Tamil news : தமிழக எம்.பி-க்கள் 6 பேரின் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, புதிய எம்.பி-க்கள் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்நிலையில், தேமுதிக.வுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு 'எந்த ஒப்பந்தமும் இல்லை' என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
கத்தார் நாட்டின் தலைநகரமான தோஹாவில் இன்று அமெரிக்காவிற்கும்,தலிபான் படைகளுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்படுகிறது. இந்த சமாதான உடன்படிக்கையில் இந்திய அரசின் சார்பில் இந்திய நாட்டிற்கான கத்தார் தூதுவர் கலந்து கொள்கிறார். முன்னதாக, இந்திய அரசின் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா நேற்று காபூல் விரைந்தார்.
துபாயில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்தியா விளையாடும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி," பொதுவான நாட்டில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஒரு நாள் போட்டிகள் குறித்த பெரிய ஆட்சேபனைகள் இல்லையென்றும் என்றும் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil Nadu news today updates : இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் லைவ் ப்ளாகிற்கு உங்களை வரவேற்கின்றோம். அனைத்து நிகழ்வுகளும் உடனுக்குடன் உங்கள் கையில்
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்த படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
மே மாதம் திரைக்கு வர உள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்த படக்குழு, தற்போது இரண்டாம் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் அம்மனாக தோன்றி ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார் நயன்தாரா.
And here it is ...!
Second look of #MookuthiAmman ..! 🔥🔥🔥#Nayanthara #MookuthiAmmanSL pic.twitter.com/KE82sLXE3K— RJ Balaji (@RJ_Balaji) February 29, 2020
டெல்லியில் மார்ச் 2-ம் தேதி திட்டமிட்டபடி 10 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெறும் - சிபிஎஸ்இ
* மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அனைத்து உதவிகளையும் அளிக்க காவல் துறை மற்றும் அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது - சிபிஎஸ்இ
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை அணியும், கோவா அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கோவா அணியை, 4வது இடத்தில் உள்ள சென்னை அணி வீழ்த்த, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. பயிற்சியாளராக OWEN COYLE பொறுப்பேற்ற பிறகு சென்னை அணி கடைசியாக விளையாடிய 8 போட்டிகளில், தோல்வியே தழுவாமல் விளையாடி வருகிறது குறிப்பிடத்தக்கது.
காவேரிப்பட்டணம் ஒன்றியம், என்.தட்டக்கல் கிராமத்தில், கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் மற்றும் வரலாற்று ஆய்வுக் குழுத்தலைவர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 650 ஆண்டுகளுக்கு முந்தைய ஒய்சாள மன்னர் கால கல்வெட்டு ஒன்றை, ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்தனர். இதுகுறித்து கூறிய அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், கல்வெட்டில், ஒய்சாள மன்னன் வீரராமநாதனின் ஆட்சி காலத்தில், 1287-ம் நில தானம் அளித்ததை கூறுவதாக குறிப்பிட்டார். மேலும், தட்டக்கல் என்று அழைக்கப்படும் இந்த ஊர், 650 ஆண்டுகளுக்கு முன் தத்தக்கல் என்று அழைக்கப்பட்டு வந்ததும், இக்கல்வெட்டில் தெரிய வருகிறது என அவர் கூறினார்.
சென்னை ஐஐடியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்ற உள்ள நிலையில், மாணவர்கள் கருப்பு உடை அணிந்து வர கூடாது என ஐஐடி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் அனைவரும் அடையாள அட்டை கண்டிப்பாக அணிந்து வரவேண்டும் என்றும், கருப்பு உடை அணிந்து வரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பெசன்ட் நகர் பகுதியில் நேற்று கடத்தப்பட்ட 8 மாத பெண் குழந்தை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் மீட்பு - குழந்தையை கடத்திய கும்பல் கைது
கடத்தப்பட்ட குழந்தை தமிழரசன் என்பவருக்கு ரூ. 2.25 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலம்
அடுத்த கல்வி ஆண்டு (2020-2021) முதல் அண்ணா பல்கலைக்கழகம் சீர்மிகு பல்கலைக்கழகம் என்கிற அந்தஸ்துடன் இயங்கும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இது நீடிக்கும். இந்தத் தகவலை பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களிடம் கூறினார்.
அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டியில், ‘தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்குவது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம்தான் முடிவெடுக்கும். இது கட்சியின் கொள்கை முடிவு. தனி நபர் முடிவு அல்ல’ என்றார்.
‘ரஜினி - கமல் கூட்டணி குறித்து திமுக தான் கவலைப்பட வேண்டும். அதிமுகவுக்கு கவலை இல்லை’ என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
ராஜ்யசபாவில் தமிழகப் பிரதிநிதிகளாக இருக்கும் 6 பேரின் பதவிக் காலம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. திமுக, தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில், கூட்டணி தர்மத்தை மதித்து தேமுதிகவுக்கு ஒரு உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் ,மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் பதவியை தருவதாக தேமுதிகவிடம் ஒப்பந்தம் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
உத்தர பிரேதேச மாநிலத்தில் பிரயக்ராஜ் மாவடத்தில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி சாதனங்களை விநியோகித்தார்.
மேலும், விழாவில் பேசிய நரேந்திர மோடி, " ஒரு புதிய இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு மாற்றுத் திறனுள்ள இளைஞர்களின் பங்களிப்பும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பங்களிப்பும் மிக அவசியம். தொழில்துறை, சேவைத் துறை,விளையாட்டுத் துறை போன்ற எந்த துறையாக இருந்தாலும், மாற்றுத்திறனாளிகளின் திறன்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார்.
தேசத்துரோகச் சட்டத்தைப் பற்றிய புரிந்துணர்வு மத்திய அரசைக் காட்டிலும் டெல்லி அரசுக்கு குறைவாகவே உள்ளது. கன்னையா குமார் மற்றும் பிறர் மீது ஐபிசி பிரிவு 124 ஏ மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடர வழங்கப்பட்ட அனுமதியை நான் முற்றிலும் மறுக்கிறேன் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோழிகறி உண்ணுதலால் கொரோனா வைரஸ் பரவுவதாக வந்த செய்தியை அடுத்து சந்தைகளில் கோழியின் விற்பனை கடுமையாக சரிந்தது. கோழிகறிக்கும், கொரோனா வைரஸ்க்கும் உள்ள தொடர்பை பலர் மறுத்து வருகின்றனர். இந்நிலையில், கோழிகறி பற்றிய வதந்திகளை களைய தெலுங்கானா அமைச்சர்கள் பொது மேடையில் கோழி சாப்பிட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை புழலைச் சேர்ந்த சிவமுத்து என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டவிரோத நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும் என எச்சரித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து , தமிழகம் முழுவதும் உரிமம் பெறாத 300 குடிநீர் ஆலைகளுக்கு சீல்வைக்கப்படுள்ளது.
டெல்லியில் வன்முறையில் இதவரை 42 மக்கள் பலியானார்கள். இந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்த ரஜினி, “டெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி, மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். வன்முறையை அடக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்” என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், ரஜினிகாந்த் தமிழ்நாட்டு இஸ்லாமிய தலைவர்களை விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரான அபூபக்கர் இன்று ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சிஏஏ சட்டம் குறித்த விவாதங்களை அபூபக்கூர் நடிகர் ரஜினிகாந்திடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.
கத்தார் நாட்டின் தலைநகரமான தோஹாவில் இன்று அமெரிக்காவிற்கும்,தலிபான் படைகளுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்படுகிறது. இந்த சமாதான உடன்படிக்கையில் இந்திய அரசின் சார்பில் இந்திய நாட்டிற்கான கத்தார் தூதுவர் கலந்து கொள்கிறார். முன்னதாக, இந்திய அரசின் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா நேற்று காபூல் விரைந்தார்.
தமிழக அமைச்சரவை பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் நளினி புதிய மனு தாக்கல் செய்துள்ளார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights