Advertisment

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மதிப்பெண் பட்டியல் முறைகேடு: 8 பேர் மீது வழக்கு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்தில் மதிப்பெண் பட்டியல் வழங்குதல், மாணவர் சேர்க்கை, விடைத்தாள்கள் மாயம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மதிப்பெண் பட்டியல் முறைகேடு: 8 பேர் மீது வழக்கு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மதிப்பெண் பட்டியல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்ககத்தில் மதிப்பெண் பட்டியல் வழங்குதல், மாணவர் சேர்க்கை, விடைத்தாள்கள் மாயம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன. இது தொடர்பாக மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் உட்பட பல்கலைக்கழக அலுவலர்கள் கேரளா மைய ஒருங்கிணைப்பாளர்கள் அனுப்பிய கட்டண விவரத்தை ஆய்வு செய்யாமல் மாணவர் சேர்க்கை வழங்கியது. மேலும், மதிப்பெண் பட்டியல் வழங்கியதிலும் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.:

இந்த முறைகேடு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலை நிலைக்கல்வி முன்னாள் கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், மாணவர் சேர்க்கை பிரிவு முன்னாள் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, தேர்வு பிரிவு கணினி அலுவலர் கார்த்திகை செல்வன் உள்ளிட்ட 8 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் குமரகுரு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில் முதல் குற்றவாளியான ராஜராஜன் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் மற்ற 7 பேரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment