Advertisment

கோர்ட் வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீச்சு : கணவனை கைது செய்த போலீசார் விசாரணை

மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் சிவகுமார் தப்பிக்க முயன்ற போது வழக்கறிஞர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore

கோர்ட் வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீச்சு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே.எம்.ஒன் என்ற கோர்ட்டில் கணவன் சிவக்குமார் மறைத்து வைத்திருந்த ஆசிட் எடுத்து மனைவி கவிதா மீது வீசியதால் கவிதாவின் உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது. அருகில் இருந்த வழக்கறிஞர்கள் கவிதாவை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisment

மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் சிவகுமார் தப்பிக்க முயன்ற போது வழக்கறிஞர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த நிலையில், வாகனத்தில் உள்ளே சிவகுமாரை ஏற்ற விடாமல் தடுத்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே ஆசிட் வீசுகிறாயா என்று தாக்கம் முற்பட்டனர். இதனால் காவல்துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரபரப்பாகியது.

கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு காரணமாக மனைவி வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அப்போது நீதிமன்றத்தில் மனைவியின் அருகே அமர்ந்திருந்த கணவன் தான் மறைத்து வைத்திருந்த ஆசிடை எடுத்து மனைவி மீது தலை முதல் கால் வரை ஊற்றியுள்ளார்.

இதில் மனைவி கவிதா உடல் முழுவதும் ஆசிட் பரவியதுடன் படுகாயமடைந்த அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். கணவர் சிவகுமாரை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல்துறை துணை  ஆணையர் சந்தீஷ் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

கோவை நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீச்சால் பாதிப்படைந்த பெண்ணை நேரில் சந்தித்து பேசினேன். ஆசிட் வீச்சால் 80 சதவீத பாதிப்புடன் அந்த பெண் கவலைக்கிடமான நிலையில் உள்ளார் நீதிமன்ற வளாகத்தில் வாட்டர் பாட்டிலில் ஆசிட்டை கொண்டு வந்ததால் சந்தேகம் கொள்ள முடியவில்லை

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீதிமன்றத்தில் நிகழ்ந்த இரண்டாவது சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் ‌தீவிரப்படுத்தப்பட உள்ளன என தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment