பெண்கள் குப்புறப் படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் என மருத்துவத்திற்கு எதிரான தகவல்களை டாக்டர் ஷர்மிகா கூறிவருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியாபதி மருத்துவத்துறை இணை இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
யூடியூபில் மருத்துவ குறிப்புகளை பகிர்ந்து வருவதன் மூலம் பிரபலமானவர் சித்த மருத்துவர் டாக்டர் ஷர்மிகா. இவரை சேனலை பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர். இவர் பா.ஜ.க சிறுபான்மைப் பிரிவு செயலாளர் டெய்சியின் மகள் ஆவர்.
இதையும் படியுங்கள்: தோழியுடன் இன்பநிதி போட்டோஸ் ரிலீஸ் செய்தது அண்ணாமலை டீமா? காயத்ரி புது புகார்
இந்தநிலையில் ஷர்மிகா சமீபத்தில் அளித்த பேட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பேட்டியில் ஷர்மிகா, உடல் எடையை குறைக்க 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்துவிட்டு 3 கிலோ எடை குறைந்த பிறகு ஒரே ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டால் அதே 3 கிலோ எடை ஒரே நாளில் ஏறும் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்கள் அயோடின் உப்பை பயன்படுத்தக் கூடாது. தினமும் 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும். நம்மை விட பெரிய மிருகத்தை சாப்பிட்டால் நமக்கு ஜீரணம் ஆகாது. எனவே நம்மை விட பெரிய விலங்கான மாட்டுக் கறியை சாப்பிடக் கூடாது. குழந்தை பிறப்பது கடவுள் கிருபைதான். இதில் எந்த வித சயின்ஸும் இல்லை. கணவன் மனைவி சேர்வதால் மட்டும் குழந்தை பிறந்துவிடாது என்றும் கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், தவறான கருத்துக்களை அளிக்கும் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இணை இயக்குனர் கூறுகையில், ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவராக அவர் சமூக ஊடகங்களில் கருத்துச் சொல்ல எந்தத் தடையும் இல்லை. ஆனால், அவர் மருத்துவ விதிகளின்படி தவறான கருத்தை பரப்பக் கூடாது. அதுவும் சித்த மருத்துவத்தில் மாட்டுக் கறி மட்டுமல்ல எந்த இறைச்சியையும் சாப்பிடக் கூடாது எனக் குறிப்பிடவில்லை. யாருக்கு சத்தான உணவு தேவைப்படுகிறதோ, அவர்கள் சைவமாக இருந்தாலும் சரி அசைவமாக இருந்தாலும் சரி தங்கள் விருப்பப்படி சாப்பிடலாம். ஷர்மிகா சொல்வதில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள இது போல் பேசுகிறார். ஒரு மருத்துவர் மருத்துவ ரீதியான கருத்துக்களை மட்டுமே மக்களிடையே சொல்ல வேண்டும். மருத்துவத்திற்கு அப்பாற்பட்டு சொல்லக் கூடாது. குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் என்கிறார். இதற்கு மருத்துவ முறையில் எந்த ஆதாரமும் இல்லை.
மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக தவறான கருத்துகளை பேசும் ஷர்மிகா குறித்து பொதுமக்கள் யாராவது புகார் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் தவறான தகவல்களை நம்பி சுய மருத்துவம் செய்து கொள்வது கூடாது. அருகில் உள்ள அரசு மருத்துவர்களை நாட வேண்டும். தமிழகத்தில் 1541 இந்திய மருத்துவ முறை மையங்கள் உள்ளன. அங்குச் சென்று இலவசமான ஆலோசனைகளையும் முறையான சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
பெண்கள் குப்புறப் படுத்தால் மார்பக புற்றுநோய் வருமா? ஷர்மிகாவுக்கு இணை இயக்குனர் எச்சரிக்கை
மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக தவறான கருத்துகளை பேசும் ஷர்மிகா குறித்து பொதுமக்கள் யாராவது புகார் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் – இணை இயக்குனர்
Follow Us
பெண்கள் குப்புறப் படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் என மருத்துவத்திற்கு எதிரான தகவல்களை டாக்டர் ஷர்மிகா கூறிவருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியாபதி மருத்துவத்துறை இணை இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
யூடியூபில் மருத்துவ குறிப்புகளை பகிர்ந்து வருவதன் மூலம் பிரபலமானவர் சித்த மருத்துவர் டாக்டர் ஷர்மிகா. இவரை சேனலை பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர். இவர் பா.ஜ.க சிறுபான்மைப் பிரிவு செயலாளர் டெய்சியின் மகள் ஆவர்.
இதையும் படியுங்கள்: தோழியுடன் இன்பநிதி போட்டோஸ் ரிலீஸ் செய்தது அண்ணாமலை டீமா? காயத்ரி புது புகார்
இந்தநிலையில் ஷர்மிகா சமீபத்தில் அளித்த பேட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பேட்டியில் ஷர்மிகா, உடல் எடையை குறைக்க 10 நாட்கள் சாப்பிடாமல் இருந்துவிட்டு 3 கிலோ எடை குறைந்த பிறகு ஒரே ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டால் அதே 3 கிலோ எடை ஒரே நாளில் ஏறும் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்கள் அயோடின் உப்பை பயன்படுத்தக் கூடாது. தினமும் 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும். நம்மை விட பெரிய மிருகத்தை சாப்பிட்டால் நமக்கு ஜீரணம் ஆகாது. எனவே நம்மை விட பெரிய விலங்கான மாட்டுக் கறியை சாப்பிடக் கூடாது. குழந்தை பிறப்பது கடவுள் கிருபைதான். இதில் எந்த வித சயின்ஸும் இல்லை. கணவன் மனைவி சேர்வதால் மட்டும் குழந்தை பிறந்துவிடாது என்றும் கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கள் சர்ச்சையான நிலையில், தவறான கருத்துக்களை அளிக்கும் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இணை இயக்குனர் கூறுகையில், ஒரு தனியார் மருத்துவமனையின் மருத்துவராக அவர் சமூக ஊடகங்களில் கருத்துச் சொல்ல எந்தத் தடையும் இல்லை. ஆனால், அவர் மருத்துவ விதிகளின்படி தவறான கருத்தை பரப்பக் கூடாது. அதுவும் சித்த மருத்துவத்தில் மாட்டுக் கறி மட்டுமல்ல எந்த இறைச்சியையும் சாப்பிடக் கூடாது எனக் குறிப்பிடவில்லை. யாருக்கு சத்தான உணவு தேவைப்படுகிறதோ, அவர்கள் சைவமாக இருந்தாலும் சரி அசைவமாக இருந்தாலும் சரி தங்கள் விருப்பப்படி சாப்பிடலாம். ஷர்மிகா சொல்வதில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள இது போல் பேசுகிறார். ஒரு மருத்துவர் மருத்துவ ரீதியான கருத்துக்களை மட்டுமே மக்களிடையே சொல்ல வேண்டும். மருத்துவத்திற்கு அப்பாற்பட்டு சொல்லக் கூடாது. குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் என்கிறார். இதற்கு மருத்துவ முறையில் எந்த ஆதாரமும் இல்லை.
மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராக தவறான கருத்துகளை பேசும் ஷர்மிகா குறித்து பொதுமக்கள் யாராவது புகார் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் தவறான தகவல்களை நம்பி சுய மருத்துவம் செய்து கொள்வது கூடாது. அருகில் உள்ள அரசு மருத்துவர்களை நாட வேண்டும். தமிழகத்தில் 1541 இந்திய மருத்துவ முறை மையங்கள் உள்ளன. அங்குச் சென்று இலவசமான ஆலோசனைகளையும் முறையான சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.