அன்புமணி ராமதாஸ் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உத்தரவிட்டது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட அரசின் நடவடிக்கை கண்டனம் தெரிவித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி அறிக்கை வெளியிட்டார். அதில், அமைச்சரை பாதுகாக்க காவல்துறை முயற்சிக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாசு மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரபட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி அன்புமணி ராமதாசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ், முன் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி அன்புமணி ராமதாஸ் எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்தும் உத்தரவிட்டார்.