Advertisment

சொந்த வங்கிக் கணக்கில் ரூ 6 லட்சம் பெற்றார்... பா.ஜ.க ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் கைது பின்னணி

Tamilnadu News Update : கோவில்களில் நாசவேலை சம்பவம் உண்மைதான், கோபிநாத்தும் அவரது ஆதரவாளர்களும் அதற்கு மதவாத சாயம் பூச முயன்றனர்.

author-image
WebDesk
New Update
Jewellery stolen from showroom near Tambaram

தாம்பரம் அருகேயுள்ள நகைக் கடையில் திருட்டில் ஈடுபட்டவர்கள் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ஆவார்கள்.

Tamilnadu Youtuber Arrested for raise funds for temple renovation without permission : உரிய அனுமதி இல்லாமல் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை சீரமைபபதற்காக ஆன்லைனில் நிதி திரட்டிய யூ டியூபர் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய கோவில்களும், தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அரசு அதிகாரிகளிம் அனுமதி பெறாமல், இந்த கோவில்களை சீரமைப்பதற்காக நிதி திரட்டிய வலதுசாரி தமிழ் பார்வையாளர்களிடையே பிரபலமான யூடியூபர் கார்த்திக் கோபிநாத் (32) என்பவர் சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய, முதற்கட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் கோபிநாத்திடம் ஆன்லைனில் வசூலித்த பணம் தவிர அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் கிட்டத்தட்ட 6 லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்ட சில கோவில்களை சீரமைப்பதற்கும், புதுப்பிக்கவும் நிதி வசூலிப்பதாக கோபிநாத் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில் மாநிலத்தில் உள்ள கோவில்களின் பாதுகாவலரான இந்து சமய அறநிலையத்துறை {HRCE) துறைக்கு தெரியாமல் அவர் பல லட்சங்களை திரட்டியுள்ளார். இது தொடர்பாக பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள கோவில் செயல் அலுவலர் அளித்த புகாரின் பேரில், கோபிநாத் கைது செய்யப்பட்டதாக ஆவடி காவல் ஆணையர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைய பாரதம் என்ற பெயரில் யூ டியூப் சேனலை நடத்தி வரும் கோபிநாத்  மிலாப் நிதி திரட்டும் தளத்தில், அருள்மிகு மதுர காளியம்மன் கோவிலின் உபகோயில்களின் சிலைகளை புதுப்பிக்கும் போர்வையில், மனிதவள மற்றும் அறநிலையத் துறையின் அனுமதியின்றி பொதுமக்களிடம் நிதி கேட்டுள்ளார். இந்த வழியில் திரட்டிய நிதியை அவர் தனது சொந்த நோக்கத்திற்காக தவறாக பயன்படுத்தியதாக புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக் கோபிநாத் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த அப்பாவிகள் அனைவரையும் விட்டுவிட்டு நேராக வருமாறு TN Int PSY – OPS (Psychological Operations) பிரிவு மற்றும் திமுக பிரச்சார சக்திகளை கேட்டுக்கொள்கிறேன். நான் ஒரு சாதாரண மனிதனாக உங்களுக்காக காத்திருக்கிறேன்.

மிலாப்பில் கோபிநாத் உருவாக்கிய “இலவச க்ரவுட் சோர்சிங்” தளத்தில், “சிறுவாச்சூர் கோயில் திருப்பணி” என்ற பெயரில் 33.28 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கார்த்திக் கோபிநாத் நிதி கோரிய மனுவில், "சிறுவாச்சூர் கோவில் சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து வாழ்க்கை முறையை ஊக்கப்படுத்தவும், அருகிலுள்ள கோயிலுக்குச் செல்வோரின் மனதை மாற்றவும் இவ்வாறு செய்யப்படுகிறது. சிலைகளை மாற்றவும், கோயில்களை மீண்டும் கட்டவும், உள்ளூர் சமூகத்தின் ஆஸ்திக உணர்வை புதுப்பிக்கவும் உதவுவோம். நம் தர்மத்திற்காக கைகோர்ப்போம். என்று பதிவிட்டுள்ளா.

இது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நாசவேலை சம்பவம் உண்மைதான், கோபிநாத்தும் அவரது ஆதரவாளர்களும் அதற்கு மதவாத சாயம் பூச முயன்றனர். “மிஷனரிகள் மற்றும் பிற மதக் குழுக்களால் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறி, அவர்கள் பல லட்சங்கள் திரட்டினர். ஆனால் இந்த செயல்கள், ​​அது  மனநலப் பிரச்சினை உள்ள ஒருவரால் செய்யப்பட்டது.

அவர் ஒரு தெலுங்கு பிராமணர் மற்றும் ஒரு கோவில் பூசாரியின் சகோதரர். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று அந்த அதிகாரி கூறினார்.

கோபிநாத் சமீபத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலருக்கு எழுதிய கடிதத்தில், கோயில் திருப்பணிக்காக வசூலித்த பணத்தைத் தருவதாகக் கூறினார். “அரசு கோயிலின் பாதுகாவலராக இருக்கும்போது அதை கோபிநாத் தனது சொந்தக் கணக்கில் வசூலிக்கக் கூடாது என்று கூறி, செயல் அலுவலர் அதை ஏற்க மறுத்துவிட்டார்,” என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அக்டோபர் 2021 இல், கோபிநாத் தனது யூடியூப் சேனலைப் பின்தொடர்பவர்களிடமிருந்து ஒரு வாரத்தில் ரூ. 10 லட்சம் நிதி திரட்ட முயற்சித்ததாகவும் இந்த முயற்சியில் 8 மணி நேரத்தில் ரூ 15 லட்சம் நிதி திரட்டியதாகவும் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்

கோபிநாத்தின் யூடியூப் சேனலான ‘இளைய பாரதம்’ 2 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டுள்ளது. இதில் பெரும்பாலும் திமுக தலைமையிலான அரசை குறிவைத்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment