Advertisment

மாண்டஸ் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

மக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்றும், அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது தமிழக அரசு

author-image
WebDesk
New Update
மாண்டஸ் புயல் சென்னை அருகே கரையை கடக்கும் வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு புயலாக மாறியுள்ள நிலையில், தொடர்ந்து 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில், நடந்து வரும் இந்த புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் 550 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை நள்ளிரவு புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இதனால் பொதுக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்றும், அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு புயல் எச்சரிக்கை அதிகம் உள்ள மாவட்டங்களில் இரவு நேர பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்றும்,தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் சமயத்தில் பலத்த மழை பெய்யும் என்பதால் வட தமிழகத்திற்கு ஆரஞ்கு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே புயல் குறித்து தமிழக வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இரவு நேரத்தில் டெல்டாவிலிருந்து சென்னை வரை வட தமிழகத்தில் மழை மெதுவாகப் பெய்யும்.

சனிக்கிழமை காலை வரை சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் விழுப்புரம் (கடலோர பகுதிகள்), செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் சென்னைக்கு அருகில் (மஹாப்கள் + அல்லது - வெள்ளி இரவு முதல் சனிக்கிழமை காலை வரை தென் சென்னையிலிருந்து 50 கிமீ தொலைவில்) கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசும் மற்றும் மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசும்.

1966, 1994 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மட்டும் சென்னையின் காற்றின் வேகம் மணிக்கு 100 கிமீ வேகத்தைத் தாண்டியது. இதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கடல் மிகவும் சீற்றமாக இருக்கும், எனவே நாளை மதியம் முதல் சனிக்கிழமை காலை வரை கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்கவும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Cyclone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment