கட்டாய ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் சட்டத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு கண்டிப்புடன் செயல்படுத்தவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம் அதிருப்தி :
ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்டை கட்டாயமாக்க கோரி சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஹெல்மெட் கட்டாயம், டூ வீலரில் பயணிக்கும் இருவருக்கும்- ஐகோர்ட் உத்தரவு குறித்த செய்திக்கு
அப்போது தமிழக அரசு தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த ஆகஸ்ட்17ஆம் தேதி வரை ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என பிறப்பித்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது என்றும் குறிப்பிட்டனர்.
ஹெல்மெட் கட்டாய சட்டம்: அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? - தமிழக அரசை கேள்வி கேட்ட ஐகோர்ட்
வாகனங்களில் பொருத்தப்படும் தேசிய கொடிக்கு சீருடையில் உள்ள காவல்துறையினர் மரியாதை செலுத்துவது இல்லை எனவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். காவல்துறையினர் ஹெல்மெட் அணிகிறார்களா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.