Tamilnadu Local Body Election Update : தமிழகத்தில் நடப்பு ஆண்டு இறுதிக்குள் நகராட்சிக்காக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று நகராடசி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதான பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து மீதமுள்ள மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகராட்சி அமைப்புகளுக்காக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து சென்னையில் இன்று செயதியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
சென்னையில் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தின் வளர்ச்சிப்பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், தமிழக்கத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் வரும் செப்டம்பர் 15-க்குள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மகளிர் இடஒதுக்கீடு குறித்து குற்ற்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் கலைந்து நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்து முதல்வர் சட்டமன்றத்தில் அறிவிப்பார். தேர்தல் பணிகள் தொடர்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் நகராட்சி அமைப்புகளுகான தேர்தல் நடைபெறும் என்றும் அதற்கான நாங்கள் விரைவாக வேலைபார்த்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil