Advertisment

மேகதாது திட்ட அறிக்கையை ரத்து செய்யவேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

Tamilnadu seeks rejection of mekedatu dam project report petition to SC: கர்நாடகாவின் மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் ரத்து செய்ய உத்தரவிடக்கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

author-image
WebDesk
New Update
Mekedatu, karnataka, cauvery issue

கர்நாடகத்தால் ஜனவரி 2019 இல் தாக்கல் செய்யப்பட்ட மேகதாது அணை மற்றும் குடிநீர் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை முன்மொழிவை நிராகரிக்கவும், திருப்பித் தரவும் மத்திய நீர் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு தமிழக அரசு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

Advertisment

ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெறவுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில் கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்தை சேர்க்கும் பின்னணியின் அடிப்படையில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மற்றும் அதன் ஏஜென்சிகள் மேகதாது திட்டம் தொடர்பான எந்தவொரு விண்ணப்பத்திற்கும் அனுமதி வழங்குவதை உச்ச நீதிமன்றம் தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தால் மாற்றியமைக்கப்பட்ட காவிரி நீர் தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம் மீறுவதாக தமிழக அரசு வாதிட்டது.

மேகதாது நீர்த்தேக்கத்தின் முக்கிய குறிக்கோள், தீர்ப்பாயத்தின் தீர்ப்பை மீறி, முடிந்தவரை தண்ணீரை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதற்கான ஒரு தந்திரமாகும், இதுவே கர்நாடக அரசின் நிலைப்பாடு என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளுக்கு சற்று முன்னால் மேகதாது அணையில் 67.16 டிஎம்சிஅடி நீளமுள்ள பெரிய சேமிப்பு திட்டத்திற்கு எந்த நியாயமும் இல்லை என்று கூறும் தமிழக அரசு, திட்டத்திற்கு எதிராக மத்திய அரசு ஜல் சக்தி மற்றும் மத்திய நீர் ஆணையத்திற்கு பல்வேறு கடிதங்களில் தமிழக அரசு தனது ஆட்சேபனைகளையும் பதிவு செய்துள்ளது.

மேகதாது திட்டத்தில் மொத்தம் 5,252.4 ஹெக்டேர் உள்ளடங்கியுள்ளது, அதில் 4,996 ஹெக்டேர் காவிரி வனவிலங்கு சரணாலயம், காப்புக்காடுகள் மற்றும் வருவாய் நிலங்கள் மற்றும் மீதமுள்ள 256.4 ஹெக்டேர் மற்ற கட்டுமான நடவடிக்கைகளுக்கு தேவைப்படுகிறது.

நீதிமன்றத்தால் மாற்றியமைக்கப்பட்ட தீர்ப்பாயம் வழங்கிய இறுதி தீர்ப்பை முற்றிலும் புறக்கணிப்பதாகவும், நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை மீறுவதாகவும், இதன் விளைவாக நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் குறையும், என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

மேகதாது அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, 2018 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள மனுவை மாநில அரசு நினைவுகூர்ந்தது. மேலும் 2019 ஆம் ஆண்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் அறிக்கையானது இரு மாநிலங்களுக்கு இடையே இணக்கமான தீர்வுக்குப் பிறகுதான் திட்டத்திற்கான அனுமதி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Karnataka Mekedatu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment