Advertisment

தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamilnadu fishermen

tamilnadu news live updates :

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

60 நாட்களுக்கு மீன்பிடித்தடைக்காலம் அமலில் இருந்த நிலையில், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் சம்பவங்கள் நடைபெறவில்லை. தடைக்காலம் முடியும் வரை காத்திருந்த இலங்கை கடற்படையினர் மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இன்று அதிகாலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள், 2 படகுகளுன் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டனர். மன்னார் முகாமுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக, கடலுக்குச் சென்ற சக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Rameswaram Srilankan Navy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment