Advertisment

ராஜ்யசபா வாய்ப்பில் திமுக பெண் பிரபலம்: யார் யாருக்கு சீட்?

Tamil News Update : மாநிலங்களவையில் காலியாக உள்ள தமிழகத்திற்காக 3 எம்பிஇடங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ராஜ்யசபா வாய்ப்பில் திமுக பெண் பிரபலம்: யார் யாருக்கு சீட்?

Tamil News Rajya Sabha MP Seat Update : தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதில் அமைச்சர்கள சிலரும் தோல்வியை தழுவிய நிலையில், மாநிலங்களவை எம்பியாக இருந்த அதிமுகவின், கே.பி.முனுசாமி, மற்றும் ஆர் வைத்தியலிங்கம் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றனர்.  இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும், தங்களது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களின் ராஜினாமா கடிதத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஏற்றுக்கொண்டார்.

Advertisment

ஏற்கனவே அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பியாக இருந்த முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் மரணமடைந்துவிட்ட நிலையில், அவரது இடத்தையும் சேர்த்து தற்போது மாநிலங்களவையில் தமிழகத்திற்கான 3 எம்பி இடங்கள் காலியாக உள்ளது.  இந்த இடங்களுக்காக தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த இடங்களை கைப்பற்றும் நோக்கில் திமுக நிர்வாகிகள் போட்டியிட்டு வருகின்றனர்.   

இதில் சட்டசபை தேர்தலுக்கு முன் அமமுகவில் இருந்து பிரிந்து திமுகவிற்கு வந்த தங்க தமிழ் செல்வன், தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இதனால்  மாநிலங்களவை நியமனத்திற்கான போட்டியாளர்களில் ஒருவராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கோவை தொண்டாமுதூர் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமனியை எதிர்த்து போட்டியிட்ட கார்த்திகேயா சிவசேனாதிபதி தோல்வியை சந்தித்தார் அவரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

ஆனால் அதே தொகுதியில் எம்எல்ஏ சீட் மறுக்கப்பட்ட திமுக மருத்துவ பிரிவு செயலாளர் டாகடர் கனிமொழி. தனக்கு சட்டசபைதோதலில் போட்டியிட  வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து தனது ஆதங்கத்தை மூத்த பெண் தலைவரிடம் வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாநிலங்களவை எம்பி பட்டியலில் இவர் இடம்பெறுவதற்கு அதிக வாயப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட சட்டசபை தேர்தலுக்கு முன்பே வாய்மொழி உறுதி கூறியதாகவும், திமுக இந்த முறைசாரா உறுதிமொழியை ஏற்று நடக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

தற்போது மாநிலங்களவையில் காலியாக உள்ள மூன்று இடங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டால் அவர்களில் ஒருவரை மாநிலங்களவைக்கு திமுக நியமிக்கும் என்று பெயர் தெரியாத நிலையில் காங்கிரஸ் மூத்த ஒருவர் கூறினார். ஆனால  மூன்று காலியிடங்களுக்கு தனித்தனியாக இரு வருட தேர்தல்களை நடத்துமாறு திமுக சில வாரங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்திடம் மனு மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Rajya Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment