அதிமுக எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக, மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசியது போன்ற வீடியோ, தனியார் தொலைக்காட்சியில் நேற்று வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை நடைபெற இருக்கும் நிலையில், எதிர்கட்சிகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், நீட் தேர்வு விவகாரம், குறுவை சாகுபடி உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்கப்படுவதாகவும் தெரிகிறது.