Tamilnadu News Update : முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் இன்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பத்துறை அதிகாரிகள் சோதனை செய்திருந்த நிலையில், தற்போது இவரது தற்கொலை பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.
மாசுக்கட்டுப்பட்டு வாரியத்தின தலைவராக இருந்தவர் வெங்கடாச்சலம். இவர் தனது பதவி மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுத்த புகாரை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 24-ந் தேதி இவருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை அதிகரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் முடிவில் அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் மற்றும் நகைககள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும் இந்த சோதனையின் முடிவில் அவரது பதவியும் பறிக்கப்பட்ட நிலையில், இன்று முன்னாள் மாசுக்கட்டுப்பட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil