Advertisment

சென்னையில் இன்று முதல் டாஸ்மாக் திறப்பு: அரசு அறிவிப்பு

சென்னையில் இன்று ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாக அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
tasmac bar opening chennai

tasmac bar opening chennai

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக சென்னையில் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுகிறது.

Advertisment

சென்னையில் இன்று ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாக அறிவித்துள்ளது.

இது குறித்து டாஸ்மாக் நிர்வாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர மதுபான சில்லறை விற்பனை கடைகள் 07.05 முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் 18.08.2020 முதல் இயங்கும். மேலும், மால்கள் மற்றும் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Chennai Coronavirus Tasmac
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment