வன்மையாக கண்டிக்க கூடியது. இந்த நடவடிக்கை என்பது குடியரசுக்கு எதிரானது. இது தனிமனித உரிமையை பறிக்கும் செயலாகும். இதுகுறித்து தமிழக அரசு வாய்மூடி மௌனமாக இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். தமிழக அரசு இதை மூடி மறைக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
எஸ்.இர்ஷாத் அஹமது தஞ்சாவூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“